புதன், 30 மே, 2018

சிவம் 462

                           பல்லவி
எமையாளும்  ஈசா   இனிய  கயிலை  வாசா --என்றும்
துணையாக  வருவாய்  துதிப்போமே  நாளும்  (எமையாளும் )
                           அனுபல்லவி
நினைத்தோர்  முன்னே  நீயன்றோ  வருவாய் --உன்னை
நினையாத   பேர்க்கும்   நீ யருள்  செய்வாய்  (எமையாளும் )
                           சரணங்கள்
வினைகளைப்  போக்கி வாழ்வினில்  வெற்றிகள்  தருவாய் --நீ
விண்ணில்  இருந்தே  மண்ணகம்  காப்பாய்
கணமேனும்  நினைத்தாலோ  கவலைகள்  மறையும் --உமது
கருணையினால்  அன்றோ  வரும்  கஷ்டங்கள்  குறையும்  (எமையாளும் )

தினம்  உன்னை  நினைத்து   தேவாரம்  படிப்போம் --வாழ்வில்
தீமைகள்  புரிந்தோரை  திருந்தவும்  வைப்போம்
மனமெனும்  கோவிலில்  உன்னையே  தொழுவோம் --எங்கள்
மகராசன்   குணநேசன்   மகாதேவன்  நீயே     (எமையாளும் )

குணமெனும்  குன்றேறி  குவலயம்  காப்பாய் --பல
குடும்பங்கள்  நலம்  காண நன்மைகள்  செய்வாய்
வரகுண  பாண்டிக்கு  சிவலோகம்  காட்டி --இங்கு
வற்றாத  வைகை  நதி  வந்திடச்  செய்தாய்   (எமையாளும் )

நினையே   நினைந்தவர்க்கு  நிச்சயம்   முக்தி --எங்கள்
நிர்மலனே  நேசனே  நின்மேல்  தான்  பக்தி
கனவிலே  வந்தாலும்  கைகூப்பித்  தொழுவோம் --உந்தன்
காலடி  பற்றியே   காலத்தை   வெல்வோம்  (எமையாளும் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக