வியாழன், 10 மே, 2018

புனிதன் 429

                       பல்லவி
தமிழாய்  வாழும்  எங்கள்  தலைவா  வருவாய் --உலகில்
தர்மம்  காத்திடும்  திரு தணிகை  வேலா  (தமிழாய் )
                      அனுபல்லவி
அமிழ்தென  இனிப்பாய்  அடியார்  தமக்கே ---அந்த
அழகு  வள்ளியின்  அன்பா  நீ  வருகவே  (தமிழாய் )
                      சரணங்கள்
கைவேலுடன்  நீ யும்  காட்சி  அளிப்பாய் -இங்கு
கலங்கும்  அடியார்     கவலை  தீர்ப்பாய்
மெய்யாய்  நினைத்தவர்  மேம்படச்  செய்வாய் -மண்ணில்
மேலான  கலைகள்   வளர்ந்திட  வைப்பாய்  (தமிழாய் )

இரவும்  பகலுமாய்  எங்களைக்  காக்கும்  --எழில்
இறைவா   துணைவா  ஏழைகள்  தலைவா
உருவாய்  வருவாய்  உள்ளோர்  மனதில் -இங்கு
ஓங்கார  நாதத்தின்  உட்பொருள்  நீயே  (தமிழாய் )

சங்கம்  கண்ட எங்கள்  தமிழே  போற்றி --சிவ
ஷண்முகம்  என்னும் சற்குருவே  போற்றி
தங்கம்  போன்ற  குணத்தினன்  நீயே --இந்த
தாரணி  போற்றும்   தங்க   வேலனே   (தமிழாய் )

எங்கள்   வாழ்வு   என்றும்  சிறக்க --நீயும்
ஏறு மயிலில்  எழிலுடன்  வருவாய்
பொங்கும்  அலைகளில்  புனிதம்  நீயே --தமிழ்
புலவோர்  நாவினில்  பொலிந்திடும்   அருளே  (தமிழாய் )


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக