மறையே புகழும் மாதவச் செல்வி --தமிழ்
மண்டலம் போற்றிடும் மங்கள மகளே
குறைகள் களைந்திடும் கொற்றவியே வருவாய் --உந்தன்
கோவிலில் நின்றே கூட்டமாய்த் தொழுவோம்
நீராய் நிலமாய் நெருப்பாய் இருப்பாய் --ஏழை
நெஞ்சில் என்றும் குடியாய் வசிப்பாய்
பாரோர் வணங்கிடும் பங்கஜ மலரே --உன்னை
பக்தியுடன் அழைததோம் நற்பதங்கள் தருவாய்
கைகளில் சூலம் உன் கண்களில் வீரம் --எங்கள்
கவலைகள் போக்கிட காளியே வருவாய்
பொய்களை சுமந்தோர் பொசுங்கியே போவார் --அந்த
புல்லர்களை அழித்திட புறப்படு புயலாய்
நிலைக்கிற மகிழ்வும் நீங்காத செல்வமும் --நினை
தொழுதிடில் எமக்கு நிச்சயம் கிடைக்கும்
கலைகளின் அரசியே எங்கள் கந்தனின் தாயே --செய்த
பிழைகளைப் பொறுத்து நீ பேரருள் புரிவாய்
வாழ்வு உன்னால் வளம் பெற வேண்டும் --மண்ணில்
வற்றாத நதிகளை நீயும் தந்திட வேண்டும்
ஆழ்கடல் முத்தே அன்பெனும் தாயே --உன்னை
அனுதினம் வணங்கியே நல் ஆனந்தம் பெறுவோம்
மண்டலம் போற்றிடும் மங்கள மகளே
குறைகள் களைந்திடும் கொற்றவியே வருவாய் --உந்தன்
கோவிலில் நின்றே கூட்டமாய்த் தொழுவோம்
நீராய் நிலமாய் நெருப்பாய் இருப்பாய் --ஏழை
நெஞ்சில் என்றும் குடியாய் வசிப்பாய்
பாரோர் வணங்கிடும் பங்கஜ மலரே --உன்னை
பக்தியுடன் அழைததோம் நற்பதங்கள் தருவாய்
கைகளில் சூலம் உன் கண்களில் வீரம் --எங்கள்
கவலைகள் போக்கிட காளியே வருவாய்
பொய்களை சுமந்தோர் பொசுங்கியே போவார் --அந்த
புல்லர்களை அழித்திட புறப்படு புயலாய்
நிலைக்கிற மகிழ்வும் நீங்காத செல்வமும் --நினை
தொழுதிடில் எமக்கு நிச்சயம் கிடைக்கும்
கலைகளின் அரசியே எங்கள் கந்தனின் தாயே --செய்த
பிழைகளைப் பொறுத்து நீ பேரருள் புரிவாய்
வாழ்வு உன்னால் வளம் பெற வேண்டும் --மண்ணில்
வற்றாத நதிகளை நீயும் தந்திட வேண்டும்
ஆழ்கடல் முத்தே அன்பெனும் தாயே --உன்னை
அனுதினம் வணங்கியே நல் ஆனந்தம் பெறுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக