இரு விழி வாசல் வழியாக -உனது
இதயத்தில் நுழைந்தேன் எளிதாக
கரு விழி தன்னில் குடி புகுந்தேன் -எனது
காதலை வாடகையெனக் கொடுத்தேன்
வில்லினைப் போன்றது உன்புருவம் -நீயோ
விளைந்து கனிந்திட்ட எழிற் பருவம்
கல்லால் வடித்திட்ட சிலையோடி -உன்னை
கண்டவர் வாங்கிடா விலையோடி
கண்களால் உலகினை வளைக்கின்றாய் -யாரும்
கண்டாலோ சித்தத்தை குலைக்கின்றாய்
எண்ணவோ இனிப்பாய் இருக்கின்றாய் -தினம்
எவ்வளவோ பேர்களை வதைக்கின்றாய்
உன் பெற்றோர் செய்தது பெருங்கொடுமை -நீ
பெண்ணாகப் பிறந்ததோ பெருந்தவறு
என்னால் சொல்லிட முடியல்லியே -ஒருமுறை
இணைந்து வாழ்ந்திட வழி இல்லையே
பித்தம் பிடித்து நானும் அலையாமல் -உனது
பெருமையை சொல்லியே வாழ்வேனே
சத்தியம் இதுதான் உண்மையென -தேவி
சற்றே நினைத்திடில் போதுமடி
மெழுகாய் உருகி நான் கரைந்தாலும் -உன்
மேலுள்ள ஆசையை நான் மறவேனே
பழுதில்லா எந்தன் காதலினை -தூய
பாதத்தில் வைத்தே தினம் போற்றிடுவேன்
இதயத்தில் நுழைந்தேன் எளிதாக
கரு விழி தன்னில் குடி புகுந்தேன் -எனது
காதலை வாடகையெனக் கொடுத்தேன்
வில்லினைப் போன்றது உன்புருவம் -நீயோ
விளைந்து கனிந்திட்ட எழிற் பருவம்
கல்லால் வடித்திட்ட சிலையோடி -உன்னை
கண்டவர் வாங்கிடா விலையோடி
கண்களால் உலகினை வளைக்கின்றாய் -யாரும்
கண்டாலோ சித்தத்தை குலைக்கின்றாய்
எண்ணவோ இனிப்பாய் இருக்கின்றாய் -தினம்
எவ்வளவோ பேர்களை வதைக்கின்றாய்
உன் பெற்றோர் செய்தது பெருங்கொடுமை -நீ
பெண்ணாகப் பிறந்ததோ பெருந்தவறு
என்னால் சொல்லிட முடியல்லியே -ஒருமுறை
இணைந்து வாழ்ந்திட வழி இல்லையே
பித்தம் பிடித்து நானும் அலையாமல் -உனது
பெருமையை சொல்லியே வாழ்வேனே
சத்தியம் இதுதான் உண்மையென -தேவி
சற்றே நினைத்திடில் போதுமடி
மெழுகாய் உருகி நான் கரைந்தாலும் -உன்
மேலுள்ள ஆசையை நான் மறவேனே
பழுதில்லா எந்தன் காதலினை -தூய
பாதத்தில் வைத்தே தினம் போற்றிடுவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக