அழகாய்ப் பிறந்தாய் அடிமை ஆனேன் --உன்னை
அருகில் ரசித்திட நீயும் அனுமதி தருவாய்
உலவிடும் காற்றென உன்னிடம் வருவேன் --நீ
உள்ளத்தால் விரும்பினால் உயிராய் இருப்பேன்
மனதில் கோவில் மானே அமைப்பேன் --தினம்
மலர்கள் சொரிந்தே மனமே நிறைவேன்
தமிழில் பாடியே எனது தாகம் தணிப்பேன் --என்
தங்கம் உன்னையே தாரமாய்க் கொள்வேன்
இரவாய் பகலாய் உன்னுடன் இருப்பேன் --என்றும்
இன்பங்கள் கோடி அள்ளியே கொடுப்பேன்
துணையாய் தோழனாய் தோகையே வருவேன் --உனை
தொடர்ந்து வந்திட சம்மதம் தருவாய்
போற்றியே புகழ்வேன் பொன்னும் தருவேன் --உனது
புன்னகை மட்டுமே புதையலாய்த் தெரியும்
காற்றினில் ஏறியே எந்தன் கண்மணி வருகவே --இரவில்
கட்டியே அணைத்திட மிக களிப்பே அடைவேன்
கண்களை மூடினால் பல கனவுகள் வருமே --உனை
கலந்தே இருந்திட பல கவிதைகள் பிறக்கும்
இணையாய் வாழ்ந்திட என்னுயிரே வருவாய் --என்னிடம்
இரக்கம் காட்டி உந்தன் இளமையைத் தருவாய்
அருகில் ரசித்திட நீயும் அனுமதி தருவாய்
உலவிடும் காற்றென உன்னிடம் வருவேன் --நீ
உள்ளத்தால் விரும்பினால் உயிராய் இருப்பேன்
மனதில் கோவில் மானே அமைப்பேன் --தினம்
மலர்கள் சொரிந்தே மனமே நிறைவேன்
தமிழில் பாடியே எனது தாகம் தணிப்பேன் --என்
தங்கம் உன்னையே தாரமாய்க் கொள்வேன்
இரவாய் பகலாய் உன்னுடன் இருப்பேன் --என்றும்
இன்பங்கள் கோடி அள்ளியே கொடுப்பேன்
துணையாய் தோழனாய் தோகையே வருவேன் --உனை
தொடர்ந்து வந்திட சம்மதம் தருவாய்
போற்றியே புகழ்வேன் பொன்னும் தருவேன் --உனது
புன்னகை மட்டுமே புதையலாய்த் தெரியும்
காற்றினில் ஏறியே எந்தன் கண்மணி வருகவே --இரவில்
கட்டியே அணைத்திட மிக களிப்பே அடைவேன்
கண்களை மூடினால் பல கனவுகள் வருமே --உனை
கலந்தே இருந்திட பல கவிதைகள் பிறக்கும்
இணையாய் வாழ்ந்திட என்னுயிரே வருவாய் --என்னிடம்
இரக்கம் காட்டி உந்தன் இளமையைத் தருவாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக