இறைவா நீயிங்கே வருவாயா -எனக்கு
பிறவா வரமொன்று தருவாயா
கரையினில் ஒதுங்கிய மீனினைப் போல -கதி
கலங்கி த் தவிக்கும் நிலையுமானேன் (இறைவா )
உனையே நினைந்து உருகியே கிடப்பேன் -நான்
உய்யும் வழியினை காணவே நடப்பேன்
நினையே நினைந்து நெஞ்சம் மகிழ்வேன் --என்றும்
நிலைப் படியாக நானுன் கோவிலில் கிடப்பேன் (இறைவா)
கருணை வெள்ளம் கண்களில் தெரியும் -உந்தன்
காலடி ஒன்றே என்னுள் நடக்கும்
ஒருமுறை பார்த்திட உள்ளம் களிக்கும் -தினம்
உன்பெயர் சொல்லிட என்மனம் இனிக்கும் (இறைவா)
திருவே உருவே தீந்தமிழ்ச் சுடரே -இங்கே
திருநாள் போல நீ வரும் நாள் எப்போ
உருவாய் ஒளியாய் உன்னத நிலையாய் -நீ
வருவாய் என்றே வந்தனை செய்வேன் (இறைவா)
நாவினில் இனிப்பது நமசிவாயமே -உலகில்
நான்மறை தொழுதிடும் நந்தா விளக்கே
ஆலமரத்தடியில் அமர்ந்திட்ட அண்ணலே -நினது
அருமைகள் சொன்னோம் நீயும் அகமகிழ்வாயே (இறைவா)
ஜீவன் வாழ்ந்திட சிவனே நற்கதி -சதா
சிவனை நினைந்திடில் மாறிடும் தலை விதி
பாவம் நீங்கிட பக்தரைக் காப்பாய் -தமிழில்
பணிந்தேன் தொழுதேன் பரமெனும் சிவமே (இறைவா)
பிறவா வரமொன்று தருவாயா
கரையினில் ஒதுங்கிய மீனினைப் போல -கதி
கலங்கி த் தவிக்கும் நிலையுமானேன் (இறைவா )
உனையே நினைந்து உருகியே கிடப்பேன் -நான்
உய்யும் வழியினை காணவே நடப்பேன்
நினையே நினைந்து நெஞ்சம் மகிழ்வேன் --என்றும்
நிலைப் படியாக நானுன் கோவிலில் கிடப்பேன் (இறைவா)
கருணை வெள்ளம் கண்களில் தெரியும் -உந்தன்
காலடி ஒன்றே என்னுள் நடக்கும்
ஒருமுறை பார்த்திட உள்ளம் களிக்கும் -தினம்
உன்பெயர் சொல்லிட என்மனம் இனிக்கும் (இறைவா)
திருவே உருவே தீந்தமிழ்ச் சுடரே -இங்கே
திருநாள் போல நீ வரும் நாள் எப்போ
உருவாய் ஒளியாய் உன்னத நிலையாய் -நீ
வருவாய் என்றே வந்தனை செய்வேன் (இறைவா)
நாவினில் இனிப்பது நமசிவாயமே -உலகில்
நான்மறை தொழுதிடும் நந்தா விளக்கே
ஆலமரத்தடியில் அமர்ந்திட்ட அண்ணலே -நினது
அருமைகள் சொன்னோம் நீயும் அகமகிழ்வாயே (இறைவா)
ஜீவன் வாழ்ந்திட சிவனே நற்கதி -சதா
சிவனை நினைந்திடில் மாறிடும் தலை விதி
பாவம் நீங்கிட பக்தரைக் காப்பாய் -தமிழில்
பணிந்தேன் தொழுதேன் பரமெனும் சிவமே (இறைவா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக