ஒரு நாள் வழியினில் உனையே கண்டேன் -என்
உள்மனம் விரும்பவே உன்னையும் தொடர்ந்தேன்
பல நாள் அன்பால் பழகியே வந்தோம் -நீ
பரிதவிக்க வைத்தென்னைப் பிரிந்து சென்றாய் (ஒருநாள் )
வரும் நாள் என்று என வருந்தி அலைந்தேன் -எனது
வளங்கள் அனைத்தையும் உனக்கே கொடுத்தேன்
திரு நாள் கண்டிட நம் திருமணம் வேண்டும் -நீ
திரும்பி வந்திடில் மண்ணிலே தேன் மழை பெய்யும் (ஒருநாள் )
வாசலில் தோரணம் வருபவர் ஆயிரம் -என்
வாழ்வு சிறந்திட நீயிங்கு வருவது முக்கியம்
ஆசை நினைவுகள் அலையென மோதுதே -என்
அருமைத் தோழியே என்னருகில் வருகவே (ஒருநாள் )
பொன்னும் மணியும் பூட்டியே ரசிப்பேன் -உனை
புதையலைப் போல நித்தியம் துதிப்பேன்
மின்னிடும் சுடரே மீன் விழியாளே -என்
கண்களைப் போல காவல் காப்பேன் (ஒருநாள் )
எல்லாம் இருந்தும் என்னவள் இல்லை -இருக்கும்
இளமை யொன்றே எனக்குத் தொல்லை
பொல்லா உலகம் புழுதியைத் தூற்றும் -இதனை
புரிந்து நீயும் எனக்கொரு புகலிடம் தருவாய் (ஒருநாள்)
உள்மனம் விரும்பவே உன்னையும் தொடர்ந்தேன்
பல நாள் அன்பால் பழகியே வந்தோம் -நீ
பரிதவிக்க வைத்தென்னைப் பிரிந்து சென்றாய் (ஒருநாள் )
வரும் நாள் என்று என வருந்தி அலைந்தேன் -எனது
வளங்கள் அனைத்தையும் உனக்கே கொடுத்தேன்
திரு நாள் கண்டிட நம் திருமணம் வேண்டும் -நீ
திரும்பி வந்திடில் மண்ணிலே தேன் மழை பெய்யும் (ஒருநாள் )
வாசலில் தோரணம் வருபவர் ஆயிரம் -என்
வாழ்வு சிறந்திட நீயிங்கு வருவது முக்கியம்
ஆசை நினைவுகள் அலையென மோதுதே -என்
அருமைத் தோழியே என்னருகில் வருகவே (ஒருநாள் )
பொன்னும் மணியும் பூட்டியே ரசிப்பேன் -உனை
புதையலைப் போல நித்தியம் துதிப்பேன்
மின்னிடும் சுடரே மீன் விழியாளே -என்
கண்களைப் போல காவல் காப்பேன் (ஒருநாள் )
எல்லாம் இருந்தும் என்னவள் இல்லை -இருக்கும்
இளமை யொன்றே எனக்குத் தொல்லை
பொல்லா உலகம் புழுதியைத் தூற்றும் -இதனை
புரிந்து நீயும் எனக்கொரு புகலிடம் தருவாய் (ஒருநாள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக