மயில் மேல் ஏறி முருகா வருவாய் -எங்கள்
மனக்குறை நீங்கிட வரமே தருவாய்
புவியோர் தொழுதால் புனிதம் அடைவார் -நாளும்
புலம்பும் அடியார் நலங்கள் பெறவே (மயில் )
அழகு என்பதே முருகன் ஆகும் --அவனை
அழைத்தால் அன்றே இன்னல் விலகும்
உலகம் முழுதும் அவனது ஆட்சி --அதை
உணர்ந்தவர்க் கில்லையே வாழ்வினில் வீழ்ச்சி (மயில்)
ஆனை முகனுக்கு நீயோ அழகிய தம்பி -உந்தன்
அருமை வள்ளிக்கோ துணை நின்ற தோழன்
மோனைப் பொருளே மோட்சமும் நீயே --வரும்
மோகம் தீர்க்கும் தவ சீலன் முருகனே (மயில் )
துணைவியர் சூழ்ந்திட நற்துணைவனாய் வருவான் --என்றும்
துன்பங்கள் போக்கியே சுகங்கள் தருவான்
நினைத்தவர் நெஞ்சில் நிலையாய் இருப்பான் --நமக்கு
நிம்மதி என்பதை அள்ளியே கொடுப்பான் (மயில் )
சரணம் சொன்னால் சடுதியில் வருவான் --சிவ
சண்முகன் கந்தன் சரவணன் குகனே
இன்றே தொழுவோம் எல்லாம் பெறுவோம் -நம்
இறைவன் முருகனை என்றுமே துதிப்போம் (மயில் )
மனக்குறை நீங்கிட வரமே தருவாய்
புவியோர் தொழுதால் புனிதம் அடைவார் -நாளும்
புலம்பும் அடியார் நலங்கள் பெறவே (மயில் )
அழகு என்பதே முருகன் ஆகும் --அவனை
அழைத்தால் அன்றே இன்னல் விலகும்
உலகம் முழுதும் அவனது ஆட்சி --அதை
உணர்ந்தவர்க் கில்லையே வாழ்வினில் வீழ்ச்சி (மயில்)
ஆனை முகனுக்கு நீயோ அழகிய தம்பி -உந்தன்
அருமை வள்ளிக்கோ துணை நின்ற தோழன்
மோனைப் பொருளே மோட்சமும் நீயே --வரும்
மோகம் தீர்க்கும் தவ சீலன் முருகனே (மயில் )
துணைவியர் சூழ்ந்திட நற்துணைவனாய் வருவான் --என்றும்
துன்பங்கள் போக்கியே சுகங்கள் தருவான்
நினைத்தவர் நெஞ்சில் நிலையாய் இருப்பான் --நமக்கு
நிம்மதி என்பதை அள்ளியே கொடுப்பான் (மயில் )
சரணம் சொன்னால் சடுதியில் வருவான் --சிவ
சண்முகன் கந்தன் சரவணன் குகனே
இன்றே தொழுவோம் எல்லாம் பெறுவோம் -நம்
இறைவன் முருகனை என்றுமே துதிப்போம் (மயில் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக