பல்லவி
தமிழாய் வாழும் எங்கள் தலைவா வருவாய் --உலகில்
தர்மம் காத்திடும் திரு தணிகை வேலா (தமிழாய் )
அனுபல்லவி
அமிழ்தென இனிப்பாய் அடியார் தமக்கே ---அந்த
அழகு வள்ளியின் அன்பா நீ வருகவே (தமிழாய் )
சரணங்கள்
கைவேலுடன் நீ யும் காட்சி அளிப்பாய் -இங்கு
கலங்கும் அடியார் கவலை தீர்ப்பாய்
மெய்யாய் நினைத்தவர் மேம்படச் செய்வாய் -மண்ணில்
மேலான கலைகள் வளர்ந்திட வைப்பாய் (தமிழாய் )
இரவும் பகலுமாய் எங்களைக் காக்கும் --எழில்
இறைவா துணைவா ஏழைகள் தலைவா
உருவாய் வருவாய் உள்ளோர் மனதில் -இங்கு
ஓங்கார நாதத்தின் உட்பொருள் நீயே (தமிழாய் )
சங்கம் கண்ட எங்கள் தமிழே போற்றி --சிவ
ஷண்முகம் என்னும் சற்குருவே போற்றி
தங்கம் போன்ற குணத்தினன் நீயே --இந்த
தாரணி போற்றும் தங்க வேலனே (தமிழாய் )
எங்கள் வாழ்வு என்றும் சிறக்க --நீயும்
ஏறு மயிலில் எழிலுடன் வருவாய்
பொங்கும் அலைகளில் புனிதம் நீயே --தமிழ்
புலவோர் நாவினில் பொலிந்திடும் அருளே (தமிழாய் )
தமிழாய் வாழும் எங்கள் தலைவா வருவாய் --உலகில்
தர்மம் காத்திடும் திரு தணிகை வேலா (தமிழாய் )
அனுபல்லவி
அமிழ்தென இனிப்பாய் அடியார் தமக்கே ---அந்த
அழகு வள்ளியின் அன்பா நீ வருகவே (தமிழாய் )
சரணங்கள்
கைவேலுடன் நீ யும் காட்சி அளிப்பாய் -இங்கு
கலங்கும் அடியார் கவலை தீர்ப்பாய்
மெய்யாய் நினைத்தவர் மேம்படச் செய்வாய் -மண்ணில்
மேலான கலைகள் வளர்ந்திட வைப்பாய் (தமிழாய் )
இரவும் பகலுமாய் எங்களைக் காக்கும் --எழில்
இறைவா துணைவா ஏழைகள் தலைவா
உருவாய் வருவாய் உள்ளோர் மனதில் -இங்கு
ஓங்கார நாதத்தின் உட்பொருள் நீயே (தமிழாய் )
சங்கம் கண்ட எங்கள் தமிழே போற்றி --சிவ
ஷண்முகம் என்னும் சற்குருவே போற்றி
தங்கம் போன்ற குணத்தினன் நீயே --இந்த
தாரணி போற்றும் தங்க வேலனே (தமிழாய் )
எங்கள் வாழ்வு என்றும் சிறக்க --நீயும்
ஏறு மயிலில் எழிலுடன் வருவாய்
பொங்கும் அலைகளில் புனிதம் நீயே --தமிழ்
புலவோர் நாவினில் பொலிந்திடும் அருளே (தமிழாய் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக