திங்கள், 21 மே, 2018

சிங்காரா 449

 சிங்காரா  சிங்கம்  போல  வந்தாயே  சிங்காரா --என்
சிந்தை  அணுவில்  ஒன்றாய்  நிறைந்த  சிங்காரா
பொங்கும்  இளமை  பொழியும்   சிங்காரா --என்னை
புரிந்தே  அணைத்து  சுகம்  தந்திட  வாயேன்  சிங்காரா

இரவில்  பலநாள்  ஒன்றாய்  இருப்போம் --நம்
இதழுடன்  இதழ்  சேர்த்தே  நல்லின்பம்  காண்போம்
உருவாகும்  பேரின்பம் புது உலகம்  செல்வோம் --அங்கு
உன்னுடன்  நானுமே  ஒன்றாகி  மகிழ்வோம்

விடியாத பொழுது  நமக்காக  வேண்டும் -உன்
விரல்  மீட்டும்  புது வீணை  சுக ராகம்  மீட்டும்
காமனின் அம்புகள்  கன்னிஎன்னை  வாட்டும் -என்
கண்ணாளா  உன் மார்பில்  நான்  துயில  வேண்டும்

கண்ணுக்குள்  கண்ணாகி  காதலை  வளர்த்தாய் --என்
கட்டழகை  சுவைத்து  காதல்  ரசம்  குடித்தாய்
விண்ணுக்கும்  மண்ணுக்கும்  விளங்காத  புதுமை --நீ
விரும்பிடும்  போது  நான்   உன்  கையில்  பொம்மை

உறவுக்குள்  ஒன்றாகி   உயிரினில்  கலந்தாய் --புதிய
உறவால்  கரு  ஒன்று  இனி  உருவாக  வேண்டும்
பிறவிகள்  ஏழிலும்  நாம்  பிறந்திட  வேண்டும் --என்
பேரழகா  உனக்கு  மட்டும் நானே  பெண்ணாக  வேண்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக