வியாழன், 12 ஏப்ரல், 2018

நிலவுப் பெண்னே 344

நிலவுப்   பெண்னே   நில்லடி -உன் 
நினைவில்   உள்ளவன்   யாரடி 
கலைகள்   முழுவதும்   கற்றவனோ -அவன் 
கனிவாய்   நடந்து   கொள்வானோ 

நீரில்   இருந்து   வந்தானோ -உனக்கு 
நிம்மதி   அதிகம்   தந்தானோ 
ஊரில்   சிறந்த   உத்தமனோ -என்றும் 
உயிரையும்   பரிசாய்த்   தருவானோ 

இரவு   முழுவதும்   சுகிப்பானோ -இல்லை 
எங்கோ   ஓடியே   போவானோ 
உறவைத்   துணையாய்   கொள்வானோ -இந்த 
உலகம்    மெச்சிடவே   செய்வானோ 

தனிமைச   சிறையினில்   வைப்பானோ -நித்தம் 
தழுவியே    இன்பம்   கொடுப்பானோ 
இளமை   மழையினைப்  பொழிவானோ -நமக்கு 
ஏற்றிட்ட   வகையில்   நடப்பானோ 

நிலமை   அறிந்தே   நடப்பானோ  -நல்ல 
நேர்வழி   தன்னிலே   நிலைப்பானோ 
உலவிடும்   காற்றிலே   நுழைந்தானோ -உனது 
உயிரில்  உயிராய்க்   கலந்தானோ 

மஞ்சம்    கலைந்திட   நல் இரவினிலே -காதல் 
மயக்கம்   தீர்த்தவன்   யாரடி 
நெஞ்சம்   திறந்து  நீ  சொல்லடி -எந்தன் 
நிலவுப்   பெண்   கொஞ்சம்   சொல்லடி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக