புதன், 2 மே, 2018

எந்த நாள் 404

 தள்ளாடும்  நிலையினைக்  கொடுத்தாள் -தாயின்
தயவால்   நானும்  பிழைத்தேன்
சொல்லாலே  தினமும்  அடித்தாள் -பல
துன்பங்கள்  அவளால்  அடைந்தேன்

நில்லாமல்  ஓடிடும்  காலம் -அவளின்
நினைவாலே  உண்டாகும்  சோகம்
கல்லாத  மடையன்  நானா நானும்
கரைமீறி  வீழ்ந்திட்ட   மீனா

கணைகளை  என்மீது  சொரிந்தாள் -வீணே
கற்பனையில்  அவளேதான்  மிதந்தாள்
துணையென்று  நானும்  நினைத்தேன் -தேடும்
துன்பங்கள்  என்பதனை  மறந்தேன்

வில்லாக  வளைந்திடும்  புருவம் -அவள்
விளைந்துவிட்ட  எழிலான  பருவம்
துள்ளாத  மனம் கூடத்   துள்ளும் -அந்த
துடியிடை  எவரையுமே  கொல்லும்

ஈரெட்டு  வயதுள்ள  செல்வம் -அதன்
இளமையால்  வெல்கின்ற  கர்வம்
தேர்போல  தெருவினில்  வந்தாள் -அவளே
என்னைத்  தேடி  வரும் நாள்   எந்த நாளோ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக