பல்லவி
எமையாளும் ஈசா இனிய கயிலை வாசா --என்றும்
துணையாக வருவாய் துதிப்போமே நாளும் (எமையாளும் )
அனுபல்லவி
நினைத்தோர் முன்னே நீயன்றோ வருவாய் --உன்னை
நினையாத பேர்க்கும் நீ யருள் செய்வாய் (எமையாளும் )
சரணங்கள்
வினைகளைப் போக்கி வாழ்வினில் வெற்றிகள் தருவாய் --நீ
விண்ணில் இருந்தே மண்ணகம் காப்பாய்
கணமேனும் நினைத்தாலோ கவலைகள் மறையும் --உமது
கருணையினால் அன்றோ வரும் கஷ்டங்கள் குறையும் (எமையாளும் )
தினம் உன்னை நினைத்து தேவாரம் படிப்போம் --வாழ்வில்
தீமைகள் புரிந்தோரை திருந்தவும் வைப்போம்
மனமெனும் கோவிலில் உன்னையே தொழுவோம் --எங்கள்
மகராசன் குணநேசன் மகாதேவன் நீயே (எமையாளும் )
குணமெனும் குன்றேறி குவலயம் காப்பாய் --பல
குடும்பங்கள் நலம் காண நன்மைகள் செய்வாய்
வரகுண பாண்டிக்கு சிவலோகம் காட்டி --இங்கு
வற்றாத வைகை நதி வந்திடச் செய்தாய் (எமையாளும் )
நினையே நினைந்தவர்க்கு நிச்சயம் முக்தி --எங்கள்
நிர்மலனே நேசனே நின்மேல் தான் பக்தி
கனவிலே வந்தாலும் கைகூப்பித் தொழுவோம் --உந்தன்
காலடி பற்றியே காலத்தை வெல்வோம் (எமையாளும் )
எமையாளும் ஈசா இனிய கயிலை வாசா --என்றும்
துணையாக வருவாய் துதிப்போமே நாளும் (எமையாளும் )
அனுபல்லவி
நினைத்தோர் முன்னே நீயன்றோ வருவாய் --உன்னை
நினையாத பேர்க்கும் நீ யருள் செய்வாய் (எமையாளும் )
சரணங்கள்
வினைகளைப் போக்கி வாழ்வினில் வெற்றிகள் தருவாய் --நீ
விண்ணில் இருந்தே மண்ணகம் காப்பாய்
கணமேனும் நினைத்தாலோ கவலைகள் மறையும் --உமது
கருணையினால் அன்றோ வரும் கஷ்டங்கள் குறையும் (எமையாளும் )
தினம் உன்னை நினைத்து தேவாரம் படிப்போம் --வாழ்வில்
தீமைகள் புரிந்தோரை திருந்தவும் வைப்போம்
மனமெனும் கோவிலில் உன்னையே தொழுவோம் --எங்கள்
மகராசன் குணநேசன் மகாதேவன் நீயே (எமையாளும் )
குணமெனும் குன்றேறி குவலயம் காப்பாய் --பல
குடும்பங்கள் நலம் காண நன்மைகள் செய்வாய்
வரகுண பாண்டிக்கு சிவலோகம் காட்டி --இங்கு
வற்றாத வைகை நதி வந்திடச் செய்தாய் (எமையாளும் )
நினையே நினைந்தவர்க்கு நிச்சயம் முக்தி --எங்கள்
நிர்மலனே நேசனே நின்மேல் தான் பக்தி
கனவிலே வந்தாலும் கைகூப்பித் தொழுவோம் --உந்தன்
காலடி பற்றியே காலத்தை வெல்வோம் (எமையாளும் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக