வெள்ளி, 4 மே, 2018

தேன் மழை 412

 ஒரு  நாள்  வழியினில்  உனையே  கண்டேன் -என்
உள்மனம்  விரும்பவே  உன்னையும்  தொடர்ந்தேன்
பல நாள்  அன்பால்  பழகியே  வந்தோம் -நீ
பரிதவிக்க  வைத்தென்னைப்  பிரிந்து  சென்றாய் (ஒருநாள் )

வரும் நாள்  என்று  என  வருந்தி  அலைந்தேன் -எனது
வளங்கள்  அனைத்தையும்  உனக்கே  கொடுத்தேன்
திரு நாள்  கண்டிட  நம்  திருமணம்  வேண்டும் -நீ
திரும்பி  வந்திடில்  மண்ணிலே  தேன்  மழை  பெய்யும் (ஒருநாள் )

வாசலில்  தோரணம்  வருபவர்  ஆயிரம் -என்
வாழ்வு  சிறந்திட  நீயிங்கு  வருவது  முக்கியம்
ஆசை நினைவுகள்  அலையென  மோதுதே -என்
அருமைத்  தோழியே  என்னருகில்  வருகவே  (ஒருநாள் )

பொன்னும்  மணியும்  பூட்டியே  ரசிப்பேன் -உனை
புதையலைப்  போல  நித்தியம்  துதிப்பேன் 
மின்னிடும்  சுடரே  மீன்  விழியாளே -என்
கண்களைப்  போல  காவல்  காப்பேன் (ஒருநாள் )

எல்லாம்  இருந்தும்  என்னவள்  இல்லை -இருக்கும்
இளமை  யொன்றே   எனக்குத்  தொல்லை
பொல்லா  உலகம்  புழுதியைத்  தூற்றும் -இதனை
புரிந்து நீயும்  எனக்கொரு  புகலிடம்   தருவாய்  (ஒருநாள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக