சனி, 28 ஏப்ரல், 2018

எக்காலம் 388

 கண்ணில்  வருவது  கண்ணீர்  எனில் -கொடிய
கருத்தில்  விளைவது  வெந்நீர்  அன்றோ
கண்ணியம்  மறந்து  நடக்கிறாய் -பிறர்
காசினை  உனதென  நினைக்கிறாய்

கூட்டம்  போட்டுப்   பேசுகிறாய் -மற்றவர்
குறைகளைச்  சொல்லியே  ஏசுகிறாய்
சேற்றினை  அள்ளியே  வீசுகிறாய் -உள்ள
சிறந்தவை  அனைத்தையும்  தூற்றுகிறாய்

யாரையும்  துச்சமாய்  பார்க்கிறாய் -இங்கே
எவரையும்  எதிரியாய்  நோக்குகிறாய்
ஊரையும்  பகைத்துக்  கொள்கிறாய் -வீணில்
உழன்று  தனிமையில்  தவிக்கிறாய்

இறைவன்  படைத்திட்ட  உலகமிது -இதில்
உள்ளவை  எல்லாம்  பொதுவல்லவோ
தரையினில்  வீழ்ந்த  மீன் போல -எனோ
தானே  விழுந்து  துடிக்கின்றாய்

வாழும்  காலம் மிகச் சிறிது -இதில்
வாழ்கிற  முறைகள்  மிகப் பெரிது
சூழும்  வினைகளில்  சிக்கிடாமல் -நீ
சுகமாய்  வாழ்வது  எக்காலம் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக