செவ்வாய், 1 மே, 2018

தோழன் 401

 மயில் மேல்   ஏறி  முருகா  வருவாய் -எங்கள்
மனக்குறை  நீங்கிட   வரமே  தருவாய்
புவியோர்  தொழுதால்  புனிதம்  அடைவார் -நாளும்
புலம்பும்   அடியார்  நலங்கள்  பெறவே (மயில் )

அழகு  என்பதே  முருகன்  ஆகும் --அவனை
அழைத்தால்  அன்றே  இன்னல்  விலகும்
உலகம்  முழுதும்   அவனது  ஆட்சி --அதை
உணர்ந்தவர்க்  கில்லையே  வாழ்வினில்  வீழ்ச்சி (மயில்)

ஆனை முகனுக்கு  நீயோ  அழகிய  தம்பி -உந்தன்
அருமை  வள்ளிக்கோ  துணை  நின்ற  தோழன்
மோனைப்  பொருளே  மோட்சமும்  நீயே --வரும்
மோகம்  தீர்க்கும்   தவ சீலன்  முருகனே  (மயில் )

துணைவியர்  சூழ்ந்திட  நற்துணைவனாய்  வருவான் --என்றும்
துன்பங்கள்  போக்கியே  சுகங்கள்  தருவான்
நினைத்தவர்  நெஞ்சில்  நிலையாய்  இருப்பான் --நமக்கு
நிம்மதி  என்பதை  அள்ளியே  கொடுப்பான் (மயில் )

சரணம்  சொன்னால்  சடுதியில்  வருவான் --சிவ
சண்முகன்  கந்தன்  சரவணன்  குகனே
இன்றே  தொழுவோம்  எல்லாம்  பெறுவோம் -நம்
இறைவன்  முருகனை  என்றுமே  துதிப்போம் (மயில் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக