கண்ணில் வருவது கண்ணீர் எனில் -கொடிய
கருத்தில் விளைவது வெந்நீர் அன்றோ
கண்ணியம் மறந்து நடக்கிறாய் -பிறர்
காசினை உனதென நினைக்கிறாய்
கூட்டம் போட்டுப் பேசுகிறாய் -மற்றவர்
குறைகளைச் சொல்லியே ஏசுகிறாய்
சேற்றினை அள்ளியே வீசுகிறாய் -உள்ள
சிறந்தவை அனைத்தையும் தூற்றுகிறாய்
யாரையும் துச்சமாய் பார்க்கிறாய் -இங்கே
எவரையும் எதிரியாய் நோக்குகிறாய்
ஊரையும் பகைத்துக் கொள்கிறாய் -வீணில்
உழன்று தனிமையில் தவிக்கிறாய்
இறைவன் படைத்திட்ட உலகமிது -இதில்
உள்ளவை எல்லாம் பொதுவல்லவோ
தரையினில் வீழ்ந்த மீன் போல -எனோ
தானே விழுந்து துடிக்கின்றாய்
வாழும் காலம் மிகச் சிறிது -இதில்
வாழ்கிற முறைகள் மிகப் பெரிது
சூழும் வினைகளில் சிக்கிடாமல் -நீ
சுகமாய் வாழ்வது எக்காலம்
கருத்தில் விளைவது வெந்நீர் அன்றோ
கண்ணியம் மறந்து நடக்கிறாய் -பிறர்
காசினை உனதென நினைக்கிறாய்
கூட்டம் போட்டுப் பேசுகிறாய் -மற்றவர்
குறைகளைச் சொல்லியே ஏசுகிறாய்
சேற்றினை அள்ளியே வீசுகிறாய் -உள்ள
சிறந்தவை அனைத்தையும் தூற்றுகிறாய்
யாரையும் துச்சமாய் பார்க்கிறாய் -இங்கே
எவரையும் எதிரியாய் நோக்குகிறாய்
ஊரையும் பகைத்துக் கொள்கிறாய் -வீணில்
உழன்று தனிமையில் தவிக்கிறாய்
இறைவன் படைத்திட்ட உலகமிது -இதில்
உள்ளவை எல்லாம் பொதுவல்லவோ
தரையினில் வீழ்ந்த மீன் போல -எனோ
தானே விழுந்து துடிக்கின்றாய்
வாழும் காலம் மிகச் சிறிது -இதில்
வாழ்கிற முறைகள் மிகப் பெரிது
சூழும் வினைகளில் சிக்கிடாமல் -நீ
சுகமாய் வாழ்வது எக்காலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக