செவ்வாய், 8 மே, 2018

மணிவேல் 424

                   பல்லவி
சிவபாலா   சீலா  எங்கள்  திருவே  வருக --தினமும்
தொழுவோம்    உனை  நாம்  மறவோம்  (சிவ)
                   அனுபல்லவி
புவி  வாழ்  மாந்தர்கள்  என்றும்  புனிதம்  பெறவே --உன்னை
புரிந்தவர்  வாழ்வில்   அருளினை  வழங்கிடும்  (சிவ )
                    சரணங்கள்
தனியாய்  நின்றே   நம் தமிழினைக்  காத்தாய் --திருத்தணிகை
மலையினை  நீ  வாழும்  தலமாய்க்   கொண்டாய்
கனிவாய்   வந்தே  கருணை  புரிந்தாய் --எங்கள்
கதிர் காமத்திலே  அடியவர்  கண்களில்  நிறைந்தாய்  (சிவ )

வறியோர்   வாழ்ந்திட  நல்வரமும்  கொடுப்பாய்  -=என்றும்
வற்றாத  பொய்கை   குளத்தினில்   மலர்ந்தாய்
அறிந்தார்  தமக்கே   அமுதமாய்  இனிப்பாய்  --அவர்
அகமே  மகிழவே  நற்துணையாய்  வருவாய்  (சிவ )

இரு  மாதர்  புடை சூழ  எழிலாய்  வருவாய்  --நாங்கள்
இக பரம்  பெறவே  இனிதே  அருள்வாய்
உருவே  உயிரே  எங்கள்  ஒப்பிலா  மணியே  --இங்கு
உமையே  மறவோம்  உழைத்தே  உயர்வோம்  (சிவ )

தாயினை  மறந்தவர்  தண்டனை  பெறுவார் --நீர்
தன்னருள்  பொழிந்திட தகுதிகள்  உயரும்
மாயையை  அகற்றிடும்  மணிவேல்  முருகா --எம்
மனதினில்   நினைத்தோம்  மயில் மேல்  வருகவே  சிவ )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக