பெண்ணின் பெருமை இதுதானா -இன்று
உனது பேச்சும் செயலும் சரிதானா
கண்களை போன்றது கற்பு நெறி -வீணில்
கடைச் சரக்காவது முறை தானா
மானத் தமிழர் தம் மரபினிலே -நம்மில்
மங்கையர் திலகம் வாழ்ந்ததுண்டு
ஈனப் பொருளிற்கு ஆசைப்பட்டு -நீ
இழிவான செயல் தன்னை செய்யலாமா
வீரம் விளைக்கும் தாய் நாடு -அதில்
வேங்கையாய் வாழ்வது பண்பாடு
சோரம் போகும் நிலையானால் -நமது
சொரணை எங்கோ போய்விடுமே
மொழியைக் காத்திட உயிர் கொடுத்தார் -சிலர்
உயிருக்குப் பயந்து ஒளிந்து கொண்டார்
பழியை சுமந்தவர் பலபேர் கள் -அதை
பார்த்தும் தெளிந்திட மனமில்லையோ
கூடி வாழ்வது நன்மை என்றார் -எனோ
குறுக்கே வந்து கோடு போட்டார்
நாடி வந்தவரை இன்னுமேன் நம்பவில்லை -அவர்
நலம் பெற வழி யொன்றும் செய்யவில்லை
ஆனவரை ஏட்டிலே எழுதி வைத்தார் -அதை
அடுப்பிலே வைத்தே குளிர் காய்ந்தார்
மானமுள்ளவர் வந்திட வேண்டுமென -ஏழை யர்
மனங்களும் நாளுமே விரும்புதம்மா
உனது பேச்சும் செயலும் சரிதானா
கண்களை போன்றது கற்பு நெறி -வீணில்
கடைச் சரக்காவது முறை தானா
மானத் தமிழர் தம் மரபினிலே -நம்மில்
மங்கையர் திலகம் வாழ்ந்ததுண்டு
ஈனப் பொருளிற்கு ஆசைப்பட்டு -நீ
இழிவான செயல் தன்னை செய்யலாமா
வீரம் விளைக்கும் தாய் நாடு -அதில்
வேங்கையாய் வாழ்வது பண்பாடு
சோரம் போகும் நிலையானால் -நமது
சொரணை எங்கோ போய்விடுமே
மொழியைக் காத்திட உயிர் கொடுத்தார் -சிலர்
உயிருக்குப் பயந்து ஒளிந்து கொண்டார்
பழியை சுமந்தவர் பலபேர் கள் -அதை
பார்த்தும் தெளிந்திட மனமில்லையோ
கூடி வாழ்வது நன்மை என்றார் -எனோ
குறுக்கே வந்து கோடு போட்டார்
நாடி வந்தவரை இன்னுமேன் நம்பவில்லை -அவர்
நலம் பெற வழி யொன்றும் செய்யவில்லை
ஆனவரை ஏட்டிலே எழுதி வைத்தார் -அதை
அடுப்பிலே வைத்தே குளிர் காய்ந்தார்
மானமுள்ளவர் வந்திட வேண்டுமென -ஏழை யர்
மனங்களும் நாளுமே விரும்புதம்மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக