வெள்ளி, 11 மே, 2018

கருணைக் கடல் 431

                       பல்லவி
கண் பார்  இனியே   எங்கள்  கயிலை  வாசா --நாங்கள் 
கதி பெற    அருள்  புரி   கருணை நேசா   (கண் பார் )
                       அனுபல்லவி 
எந்நாளும்  உனையே   எண்ணித்   துதிப்போம் --வரும் 
இன்னல்கள்  தீரவே   என்றும்   நினைப்போம்  (கண்பார் )
                      சரணங்கள் 
கன்னல்  தமிழே   கலைகளின்   வடிவே --உன்மனம் 
கனிவதனாலே   நற்கதி   பெறும்   உலகே 
அண்ணல்  நீயே   என்  அப்பனும்  நீயே  --தினம் 
அடியவர்   தொழுதிடல்  அடைக்கலம்  தாயே   (கண்பார்)

புலித்தோல்   அணிந்துமே   புன்னகை  புரிவாய் --இந்த 
பூமியில்   உள்ளோர்    புத்துயிர்   பெறுவார் 
காலத்தை   வென்றிட்ட   காவியத்  தலைவா  --உனது 
காலடி   பணிந்தோம்  நீயும்  கண்   மலர்வாயே  (கணபார் )

கையினில்   சூலம்   உனது  கண்களோ   ஆழம்  --சிரசில் 
கங்கை  தனையே   காத்திடும்   கோலம் 
அய்யனை  நினைத்தால்  வருவது  ஆனந்த  கீதம் --நாங்கள் 
அனுதினம்  கேட்பது   உனது   அருளெனும்   நாதம்  (கண் பார் )

இறவா    வரமதை    இன்றே   தருவாய் --உன் 
இணையடி  தனிலே   எங்களுக்கு  இடமும்  வேண்டும் 
கரையா   நெஞ்சமும்  கதி  பெற க்  கூடுமே --எங்கள் 
கருணைக்  கடலே  உமது  கண்கள்  திறவாய்  (கண் பார் )             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக