பல்லவி
புவனம் முழுதும் ஆளும் ஈஸ்வரி --எங்கள்
புதுகை நகர் காக்கும் அன்னையே எமை ஆதரி (புவனம் )
அனுபல்லவி
சாந்தானந்தர் போற்றிய சர்வேஸ்வரி -இங்கு
சகலமும் நீயே சற்குண வல்லியே அம்மா (புவனம் )
சரணங்கள்
உலகினைக் காத்திட நீயும் உருவாகினாய் --மண்ணில்
உள்ளோர்கள் நலம் காண அருளாகினாய்
புலர்கின்ற பொழுதெல்லாம் உன்னால் அன்றோ --எங்கள்
புவனேஸ்வரி தாயே பொன் மனச் செல்வியே (புவனம் )
வரம் பெற வேண்டியே உன் வாசல் வந்தோம் --நீயே
வழி காட்ட வேண்டுமென வணங்கித் தொழுதோம்
குறை தீர திருமகளே மனம் கனிவாயம்மா --பல
குடும்பங்கள் சுகம் காண இனி அருள்வாயம்மா (புவனம் )
திருமாலும் உன்னுடன் இருக்கும் உடன் பிறப்பு --உந்தன்
செவ்வாயும் அருள் சுரக்கும் தனிச் சிறப்பு
ஒருக்காலும் உந்தனை என்றும் மறவோமம்மா --எங்கள்
உயிர் வாழ்தல் உத்தமியே நிந்தன் அருளாளம்மா (புவனம் )
இல்லையெனும் நிலை நீக்க நீயே வருவாய் --இந்த
ஏழையர் வளம் பெற எண்ணம் கொள்வாய்
தொல்லைகள் சூழாமல் தோகையே காத்திடம்மா --என்றும்
தூயவளே தேவியே சுடர் விடும் ஜோதியே (புவனம் )
புவனம் முழுதும் ஆளும் ஈஸ்வரி --எங்கள்
புதுகை நகர் காக்கும் அன்னையே எமை ஆதரி (புவனம் )
அனுபல்லவி
சாந்தானந்தர் போற்றிய சர்வேஸ்வரி -இங்கு
சகலமும் நீயே சற்குண வல்லியே அம்மா (புவனம் )
சரணங்கள்
உலகினைக் காத்திட நீயும் உருவாகினாய் --மண்ணில்
உள்ளோர்கள் நலம் காண அருளாகினாய்
புலர்கின்ற பொழுதெல்லாம் உன்னால் அன்றோ --எங்கள்
புவனேஸ்வரி தாயே பொன் மனச் செல்வியே (புவனம் )
வரம் பெற வேண்டியே உன் வாசல் வந்தோம் --நீயே
வழி காட்ட வேண்டுமென வணங்கித் தொழுதோம்
குறை தீர திருமகளே மனம் கனிவாயம்மா --பல
குடும்பங்கள் சுகம் காண இனி அருள்வாயம்மா (புவனம் )
திருமாலும் உன்னுடன் இருக்கும் உடன் பிறப்பு --உந்தன்
செவ்வாயும் அருள் சுரக்கும் தனிச் சிறப்பு
ஒருக்காலும் உந்தனை என்றும் மறவோமம்மா --எங்கள்
உயிர் வாழ்தல் உத்தமியே நிந்தன் அருளாளம்மா (புவனம் )
இல்லையெனும் நிலை நீக்க நீயே வருவாய் --இந்த
ஏழையர் வளம் பெற எண்ணம் கொள்வாய்
தொல்லைகள் சூழாமல் தோகையே காத்திடம்மா --என்றும்
தூயவளே தேவியே சுடர் விடும் ஜோதியே (புவனம் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக