புதன், 16 மே, 2018

நாம் 440

 அறிவே  திருவே  அழகின் ஒளியே -இன்று
அறிந்தேன்  உனையே  யாருண்டு  இணையே
கருணைக் கடலே  கதி நீ  யருள்வாய் -இங்கு
சிறியேன்  எனது  சிரமம்   தீர்ப்பாய்

மங்கள ப்  பொருளே  மதியின்  முடிவே --மண்ணில்
எங்களைக்  காத்திட  இனிதே  வருவாய்
சங்கம்  முழங்கிடும்   சகா  தேவரே --நாங்கள்
சரணம்  அடைந்தோம்  சகலமும்  தருவாய்

திங்களை  சிரசினில்  சிறப்பாய்  சூடினாய்  --உலகில்
தினமும்  உந்தன்  சீலத்தைப்  போற்றுவோம்
பொங்கிடும்  புனலே  பொன்னார்  மேனியனே --உனை
பொழுதும்  மறவோம் புண்ணியம்  பெறுவோம்

உலகம்  செழித்திட   நீவிர்  உதவிட  வேண்டும்  --என்றும்
உண்மை  அன்பு  எங்கிலும்  நிலை  பெற  வேண்டும்
நிலவும்  கொடுமைகள்  நீங்கிட  வேண்டும் --அடியார்
நினைக்கும்  பொழுதினில்  நீங்கள்  வர  வேண்டும்

தமிழால்  துதிப்போம்  எங்கள்  தலைவிதி  நீங்களே --வானில்
தண்ணொளி  நிலவே  தர்மத்தின்  தலைவனே
ஆலகால  விசமதை  அருந்திய  புனிதா --எங்கள்
அம்மை  யப்பனே  அகம்  குளிர்வாயே

இம்மையும்  மறுமையும்  இனிதாக  வேண்டும் --இங்கு
ஏழையர்  வாழ்வினில்  எல்லாமும்  வேண்டும்
உம்மையே  நினைத்தால்  உயர்வுகள்  கூடும் -நாம்
உந்தனை மறவோம்  உம்மடி   தொழுவோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக