செவ்வாய், 17 ஏப்ரல், 2018

தமிழ்க்கனி 359

உனையே    மறந்தேன்
உணர்வில்   மிதந்தேன்
இனிமேல்  மறவேன்
எனையாள்  முருகா

தனியே    சென்றாய்
தவமாய்  கனிந்தாய்
கனியால்  அன்றே
கசந்தே    பிரிந்தாய்

வானவர்   படையின்
வல்லமைத்   தலைவன்
மோனப்    பொருளின்
மூர்த்தமாய்  திகழ்பவன்

குறமகள்  வள்ளியின்
குடும்பத்  தலைவன்
மலைவாழ்  உமையின்
மகனாய்   வளர்ந்தவன்

மதுரையில்  தமிழினை
மணம்பெற  வைத்தவன்
கதியென    வந்தவர்
கலக்கம்   தீர்த்தவன்

வாழ்நாள்  முழுவதும்
வந்தனை   செய்வோம்
ஊ ழ் வினை  நீங்கவே
உன்னையே  பணிவோம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக