திங்கள், 9 ஏப்ரல், 2018

முருகன் 337

நாளை  நடப்பதை  யார்  அறிவார் -அந்த
நாயகன்   தானே   அதை  அறிவார்
வேளை   வருமென்று  நீ காத்து இரு -கிடைத்த
வேலையை  நலமாய்   முடித்து விடு

குன்றுகள்  தோறும்   குகன்  ஆட்சி -அவன்
கோவை  இதழ்கள்   அழகிய  பொருட்காட்சி
மன்றம்  அவர்  தரும்  மணமாகும் -ஏழை யின்
மனங்களே   விரும்புகிற   இடமாகும்

முருகன்  வருவார்  மயில்  மீதில் -குற
வள்ளி  தேவ யானை  துணையோடு
திரு நாள்  அதுவே   நமக்காகும் -அவரது
திருப்புகழ்  பதிகம்  தனைப்  பாடு

திருமால்  மருகன்   அழகேசன் -திரு
செந்தூர்   உறையும்  முருகேசன்
பெறுவாய்  நல்லவோர்  எதிர் காலம் -அந்த
பெம்மான்   பழனியில்   த்வக் கோலம்

தனியாய்  முருகன்  நின்றாலும் -உலகில்
நம் தமிழைக்   காப்பான்  எந்நாளும்
இனியும்   ஒரு கணம்   தவறாதே -தமிழ்
இறைவன்   முருகனை நீ  மறவாதே  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக