வெள்ளி, 18 மே, 2018

இளமை 445

அழகாய்ப்  பிறந்தாய்  அடிமை  ஆனேன் --உன்னை
அருகில்  ரசித்திட  நீயும்  அனுமதி  தருவாய்
உலவிடும்   காற்றென  உன்னிடம்  வருவேன் --நீ
உள்ளத்தால்  விரும்பினால்  உயிராய்  இருப்பேன்

மனதில்  கோவில்  மானே  அமைப்பேன் --தினம்
மலர்கள்  சொரிந்தே  மனமே  நிறைவேன்
தமிழில்  பாடியே  எனது  தாகம்  தணிப்பேன் --என்
தங்கம்  உன்னையே  தாரமாய்க்  கொள்வேன்

இரவாய்  பகலாய்  உன்னுடன்  இருப்பேன் --என்றும்
இன்பங்கள்  கோடி   அள்ளியே  கொடுப்பேன்
துணையாய்  தோழனாய்  தோகையே  வருவேன் --உனை
தொடர்ந்து  வந்திட  சம்மதம்  தருவாய்

போற்றியே  புகழ்வேன்  பொன்னும்  தருவேன் --உனது
புன்னகை  மட்டுமே  புதையலாய்த்  தெரியும்
காற்றினில்  ஏறியே  எந்தன்  கண்மணி  வருகவே --இரவில்
கட்டியே  அணைத்திட  மிக  களிப்பே  அடைவேன்

கண்களை  மூடினால்  பல கனவுகள்  வருமே --உனை
கலந்தே  இருந்திட  பல கவிதைகள்  பிறக்கும்
இணையாய்  வாழ்ந்திட  என்னுயிரே  வருவாய் --என்னிடம்
இரக்கம்   காட்டி  உந்தன்  இளமையைத்  தருவாய் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக