சனி, 28 ஏப்ரல், 2018

பரிசு 389

நிலவே  நிலவே  நில்லாயோ -நீ
நேரில்  அவளைக்  காண்பாயா
கலக்க  வைத்திடும்  எழிலுருவம் -அவள்
கண்களில்  தெரியுது  கொடிய  விசம்   

பெண்களில்  தேவதை  என்பார்கள் -அது
பித்தம்  பிடித்தவர்  சொல்லும்  உரை
மண்ணில்  பிறந்த  தெய்வமென்பார் --அது
மடையர்கள்  பரப்பிடும்  செய்தியன்றோ

கண்களைக்  காட்டியே  வலை  விரிப்பாள் -நெஞ்சில்
கருணை  என்பதை  மறந்திடுவாள்
உன்னையும்  என்னையும்  பழித்திடுவாள் -இந்த
உலகில்  வீணிலே  ஏனோ  வாழ்கிறாள்

கவலைகள்  சுமந்து  தவிக்கிறேன் -அவள்
கண்ணடி  பட்டதால்  கலங்குகிறேன்
பொறுத்திட  மனமோ  நினைக்கவில்லை -அந்த
பூங்கொடி  எனக்குப்  பெருந் தொல்லை

சிரித்துப்  பேசியே  எனைக்  கவிழ்த்தாள் -எனது
ஜீவனைப்  பறித்துமே  சென்று விட்டாள்
பறித்தது  எனக்கவள்  தரும்  பரிசலிப்பா -நான்
படும் துயர்  இன்றேனும்  தீர்ந்திடுமோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக