கந்தா வேலா கடம்பா வருவாய் -செங்
கதிர் வேலா கருத்தினில் நிறைந்தாய்
செந்தமிழ் காத்திடும் செவ்வேள் நீயே -என்
சிரமதை தாழ்த்தி உந்தன் பத மலர் பிடித்தேன் (கந்தா )
வேலினை நினைத்திட வெற்றிகள் குவியும் -உன்னை
வேண்டுவோர் மனதில் அன்பு வெள்ளமே நிறையும்
நாளை என்பதே நல்லதின் தொடக்கம் -இங்கே
நாயகன் நீ வர எல்லாம் நல்லதாய் நடக்கும் (கந்தா )
குன்றில் ஆடிடும் குருபரக் குமரனே -எங்கள்
குறைகள் தீரவே நீயும் மயிலினில் வருவாய்
என்றும் நிலைப்பது இறைவன் துணையே -இதனை
ஏற்றவர் பெறுவது எல்லா நலமே (கந்தா )
வாவென அழைத்தால் வந்திடும் முருகா -எங்கள்
வள்ளி மணாளனே வல்லமை அருள்வாய்
வயலூர் பதிதனில் வலம் வரும் முருகா -வள்ளல்
அருணகிரி பாடிட தமிழ் வரிகளைச் சொன்னாய் (கந்தா )
செந்தூர்ப் பதி திகழ் செந்தில் வேலா --பரம
சிவனார் பெற்ற சீலனும் நீயே
முந்தைய வினைகளை முற்றிலும் நீக்கி -எங்கள்
மூடத்தை ப் போக்கி மோட்சமும் அருள்வாய் (கந்தா)
கதிர் வேலா கருத்தினில் நிறைந்தாய்
செந்தமிழ் காத்திடும் செவ்வேள் நீயே -என்
சிரமதை தாழ்த்தி உந்தன் பத மலர் பிடித்தேன் (கந்தா )
வேலினை நினைத்திட வெற்றிகள் குவியும் -உன்னை
வேண்டுவோர் மனதில் அன்பு வெள்ளமே நிறையும்
நாளை என்பதே நல்லதின் தொடக்கம் -இங்கே
நாயகன் நீ வர எல்லாம் நல்லதாய் நடக்கும் (கந்தா )
குன்றில் ஆடிடும் குருபரக் குமரனே -எங்கள்
குறைகள் தீரவே நீயும் மயிலினில் வருவாய்
என்றும் நிலைப்பது இறைவன் துணையே -இதனை
ஏற்றவர் பெறுவது எல்லா நலமே (கந்தா )
வாவென அழைத்தால் வந்திடும் முருகா -எங்கள்
வள்ளி மணாளனே வல்லமை அருள்வாய்
வயலூர் பதிதனில் வலம் வரும் முருகா -வள்ளல்
அருணகிரி பாடிட தமிழ் வரிகளைச் சொன்னாய் (கந்தா )
செந்தூர்ப் பதி திகழ் செந்தில் வேலா --பரம
சிவனார் பெற்ற சீலனும் நீயே
முந்தைய வினைகளை முற்றிலும் நீக்கி -எங்கள்
மூடத்தை ப் போக்கி மோட்சமும் அருள்வாய் (கந்தா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக