வியாழன், 19 ஏப்ரல், 2018

காவிரி 367

நீரும்     நிலமும்     பொதுவன்றோ -இதனை
நினைத்துப்     பார்ப்பது     சரியன்றோ
தானம்     தந்தவர்    வாழ்கின்றார் -அதனை
தடுத்தவர்     ஒருநாள்     அழிந்திடுவார்

வானம்     தருகின்ற     மழை நீரை -நீவிர்
வாரியே     வழங்குதல்     வேண்டாமா
வீரம் பேசி     உறவு கல்     கெட்டிட -விசம
வேலைகள்     செய்திட     வேண்டாமே

இருப்பது     எல்லாம்     பொதுவுடமை -என்ற
எண்ணம்    வருதல்     நலமன்றோ
கொடுப்பது     என்பது     முடிவானால் -பல
கோடி     உயிர்கள்     வாழுமய்யா

தாகம்     தணிப்பது     உம்கடமை -நீரை
தாவெனக்     கேட்பது     எம்மூரிமை
மேகம்     பொழிந்திட்ட     நீர் தருவீர் -என்றும்
மோச     செயல்தனை     விட்டிடுவீர்

எல்லா     மக்களும்     ஒன்றென்போம் -நாம்
இந்தியர்     என்ரே     நினைந்திடுவோம்
பொல்லாப்    போக்கினை  கைவிட்டு -புதிய
சரித்திரம்     படைத்திட     வந்திடுவீர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக