தள்ளாடும் நிலையினைக் கொடுத்தாள் -தாயின்
தயவால் நானும் பிழைத்தேன்
சொல்லாலே தினமும் அடித்தாள் -பல
துன்பங்கள் அவளால் அடைந்தேன்
நில்லாமல் ஓடிடும் காலம் -அவளின்
நினைவாலே உண்டாகும் சோகம்
கல்லாத மடையன் நானா நானும்
கரைமீறி வீழ்ந்திட்ட மீனா
கணைகளை என்மீது சொரிந்தாள் -வீணே
கற்பனையில் அவளேதான் மிதந்தாள்
துணையென்று நானும் நினைத்தேன் -தேடும்
துன்பங்கள் என்பதனை மறந்தேன்
வில்லாக வளைந்திடும் புருவம் -அவள்
விளைந்துவிட்ட எழிலான பருவம்
துள்ளாத மனம் கூடத் துள்ளும் -அந்த
துடியிடை எவரையுமே கொல்லும்
ஈரெட்டு வயதுள்ள செல்வம் -அதன்
இளமையால் வெல்கின்ற கர்வம்
தேர்போல தெருவினில் வந்தாள் -அவளே
என்னைத் தேடி வரும் நாள் எந்த நாளோ
தயவால் நானும் பிழைத்தேன்
சொல்லாலே தினமும் அடித்தாள் -பல
துன்பங்கள் அவளால் அடைந்தேன்
நில்லாமல் ஓடிடும் காலம் -அவளின்
நினைவாலே உண்டாகும் சோகம்
கல்லாத மடையன் நானா நானும்
கரைமீறி வீழ்ந்திட்ட மீனா
கணைகளை என்மீது சொரிந்தாள் -வீணே
கற்பனையில் அவளேதான் மிதந்தாள்
துணையென்று நானும் நினைத்தேன் -தேடும்
துன்பங்கள் என்பதனை மறந்தேன்
வில்லாக வளைந்திடும் புருவம் -அவள்
விளைந்துவிட்ட எழிலான பருவம்
துள்ளாத மனம் கூடத் துள்ளும் -அந்த
துடியிடை எவரையுமே கொல்லும்
ஈரெட்டு வயதுள்ள செல்வம் -அதன்
இளமையால் வெல்கின்ற கர்வம்
தேர்போல தெருவினில் வந்தாள் -அவளே
என்னைத் தேடி வரும் நாள் எந்த நாளோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக