வெள்ளி, 13 ஏப்ரல், 2018

வீரம் 349

பெண்ணின்  பெருமை  இதுதானா -இன்று
உனது  பேச்சும்  செயலும்  சரிதானா
கண்களை  போன்றது   கற்பு நெறி -வீணில்
கடைச்   சரக்காவது  முறை தானா

மானத்  தமிழர்  தம் மரபினிலே -நம்மில்
மங்கையர்  திலகம்   வாழ்ந்ததுண்டு
ஈனப்   பொருளிற்கு  ஆசைப்பட்டு -நீ
இழிவான   செயல் தன்னை  செய்யலாமா

வீரம்   விளைக்கும்   தாய் நாடு -அதில்
வேங்கையாய்  வாழ்வது  பண்பாடு
சோரம்   போகும்  நிலையானால் -நமது
சொரணை  எங்கோ  போய்விடுமே

மொழியைக்  காத்திட  உயிர்  கொடுத்தார் -சிலர்
உயிருக்குப்  பயந்து  ஒளிந்து  கொண்டார்
பழியை  சுமந்தவர்  பலபேர் கள் -அதை
பார்த்தும்  தெளிந்திட  மனமில்லையோ

கூடி வாழ்வது  நன்மை  என்றார் -எனோ
குறுக்கே  வந்து  கோடு  போட்டார்
நாடி வந்தவரை  இன்னுமேன்  நம்பவில்லை -அவர்
நலம் பெற  வழி யொன்றும்  செய்யவில்லை

ஆனவரை ஏட்டிலே  எழுதி  வைத்தார் -அதை
அடுப்பிலே  வைத்தே குளிர்  காய்ந்தார்
மானமுள்ளவர்  வந்திட  வேண்டுமென -ஏழை யர்
மனங்களும்  நாளுமே   விரும்புதம்மா

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக