நாளை நடப்பதை யார் அறிவார் -அந்த
நாயகன் தானே அதை அறிவார்
வேளை வருமென்று நீ காத்து இரு -கிடைத்த
வேலையை நலமாய் முடித்து விடு
குன்றுகள் தோறும் குகன் ஆட்சி -அவன்
கோவை இதழ்கள் அழகிய பொருட்காட்சி
மன்றம் அவர் தரும் மணமாகும் -ஏழை யின்
மனங்களே விரும்புகிற இடமாகும்
முருகன் வருவார் மயில் மீதில் -குற
வள்ளி தேவ யானை துணையோடு
திரு நாள் அதுவே நமக்காகும் -அவரது
திருப்புகழ் பதிகம் தனைப் பாடு
திருமால் மருகன் அழகேசன் -திரு
செந்தூர் உறையும் முருகேசன்
பெறுவாய் நல்லவோர் எதிர் காலம் -அந்த
பெம்மான் பழனியில் த்வக் கோலம்
தனியாய் முருகன் நின்றாலும் -உலகில்
நம் தமிழைக் காப்பான் எந்நாளும்
இனியும் ஒரு கணம் தவறாதே -தமிழ்
இறைவன் முருகனை நீ மறவாதே
நாயகன் தானே அதை அறிவார்
வேளை வருமென்று நீ காத்து இரு -கிடைத்த
வேலையை நலமாய் முடித்து விடு
குன்றுகள் தோறும் குகன் ஆட்சி -அவன்
கோவை இதழ்கள் அழகிய பொருட்காட்சி
மன்றம் அவர் தரும் மணமாகும் -ஏழை யின்
மனங்களே விரும்புகிற இடமாகும்
முருகன் வருவார் மயில் மீதில் -குற
வள்ளி தேவ யானை துணையோடு
திரு நாள் அதுவே நமக்காகும் -அவரது
திருப்புகழ் பதிகம் தனைப் பாடு
திருமால் மருகன் அழகேசன் -திரு
செந்தூர் உறையும் முருகேசன்
பெறுவாய் நல்லவோர் எதிர் காலம் -அந்த
பெம்மான் பழனியில் த்வக் கோலம்
தனியாய் முருகன் நின்றாலும் -உலகில்
நம் தமிழைக் காப்பான் எந்நாளும்
இனியும் ஒரு கணம் தவறாதே -தமிழ்
இறைவன் முருகனை நீ மறவாதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக