செவ்வாய், 3 ஏப்ரல், 2018

காக்க வருக -325

திரு விளக்கு   ஏற்றி  வைத்தேன் -உலகில்
எந்தன்   தெய்வம்   நீயம்மா 
தெண்டனிட்டு  நான்  வணங்குகிறேன் -என்னை 
சற்று   திரும்பி   பாரம்மா 

மாடு மனை   சிறக்க  வேண்டும்  மங்கலமாக -இந்த 
மண்டலமே   செழித்து  மகிழ்ச்சி  என்றாக 
நாடி வந்தோர்  குறைகள்  எல்லாம்  தீர வேண்டுமே -இள 
மங்கையர்கள்   மகிழ  மணம்  முடிக்க  வேண்டுமே 

உழவர்  இல்லம்  உன்னதமாய்  செழிக்க  வேண்டுமே -வயலில் 
உழைத்ததற்கு   நல்ல   பலன்  கிடைக்க  வேண்டுமே 
கலைகள்  எல்லாம்  நாட்டினிலே  வளர  வேண்டுமே -நீ 
கண்ணசைத்தால்  கவலை  எல்லாம்  பறந்து  போகுமே 

மங்கையர்கள்  சமஉரிமை  பெற்றிட  வேண்டும் -பெண்கள் 
மண வாழ்வில்  மங்களமும்  நிலைக்க  வேண்டுமே 
பொங்கு  தமிழ்  உலகமெலாம்  ஆளவேண்டுமே -என்றும் 
பூவுலகில்   மும்மாரி   பொழிந்திட  வேண்டும் 

வரம் தருவாய்   என்று எண்ணி  உன் வாசல்  நிற்கிறேன் -உனது 
வற்றாத  கருணை   எண்ணி  மனமும்  மகிழ்கிறேன் 
திறந்திடுவாய்  மனக்கதவை  திரும்ப  சொல்கிறேன் -இந்திய 
தேசமதைக்   காக்க  வருக   தினமும்  அழைக்கிறேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக