பல்லவி
கண் பார் இனியே எங்கள் கயிலை வாசா --நாங்கள்
கதி பெற அருள் புரி கருணை நேசா (கண் பார் )
அனுபல்லவி
எந்நாளும் உனையே எண்ணித் துதிப்போம் --வரும்
இன்னல்கள் தீரவே என்றும் நினைப்போம் (கண்பார் )
சரணங்கள்
கன்னல் தமிழே கலைகளின் வடிவே --உன்மனம்
கனிவதனாலே நற்கதி பெறும் உலகே
அண்ணல் நீயே என் அப்பனும் நீயே --தினம்
அடியவர் தொழுதிடல் அடைக்கலம் தாயே (கண்பார்)
புலித்தோல் அணிந்துமே புன்னகை புரிவாய் --இந்த
பூமியில் உள்ளோர் புத்துயிர் பெறுவார்
காலத்தை வென்றிட்ட காவியத் தலைவா --உனது
காலடி பணிந்தோம் நீயும் கண் மலர்வாயே (கணபார் )
கையினில் சூலம் உனது கண்களோ ஆழம் --சிரசில்
கங்கை தனையே காத்திடும் கோலம்
அய்யனை நினைத்தால் வருவது ஆனந்த கீதம் --நாங்கள்
அனுதினம் கேட்பது உனது அருளெனும் நாதம் (கண் பார் )
இறவா வரமதை இன்றே தருவாய் --உன்
இணையடி தனிலே எங்களுக்கு இடமும் வேண்டும்
கரையா நெஞ்சமும் கதி பெற க் கூடுமே --எங்கள்
கருணைக் கடலே உமது கண்கள் திறவாய் (கண் பார் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக