செவ்வாய், 10 ஏப்ரல், 2018

ஆனைமுகன் 340

ஆனை முகனே   எங்கள்  அத்தன்  மகனே -நல்
மோனப்  பொருளே   மூலத் திரு  உருவே
பானை   வயிறும்   பரந்த   மார்பும்  கொண்ட நல்ல
நான் மறை  வணங்கிடும்    நாயகா   வா வா

தாயினைப்  போலவே   தாரம்  வேண்டி -அன்று
ஆற்றங்   கரைதனில்   அழகாய்   அமர்ந்தாய்
நம்பிக்கை   கொண்டு  நாடிடும்  பேர்க்கு -தன
தும்பிக்கை   நீட்டியே   துயர்கள்  களைவாய்

அவ்வை  கிழவிக்கு   அமைந்த  நற்  தோழா -அந்த
அம்மைக்கு   முதுமையை  அளித்திட்ட  சீலா
எலியின்  மீதினில்  ஏறியே யமர்ந்து -வாடும்
ஏழைகள்  ஏற்றம்    தர நீ   வா வா

சக்தியின்   மகனாய்  சாதனை  புரிந்தாய் -மனிதர்
புத்திக்குள்  நீதான்  புதுமைகள்   தந்தாய்
நித்தியம்  உன்னை  நினைப்போர்  தமக்கு -கோரிய
அத்தனை   யாவையும்  அருளிடும்  தேவனே

காதுகள்  பற்றியே   கரணம்  போட்டால் -நீ
காணலாம்   வெற்றியெனக்  கருத்துமே  சொன்னாய்
வேதப்  பொருளே  வரும்  விக்கினம்  தீர்ப்பாய் இங்கே
நாளும்   உனைநான்  நன்றியாய்   நினைப்பேன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக