வியாழன், 17 மே, 2018

கண்மணி 443

கதைகள்  சொல்லி  கண்ணால்  வளைத்தாய் --மனதில்
காதல்  பயிரை  வளர்ந்திட  வைத்தாய்
இதயம்  முழுதும்  நிறைந்து  விட்டாய் --உன்னையே
இரவும்  பகலும்  நினைந்திடச்  செய்தாய்

புதையலைத்  தேடி  அலைந்த  எனக்கு --நீ
பொன்னால்  செய்திட்ட  மாளிகை  யானாய்
கதவினைத்  திறந்திட  மனம்  இல்லையோ --என்
கண்ணே  நானுனை  அழைப்பது  கேட்கலையோ

பெண்கள்  கருணை  உள்ளவர்  என்றே --இங்கு
பெருமையாக  பாடல்களினில்  புலவர்கள்  சொன்னார்
கண்ணில்  இரக்கம்  இன்னும்   வந்திட  வில்லையே --எனது
காதற்  கிளியே   உன்னால்   இந்தத்   தொல்லையே

காற்று புகா   இடத்திலும்  காதலும்  கூட  நுழையுமே -இங்கே
வேற்று   மனிதனாய்   நானும்  இல்லையே
நேற்று  சொன்னது  உந்தன்  நினைவில்  இல்லையே --உன்னை
நேசமாய்  அணைத்திட   தெம்பும்   எனக்கேனோ   இல்லையே

என்ன  செய்து  உன்னை நான்   மணப்பேன் --நீ
ஏவிடும்  பணிகளை  நன்றாய்  முடிப்பேன்
கன்னல்  தமிழில்  பாட்டுக்கள்  படிப்பேன் --எந்தன்
கண்மணி   உன்னையும்  தூங்கிட  வைப்பேன்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக