கதிர் வேல் முருகன் கருணை புரிவான் --அவனை
கருத்தாய் துதித்தால் கவலைகள் மறையும்
மயிலில் வருவான் நம் மனதில் நுழைவான் --அங்கே
மகிழ்வாய் தங்கியே புது மலராய் சிரிப்பான்
தமிழாய் ஒலித்திடும் நம் தலைவன் அவனே --நற்
தணிகை மலைவாழ் தங்கமும் குகனே
அமிழ்தாய் இனிப்பான அடியார் தமக்கே --அவனது
அடிகளைப் பற்றினால் அடையலாம் முக்தியே
செவ்வாய் திறந்திட செல்வம் பொழியும் --அவன்
திருவேல் நம்மையே தினமும் காக்கும்
அவ்வைக் கிழவிக்கு அளித்தது நாவற்பழம் --என்றும்
அன்பால் நினைத்தால் அருள்வது ஞானப்பழம்
இனிமேல் பிறவிகள் எடுத்திட வேண்டாம் --நம்
இறைவன் முருகன் நமைத் தடுத்தே காப்பான்
துணிவாய் அவனைத் தொடர்ந்தால் இன்பம் --இனி
தூரமாய் ஓடிடும் தொல்லையும் துன்பமும்
நாவால் சொன்னால் நாளையும் நமக்கே --அவனை
நம்பியே இருந்தால் நற்பலன் கிடைக்கும்
பாவினில் உறைவான் நம் பக்கம் இருப்பான் --தூய
பாதங்கள் பணிந்தால் நற்பதங்கள் கொடுப்பான்
வேலும் மயிலும் விரைந்தே வருக --எங்கள்
வினைகள் மறைக வெற்றிகள் தொடர்க
நாளும் பொழுதும் நம்பியின் நினைவே --உலகில்
நங்கை வள்ளியின் நாயகன் ஷண்முகனே
கருத்தாய் துதித்தால் கவலைகள் மறையும்
மயிலில் வருவான் நம் மனதில் நுழைவான் --அங்கே
மகிழ்வாய் தங்கியே புது மலராய் சிரிப்பான்
தமிழாய் ஒலித்திடும் நம் தலைவன் அவனே --நற்
தணிகை மலைவாழ் தங்கமும் குகனே
அமிழ்தாய் இனிப்பான அடியார் தமக்கே --அவனது
அடிகளைப் பற்றினால் அடையலாம் முக்தியே
செவ்வாய் திறந்திட செல்வம் பொழியும் --அவன்
திருவேல் நம்மையே தினமும் காக்கும்
அவ்வைக் கிழவிக்கு அளித்தது நாவற்பழம் --என்றும்
அன்பால் நினைத்தால் அருள்வது ஞானப்பழம்
இனிமேல் பிறவிகள் எடுத்திட வேண்டாம் --நம்
இறைவன் முருகன் நமைத் தடுத்தே காப்பான்
துணிவாய் அவனைத் தொடர்ந்தால் இன்பம் --இனி
தூரமாய் ஓடிடும் தொல்லையும் துன்பமும்
நாவால் சொன்னால் நாளையும் நமக்கே --அவனை
நம்பியே இருந்தால் நற்பலன் கிடைக்கும்
பாவினில் உறைவான் நம் பக்கம் இருப்பான் --தூய
பாதங்கள் பணிந்தால் நற்பதங்கள் கொடுப்பான்
வேலும் மயிலும் விரைந்தே வருக --எங்கள்
வினைகள் மறைக வெற்றிகள் தொடர்க
நாளும் பொழுதும் நம்பியின் நினைவே --உலகில்
நங்கை வள்ளியின் நாயகன் ஷண்முகனே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக