நீரும் நிலமும் பொதுவன்றோ -இதனை
நினைத்துப் பார்ப்பது சரியன்றோ
தானம் தந்தவர் வாழ்கின்றார் -அதனை
தடுத்தவர் ஒருநாள் அழிந்திடுவார்
வானம் தருகின்ற மழை நீரை -நீவிர்
வாரியே வழங்குதல் வேண்டாமா
வீரம் பேசி உறவு கல் கெட்டிட -விசம
வேலைகள் செய்திட வேண்டாமே
இருப்பது எல்லாம் பொதுவுடமை -என்ற
எண்ணம் வருதல் நலமன்றோ
கொடுப்பது என்பது முடிவானால் -பல
கோடி உயிர்கள் வாழுமய்யா
தாகம் தணிப்பது உம்கடமை -நீரை
தாவெனக் கேட்பது எம்மூரிமை
மேகம் பொழிந்திட்ட நீர் தருவீர் -என்றும்
மோச செயல்தனை விட்டிடுவீர்
எல்லா மக்களும் ஒன்றென்போம் -நாம்
இந்தியர் என்ரே நினைந்திடுவோம்
பொல்லாப் போக்கினை கைவிட்டு -புதிய
சரித்திரம் படைத்திட வந்திடுவீர்
நினைத்துப் பார்ப்பது சரியன்றோ
தானம் தந்தவர் வாழ்கின்றார் -அதனை
தடுத்தவர் ஒருநாள் அழிந்திடுவார்
வானம் தருகின்ற மழை நீரை -நீவிர்
வாரியே வழங்குதல் வேண்டாமா
வீரம் பேசி உறவு கல் கெட்டிட -விசம
வேலைகள் செய்திட வேண்டாமே
இருப்பது எல்லாம் பொதுவுடமை -என்ற
எண்ணம் வருதல் நலமன்றோ
கொடுப்பது என்பது முடிவானால் -பல
கோடி உயிர்கள் வாழுமய்யா
தாகம் தணிப்பது உம்கடமை -நீரை
தாவெனக் கேட்பது எம்மூரிமை
மேகம் பொழிந்திட்ட நீர் தருவீர் -என்றும்
மோச செயல்தனை விட்டிடுவீர்
எல்லா மக்களும் ஒன்றென்போம் -நாம்
இந்தியர் என்ரே நினைந்திடுவோம்
பொல்லாப் போக்கினை கைவிட்டு -புதிய
சரித்திரம் படைத்திட வந்திடுவீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக