அறிவே திருவே அழகின் ஒளியே -இன்று
அறிந்தேன் உனையே யாருண்டு இணையே
கருணைக் கடலே கதி நீ யருள்வாய் -இங்கு
சிறியேன் எனது சிரமம் தீர்ப்பாய்
மங்கள ப் பொருளே மதியின் முடிவே --மண்ணில்
எங்களைக் காத்திட இனிதே வருவாய்
சங்கம் முழங்கிடும் சகா தேவரே --நாங்கள்
சரணம் அடைந்தோம் சகலமும் தருவாய்
திங்களை சிரசினில் சிறப்பாய் சூடினாய் --உலகில்
தினமும் உந்தன் சீலத்தைப் போற்றுவோம்
பொங்கிடும் புனலே பொன்னார் மேனியனே --உனை
பொழுதும் மறவோம் புண்ணியம் பெறுவோம்
உலகம் செழித்திட நீவிர் உதவிட வேண்டும் --என்றும்
உண்மை அன்பு எங்கிலும் நிலை பெற வேண்டும்
நிலவும் கொடுமைகள் நீங்கிட வேண்டும் --அடியார்
நினைக்கும் பொழுதினில் நீங்கள் வர வேண்டும்
தமிழால் துதிப்போம் எங்கள் தலைவிதி நீங்களே --வானில்
தண்ணொளி நிலவே தர்மத்தின் தலைவனே
ஆலகால விசமதை அருந்திய புனிதா --எங்கள்
அம்மை யப்பனே அகம் குளிர்வாயே
இம்மையும் மறுமையும் இனிதாக வேண்டும் --இங்கு
ஏழையர் வாழ்வினில் எல்லாமும் வேண்டும்
உம்மையே நினைத்தால் உயர்வுகள் கூடும் -நாம்
உந்தனை மறவோம் உம்மடி தொழுவோம்
அறிந்தேன் உனையே யாருண்டு இணையே
கருணைக் கடலே கதி நீ யருள்வாய் -இங்கு
சிறியேன் எனது சிரமம் தீர்ப்பாய்
மங்கள ப் பொருளே மதியின் முடிவே --மண்ணில்
எங்களைக் காத்திட இனிதே வருவாய்
சங்கம் முழங்கிடும் சகா தேவரே --நாங்கள்
சரணம் அடைந்தோம் சகலமும் தருவாய்
திங்களை சிரசினில் சிறப்பாய் சூடினாய் --உலகில்
தினமும் உந்தன் சீலத்தைப் போற்றுவோம்
பொங்கிடும் புனலே பொன்னார் மேனியனே --உனை
பொழுதும் மறவோம் புண்ணியம் பெறுவோம்
உலகம் செழித்திட நீவிர் உதவிட வேண்டும் --என்றும்
உண்மை அன்பு எங்கிலும் நிலை பெற வேண்டும்
நிலவும் கொடுமைகள் நீங்கிட வேண்டும் --அடியார்
நினைக்கும் பொழுதினில் நீங்கள் வர வேண்டும்
தமிழால் துதிப்போம் எங்கள் தலைவிதி நீங்களே --வானில்
தண்ணொளி நிலவே தர்மத்தின் தலைவனே
ஆலகால விசமதை அருந்திய புனிதா --எங்கள்
அம்மை யப்பனே அகம் குளிர்வாயே
இம்மையும் மறுமையும் இனிதாக வேண்டும் --இங்கு
ஏழையர் வாழ்வினில் எல்லாமும் வேண்டும்
உம்மையே நினைத்தால் உயர்வுகள் கூடும் -நாம்
உந்தனை மறவோம் உம்மடி தொழுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக