உனையே மறந்தேன்
உணர்வில் மிதந்தேன்
இனிமேல் மறவேன்
எனையாள் முருகா
தனியே சென்றாய்
தவமாய் கனிந்தாய்
கனியால் அன்றே
கசந்தே பிரிந்தாய்
வானவர் படையின்
வல்லமைத் தலைவன்
மோனப் பொருளின்
மூர்த்தமாய் திகழ்பவன்
குறமகள் வள்ளியின்
குடும்பத் தலைவன்
மலைவாழ் உமையின்
மகனாய் வளர்ந்தவன்
மதுரையில் தமிழினை
மணம்பெற வைத்தவன்
கதியென வந்தவர்
கலக்கம் தீர்த்தவன்
வாழ்நாள் முழுவதும்
வந்தனை செய்வோம்
ஊ ழ் வினை நீங்கவே
உன்னையே பணிவோம்
உணர்வில் மிதந்தேன்
இனிமேல் மறவேன்
எனையாள் முருகா
தனியே சென்றாய்
தவமாய் கனிந்தாய்
கனியால் அன்றே
கசந்தே பிரிந்தாய்
வானவர் படையின்
வல்லமைத் தலைவன்
மோனப் பொருளின்
மூர்த்தமாய் திகழ்பவன்
குறமகள் வள்ளியின்
குடும்பத் தலைவன்
மலைவாழ் உமையின்
மகனாய் வளர்ந்தவன்
மதுரையில் தமிழினை
மணம்பெற வைத்தவன்
கதியென வந்தவர்
கலக்கம் தீர்த்தவன்
வாழ்நாள் முழுவதும்
வந்தனை செய்வோம்
ஊ ழ் வினை நீங்கவே
உன்னையே பணிவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக