பல்லவி
மருவூரில் அரசாளும் எங்கள் மகராசியே --மண்ணில்
மனிதர்கள் வாழ்வது உங்கள் அருளாசியே (மருவூரில் )
அனுபல்லவி
உருகாத மனமெலாம் உருகிடச் செய்வாய் --எங்கள்
உயிரானாய் உணர்வானாய் உத்தமி சக்தியே (மருவூரில் )
சரணங்கள்
பங்காரு நெஞ்சமதில் நீயும் பதிவாகினாய் --வணங்கும்
பக்தர்கள் இல்லத்தில் என்றும் நிதியாகினாய்
ஓங்கார நாதத்தில் உருவான தேவியே --நாங்கள்
உன்முகம் பார்த்திடில் பறந்திடும் துயர்களே (மருவூரில் )
வேப்பிலை துணையாலே வினைகளை மாற்றுவாய் --நீயோ
வேதத்தின் நிறைவாகி என்றும் மறையாகினாய்
காத்திட வந்திடும் எங்கள் காருண்யச் செல்வியே --இங்கே
கற்பகமே அற்புதமே கனிந்தருள் புரிவாயே (மருவூரில் )
உன்வாசல் ஏழைக்கு எந்நாளும் படைவீடு --நீதான்
உலகாளும் உமையென்பது தமிழர்கள் ஏடு
கண் திறந்து பார்த்திடில் கவலைகள் நீங்கும் --இந்த
கலிகாலம் காண்கின்ற எங்கள் காமதேனுவே (மருவூரில் )
செவ்வாடை பக்தர்கள் தினமும் கூடுவார் --தேவி
உந்தன் திருப்புகழ் பாடி திருவருள் நாடுவார்
பெய்யாத மழை சரிவரப் பெய்திடச் செய்குவாய் --எம்
பெருமாட்டி நீ விழி காட்டி நல்லருள் கூட்டுவாய் (மருவூரில் )
தீராத பிணி களெல்லாம் சிதறியே ஓடும் --தேவி
உன்னருளாலே வாழ்வில் திருப்பமும் கூடும்
மாறாத மனம் கூட ஒருநாள் மாறியே தீரும் --எங்கள்
மாதரசி உன்னருளாலே எங்கிலும் மகிழ்ச்சியே பொங்கும் (மருவூரில் )
மருவூரில் அரசாளும் எங்கள் மகராசியே --மண்ணில்
மனிதர்கள் வாழ்வது உங்கள் அருளாசியே (மருவூரில் )
அனுபல்லவி
உருகாத மனமெலாம் உருகிடச் செய்வாய் --எங்கள்
உயிரானாய் உணர்வானாய் உத்தமி சக்தியே (மருவூரில் )
சரணங்கள்
பங்காரு நெஞ்சமதில் நீயும் பதிவாகினாய் --வணங்கும்
பக்தர்கள் இல்லத்தில் என்றும் நிதியாகினாய்
ஓங்கார நாதத்தில் உருவான தேவியே --நாங்கள்
உன்முகம் பார்த்திடில் பறந்திடும் துயர்களே (மருவூரில் )
வேப்பிலை துணையாலே வினைகளை மாற்றுவாய் --நீயோ
வேதத்தின் நிறைவாகி என்றும் மறையாகினாய்
காத்திட வந்திடும் எங்கள் காருண்யச் செல்வியே --இங்கே
கற்பகமே அற்புதமே கனிந்தருள் புரிவாயே (மருவூரில் )
உன்வாசல் ஏழைக்கு எந்நாளும் படைவீடு --நீதான்
உலகாளும் உமையென்பது தமிழர்கள் ஏடு
கண் திறந்து பார்த்திடில் கவலைகள் நீங்கும் --இந்த
கலிகாலம் காண்கின்ற எங்கள் காமதேனுவே (மருவூரில் )
செவ்வாடை பக்தர்கள் தினமும் கூடுவார் --தேவி
உந்தன் திருப்புகழ் பாடி திருவருள் நாடுவார்
பெய்யாத மழை சரிவரப் பெய்திடச் செய்குவாய் --எம்
பெருமாட்டி நீ விழி காட்டி நல்லருள் கூட்டுவாய் (மருவூரில் )
தீராத பிணி களெல்லாம் சிதறியே ஓடும் --தேவி
உன்னருளாலே வாழ்வில் திருப்பமும் கூடும்
மாறாத மனம் கூட ஒருநாள் மாறியே தீரும் --எங்கள்
மாதரசி உன்னருளாலே எங்கிலும் மகிழ்ச்சியே பொங்கும் (மருவூரில் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக