பல்லவி
சிவபாலா சீலா எங்கள் திருவே வருக --தினமும்
தொழுவோம் உனை நாம் மறவோம் (சிவ)
அனுபல்லவி
புவி வாழ் மாந்தர்கள் என்றும் புனிதம் பெறவே --உன்னை
புரிந்தவர் வாழ்வில் அருளினை வழங்கிடும் (சிவ )
சரணங்கள்
தனியாய் நின்றே நம் தமிழினைக் காத்தாய் --திருத்தணிகை
மலையினை நீ வாழும் தலமாய்க் கொண்டாய்
கனிவாய் வந்தே கருணை புரிந்தாய் --எங்கள்
கதிர் காமத்திலே அடியவர் கண்களில் நிறைந்தாய் (சிவ )
வறியோர் வாழ்ந்திட நல்வரமும் கொடுப்பாய் -=என்றும்
வற்றாத பொய்கை குளத்தினில் மலர்ந்தாய்
அறிந்தார் தமக்கே அமுதமாய் இனிப்பாய் --அவர்
அகமே மகிழவே நற்துணையாய் வருவாய் (சிவ )
இரு மாதர் புடை சூழ எழிலாய் வருவாய் --நாங்கள்
இக பரம் பெறவே இனிதே அருள்வாய்
உருவே உயிரே எங்கள் ஒப்பிலா மணியே --இங்கு
உமையே மறவோம் உழைத்தே உயர்வோம் (சிவ )
தாயினை மறந்தவர் தண்டனை பெறுவார் --நீர்
தன்னருள் பொழிந்திட தகுதிகள் உயரும்
மாயையை அகற்றிடும் மணிவேல் முருகா --எம்
மனதினில் நினைத்தோம் மயில் மேல் வருகவே சிவ )
சிவபாலா சீலா எங்கள் திருவே வருக --தினமும்
தொழுவோம் உனை நாம் மறவோம் (சிவ)
அனுபல்லவி
புவி வாழ் மாந்தர்கள் என்றும் புனிதம் பெறவே --உன்னை
புரிந்தவர் வாழ்வில் அருளினை வழங்கிடும் (சிவ )
சரணங்கள்
தனியாய் நின்றே நம் தமிழினைக் காத்தாய் --திருத்தணிகை
மலையினை நீ வாழும் தலமாய்க் கொண்டாய்
கனிவாய் வந்தே கருணை புரிந்தாய் --எங்கள்
கதிர் காமத்திலே அடியவர் கண்களில் நிறைந்தாய் (சிவ )
வறியோர் வாழ்ந்திட நல்வரமும் கொடுப்பாய் -=என்றும்
வற்றாத பொய்கை குளத்தினில் மலர்ந்தாய்
அறிந்தார் தமக்கே அமுதமாய் இனிப்பாய் --அவர்
அகமே மகிழவே நற்துணையாய் வருவாய் (சிவ )
இரு மாதர் புடை சூழ எழிலாய் வருவாய் --நாங்கள்
இக பரம் பெறவே இனிதே அருள்வாய்
உருவே உயிரே எங்கள் ஒப்பிலா மணியே --இங்கு
உமையே மறவோம் உழைத்தே உயர்வோம் (சிவ )
தாயினை மறந்தவர் தண்டனை பெறுவார் --நீர்
தன்னருள் பொழிந்திட தகுதிகள் உயரும்
மாயையை அகற்றிடும் மணிவேல் முருகா --எம்
மனதினில் நினைத்தோம் மயில் மேல் வருகவே சிவ )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக