நிலவே நிலவே நில்லாயோ -நீ
நேரில் அவளைக் காண்பாயா
கலக்க வைத்திடும் எழிலுருவம் -அவள்
கண்களில் தெரியுது கொடிய விசம்
பெண்களில் தேவதை என்பார்கள் -அது
பித்தம் பிடித்தவர் சொல்லும் உரை
மண்ணில் பிறந்த தெய்வமென்பார் --அது
மடையர்கள் பரப்பிடும் செய்தியன்றோ
கண்களைக் காட்டியே வலை விரிப்பாள் -நெஞ்சில்
கருணை என்பதை மறந்திடுவாள்
உன்னையும் என்னையும் பழித்திடுவாள் -இந்த
உலகில் வீணிலே ஏனோ வாழ்கிறாள்
கவலைகள் சுமந்து தவிக்கிறேன் -அவள்
கண்ணடி பட்டதால் கலங்குகிறேன்
பொறுத்திட மனமோ நினைக்கவில்லை -அந்த
பூங்கொடி எனக்குப் பெருந் தொல்லை
சிரித்துப் பேசியே எனைக் கவிழ்த்தாள் -எனது
ஜீவனைப் பறித்துமே சென்று விட்டாள்
பறித்தது எனக்கவள் தரும் பரிசலிப்பா -நான்
படும் துயர் இன்றேனும் தீர்ந்திடுமோ
நேரில் அவளைக் காண்பாயா
கலக்க வைத்திடும் எழிலுருவம் -அவள்
கண்களில் தெரியுது கொடிய விசம்
பெண்களில் தேவதை என்பார்கள் -அது
பித்தம் பிடித்தவர் சொல்லும் உரை
மண்ணில் பிறந்த தெய்வமென்பார் --அது
மடையர்கள் பரப்பிடும் செய்தியன்றோ
கண்களைக் காட்டியே வலை விரிப்பாள் -நெஞ்சில்
கருணை என்பதை மறந்திடுவாள்
உன்னையும் என்னையும் பழித்திடுவாள் -இந்த
உலகில் வீணிலே ஏனோ வாழ்கிறாள்
கவலைகள் சுமந்து தவிக்கிறேன் -அவள்
கண்ணடி பட்டதால் கலங்குகிறேன்
பொறுத்திட மனமோ நினைக்கவில்லை -அந்த
பூங்கொடி எனக்குப் பெருந் தொல்லை
சிரித்துப் பேசியே எனைக் கவிழ்த்தாள் -எனது
ஜீவனைப் பறித்துமே சென்று விட்டாள்
பறித்தது எனக்கவள் தரும் பரிசலிப்பா -நான்
படும் துயர் இன்றேனும் தீர்ந்திடுமோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக