கலையின் வடிவமே என் கண்ணன் என்பேன் --அவன்
காதல் கலையினில் மன்னன் என்பேன்
நிலையில்லாத மனதினை எனக்குத் தந்தான் --தன்னை
நினைக்கவிட்டு எங்கோ பிரிந்து சென்றான்
காலை மாலை என்று கணக்கேயில்லை --இளம்
கன்னி மனதில் அவனது ராஸலீலை
பாலினைக் குடிக்கும் பூனையைப் போலே --அவன்
பறந்து எங்கோ எனோ சென்று விட்டான்
கண்கள் மயங்கி எனக்கு காதல் சுரம் -எந்தன்
கண்ணா உனைக் கண்டாலே ஆசை வரும்
பெண்களின் மனதும் இன்னும் புரியலையோ --நான்
புலம்புவது உனது காதில் கேட்கலையோ
உணவும் நீரும் மறந்து போனேன் --உனது
நினைவில் தினம் வெதும்பிப் போனேன்
கனவாய் என்வாழ்வும் மாறிப் போச்சே --என்மேல்
கருணை காட்டிட நல்ல மனம் இல்லையோ
கண்களை மூடினால் கனவுகள் வருமே --உனது
காதல் பாடம் மட்டும் நினைவு தருமே
என்னில் பாதியும் நீயே அன்றோ -இதனை
மறந்து என்னையே தவிக்க வைத்தாய்
ஐந்து காலங்கள் உனக்குப் பூஜை --என்
அன்பே எனக்கு உன்மேல் ஆசை
நைந்து நைந்து நானும் நூலாகினேன் --இது
நியாயம் தானா கண்ணா நீயே சொல்லு
காதல் கலையினில் மன்னன் என்பேன்
நிலையில்லாத மனதினை எனக்குத் தந்தான் --தன்னை
நினைக்கவிட்டு எங்கோ பிரிந்து சென்றான்
காலை மாலை என்று கணக்கேயில்லை --இளம்
கன்னி மனதில் அவனது ராஸலீலை
பாலினைக் குடிக்கும் பூனையைப் போலே --அவன்
பறந்து எங்கோ எனோ சென்று விட்டான்
கண்கள் மயங்கி எனக்கு காதல் சுரம் -எந்தன்
கண்ணா உனைக் கண்டாலே ஆசை வரும்
பெண்களின் மனதும் இன்னும் புரியலையோ --நான்
புலம்புவது உனது காதில் கேட்கலையோ
உணவும் நீரும் மறந்து போனேன் --உனது
நினைவில் தினம் வெதும்பிப் போனேன்
கனவாய் என்வாழ்வும் மாறிப் போச்சே --என்மேல்
கருணை காட்டிட நல்ல மனம் இல்லையோ
கண்களை மூடினால் கனவுகள் வருமே --உனது
காதல் பாடம் மட்டும் நினைவு தருமே
என்னில் பாதியும் நீயே அன்றோ -இதனை
மறந்து என்னையே தவிக்க வைத்தாய்
ஐந்து காலங்கள் உனக்குப் பூஜை --என்
அன்பே எனக்கு உன்மேல் ஆசை
நைந்து நைந்து நானும் நூலாகினேன் --இது
நியாயம் தானா கண்ணா நீயே சொல்லு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக