கதைகள் சொல்லி கண்ணால் வளைத்தாய் --மனதில்
காதல் பயிரை வளர்ந்திட வைத்தாய்
இதயம் முழுதும் நிறைந்து விட்டாய் --உன்னையே
இரவும் பகலும் நினைந்திடச் செய்தாய்
புதையலைத் தேடி அலைந்த எனக்கு --நீ
பொன்னால் செய்திட்ட மாளிகை யானாய்
கதவினைத் திறந்திட மனம் இல்லையோ --என்
கண்ணே நானுனை அழைப்பது கேட்கலையோ
பெண்கள் கருணை உள்ளவர் என்றே --இங்கு
பெருமையாக பாடல்களினில் புலவர்கள் சொன்னார்
கண்ணில் இரக்கம் இன்னும் வந்திட வில்லையே --எனது
காதற் கிளியே உன்னால் இந்தத் தொல்லையே
காற்று புகா இடத்திலும் காதலும் கூட நுழையுமே -இங்கே
வேற்று மனிதனாய் நானும் இல்லையே
நேற்று சொன்னது உந்தன் நினைவில் இல்லையே --உன்னை
நேசமாய் அணைத்திட தெம்பும் எனக்கேனோ இல்லையே
என்ன செய்து உன்னை நான் மணப்பேன் --நீ
ஏவிடும் பணிகளை நன்றாய் முடிப்பேன்
கன்னல் தமிழில் பாட்டுக்கள் படிப்பேன் --எந்தன்
கண்மணி உன்னையும் தூங்கிட வைப்பேன்
காதல் பயிரை வளர்ந்திட வைத்தாய்
இதயம் முழுதும் நிறைந்து விட்டாய் --உன்னையே
இரவும் பகலும் நினைந்திடச் செய்தாய்
புதையலைத் தேடி அலைந்த எனக்கு --நீ
பொன்னால் செய்திட்ட மாளிகை யானாய்
கதவினைத் திறந்திட மனம் இல்லையோ --என்
கண்ணே நானுனை அழைப்பது கேட்கலையோ
பெண்கள் கருணை உள்ளவர் என்றே --இங்கு
பெருமையாக பாடல்களினில் புலவர்கள் சொன்னார்
கண்ணில் இரக்கம் இன்னும் வந்திட வில்லையே --எனது
காதற் கிளியே உன்னால் இந்தத் தொல்லையே
காற்று புகா இடத்திலும் காதலும் கூட நுழையுமே -இங்கே
வேற்று மனிதனாய் நானும் இல்லையே
நேற்று சொன்னது உந்தன் நினைவில் இல்லையே --உன்னை
நேசமாய் அணைத்திட தெம்பும் எனக்கேனோ இல்லையே
என்ன செய்து உன்னை நான் மணப்பேன் --நீ
ஏவிடும் பணிகளை நன்றாய் முடிப்பேன்
கன்னல் தமிழில் பாட்டுக்கள் படிப்பேன் --எந்தன்
கண்மணி உன்னையும் தூங்கிட வைப்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக