நிலவுப் பெண்னே நில்லடி -உன்
நினைவில் உள்ளவன் யாரடி
கலைகள் முழுவதும் கற்றவனோ -அவன்
கனிவாய் நடந்து கொள்வானோ
நீரில் இருந்து வந்தானோ -உனக்கு
நிம்மதி அதிகம் தந்தானோ
ஊரில் சிறந்த உத்தமனோ -என்றும்
உயிரையும் பரிசாய்த் தருவானோ
இரவு முழுவதும் சுகிப்பானோ -இல்லை
எங்கோ ஓடியே போவானோ
உறவைத் துணையாய் கொள்வானோ -இந்த
உலகம் மெச்சிடவே செய்வானோ
தனிமைச சிறையினில் வைப்பானோ -நித்தம்
தழுவியே இன்பம் கொடுப்பானோ
இளமை மழையினைப் பொழிவானோ -நமக்கு
ஏற்றிட்ட வகையில் நடப்பானோ
நிலமை அறிந்தே நடப்பானோ -நல்ல
நேர்வழி தன்னிலே நிலைப்பானோ
உலவிடும் காற்றிலே நுழைந்தானோ -உனது
உயிரில் உயிராய்க் கலந்தானோ
மஞ்சம் கலைந்திட நல் இரவினிலே -காதல்
மயக்கம் தீர்த்தவன் யாரடி
நெஞ்சம் திறந்து நீ சொல்லடி -எந்தன்
நிலவுப் பெண் கொஞ்சம் சொல்லடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக