பல்லவி
அலைவாழ் குமரா அடியேன் அழைத்தேன் --என்
அருகில் வருவாய் உன்னருளினைப் பெறவே (அலை )
அனுபல்லவி
கலையாய் கனியாய் நற்கருணை நிழலாய் --மனம்
கனிவாய் கந்தா கதியருள் மன்னவா (அலை )
சரணங்கள்
பழனியை ஆளும் பாங்குடை முருகா -உன்னை
பணிந்தால் தானே நற்பதமே பெறலாம்
இனிதாய் செந்தமிழில் இருப்பவன் நீயே --இதை
நாம் அறிந்தால் ஏற்றங்கள் வரலாம் (அலை )
அரக்கர் குலத்தினை அழித்திட்ட வல்லவா --உந்தன்
அடியார் தமக்கே அருள் செய் தலைவா
உருவாய் குருவாய் உணர்வெனும் பொருளாய் --எங்கும்
நிறைவாய் தெரிவாய் நெடு வேல் முருகா (அலை )
நாவினில் இருப்பது நாயகன் மந்திரம் --என்றும்
நல்லதை யளிப்பது நம்பியின் நற்குணம்
பாவினில் உறைந்திடும் எங்கள் பரமன் மகனே --உனை
பாடியே துதித்தோம் நற்பதங்கள் பெறவே (அலை )
சக்தியின் மகனாம் சரவணனென்னும் வேலன் --வரும்
சங்கடங்கள் தீர்ப்பான் சமயத்தில் குகனே
முக்தியை யளிப்பது முருகன் அல்லவா --மன
மோகத்தை நீக்கிடும் மோஹனம் சொல்லவா (அலை )
காலம் உந்தன் கைகளில் சுழலும் --உனது
கண்கள் அசைவினில் காவியம் மலரும்
வேலினைக் கொண்டே வினைகள் அழிப்பாய் --தன்னை
வேண்டுவோர் தமக்கே என்றும் வெற்றியே கொடுப்பாய் (அலை )
அலைவாழ் குமரா அடியேன் அழைத்தேன் --என்
அருகில் வருவாய் உன்னருளினைப் பெறவே (அலை )
அனுபல்லவி
கலையாய் கனியாய் நற்கருணை நிழலாய் --மனம்
கனிவாய் கந்தா கதியருள் மன்னவா (அலை )
சரணங்கள்
பழனியை ஆளும் பாங்குடை முருகா -உன்னை
பணிந்தால் தானே நற்பதமே பெறலாம்
இனிதாய் செந்தமிழில் இருப்பவன் நீயே --இதை
நாம் அறிந்தால் ஏற்றங்கள் வரலாம் (அலை )
அரக்கர் குலத்தினை அழித்திட்ட வல்லவா --உந்தன்
அடியார் தமக்கே அருள் செய் தலைவா
உருவாய் குருவாய் உணர்வெனும் பொருளாய் --எங்கும்
நிறைவாய் தெரிவாய் நெடு வேல் முருகா (அலை )
நாவினில் இருப்பது நாயகன் மந்திரம் --என்றும்
நல்லதை யளிப்பது நம்பியின் நற்குணம்
பாவினில் உறைந்திடும் எங்கள் பரமன் மகனே --உனை
பாடியே துதித்தோம் நற்பதங்கள் பெறவே (அலை )
சக்தியின் மகனாம் சரவணனென்னும் வேலன் --வரும்
சங்கடங்கள் தீர்ப்பான் சமயத்தில் குகனே
முக்தியை யளிப்பது முருகன் அல்லவா --மன
மோகத்தை நீக்கிடும் மோஹனம் சொல்லவா (அலை )
காலம் உந்தன் கைகளில் சுழலும் --உனது
கண்கள் அசைவினில் காவியம் மலரும்
வேலினைக் கொண்டே வினைகள் அழிப்பாய் --தன்னை
வேண்டுவோர் தமக்கே என்றும் வெற்றியே கொடுப்பாய் (அலை )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக