ஆனை முகனே எங்கள் அத்தன் மகனே -நல்
மோனப் பொருளே மூலத் திரு உருவே
பானை வயிறும் பரந்த மார்பும் கொண்ட நல்ல
நான் மறை வணங்கிடும் நாயகா வா வா
தாயினைப் போலவே தாரம் வேண்டி -அன்று
ஆற்றங் கரைதனில் அழகாய் அமர்ந்தாய்
நம்பிக்கை கொண்டு நாடிடும் பேர்க்கு -தன
தும்பிக்கை நீட்டியே துயர்கள் களைவாய்
அவ்வை கிழவிக்கு அமைந்த நற் தோழா -அந்த
அம்மைக்கு முதுமையை அளித்திட்ட சீலா
எலியின் மீதினில் ஏறியே யமர்ந்து -வாடும்
ஏழைகள் ஏற்றம் தர நீ வா வா
சக்தியின் மகனாய் சாதனை புரிந்தாய் -மனிதர்
புத்திக்குள் நீதான் புதுமைகள் தந்தாய்
நித்தியம் உன்னை நினைப்போர் தமக்கு -கோரிய
அத்தனை யாவையும் அருளிடும் தேவனே
காதுகள் பற்றியே கரணம் போட்டால் -நீ
காணலாம் வெற்றியெனக் கருத்துமே சொன்னாய்
வேதப் பொருளே வரும் விக்கினம் தீர்ப்பாய் இங்கே
நாளும் உனைநான் நன்றியாய் நினைப்பேன்
மோனப் பொருளே மூலத் திரு உருவே
பானை வயிறும் பரந்த மார்பும் கொண்ட நல்ல
நான் மறை வணங்கிடும் நாயகா வா வா
தாயினைப் போலவே தாரம் வேண்டி -அன்று
ஆற்றங் கரைதனில் அழகாய் அமர்ந்தாய்
நம்பிக்கை கொண்டு நாடிடும் பேர்க்கு -தன
தும்பிக்கை நீட்டியே துயர்கள் களைவாய்
அவ்வை கிழவிக்கு அமைந்த நற் தோழா -அந்த
அம்மைக்கு முதுமையை அளித்திட்ட சீலா
எலியின் மீதினில் ஏறியே யமர்ந்து -வாடும்
ஏழைகள் ஏற்றம் தர நீ வா வா
சக்தியின் மகனாய் சாதனை புரிந்தாய் -மனிதர்
புத்திக்குள் நீதான் புதுமைகள் தந்தாய்
நித்தியம் உன்னை நினைப்போர் தமக்கு -கோரிய
அத்தனை யாவையும் அருளிடும் தேவனே
காதுகள் பற்றியே கரணம் போட்டால் -நீ
காணலாம் வெற்றியெனக் கருத்துமே சொன்னாய்
வேதப் பொருளே வரும் விக்கினம் தீர்ப்பாய் இங்கே
நாளும் உனைநான் நன்றியாய் நினைப்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக