பல்லவி
வடிவேல் முருகன் வருவார் என்று --நல்
வரமே வாழ்வில் தருவார் இன்று (வடிவேல் )
அனுபல்லவி
அடியே தோழி அவர் வரவில்லையே -இந்த
அபலை எனக்கு காதல் தொல்லையே (வடிவேல் )
சரணங்கள்
கனியின் இனிப்பும் கசப்பாய்ப் போச்சோ --இளம்
கன்னி நிலமையும் இங்கே கானல் நீரோ
இனியும் அவரே இவண் வருவாரா --ஏழை
என்ன தான் நான் செய்வேன் கூறடி தோழி (வடிவேல் )
சிரிக்கச் சிரிக்க சிறையில் இட்டார் --என்
சிந்தை அணுக்களை சிலிர்க்க வைத்தார்
மணக்கும் முல்லை மலராய் சிரித்தேன் --இன்று
மண்ணில் மறையும் சருகாய் ஆனேன் (வடிவேல் )
தனியாய் அணைத்திட்ட என்தலைவன் எங்கே --தினமும்
தாளாது தவிக்கும் பெண்ணும் இங்கே
முனிவர் போற்றும் முத்தமிழ்ச் செல்வன் --என்
மோகம் தீர்த்திடும் நாளினி வருமோ ?(வடிவேல் )
கொடுத்து எடுத்து குலவியே கிடந்தோம் --என்னுள்
கொள்ளை இன்பம் வழிந்ததை உணர்ந்தேன்
தடுக்க நினைக்கும் தர்மன் யாரோ --இன்றே
தயை கூர்ந்து இதனை நீயும் அறிந்திடுவாயே (வடிவேல் )
காதல் என்றால் உலகில் கண்ணீர் தானோ --மனதில்
கவலைகள் சூழ்ந்திட கலங்குதல் முறையோ ?
வேதம் பயின்ற வித்தகர் சொல்வீர் --இனியே
விரைந்து அவரை என்னிடம் சேர்ப்பீர் (வடிவேல் )
வடிவேல் முருகன் வருவார் என்று --நல்
வரமே வாழ்வில் தருவார் இன்று (வடிவேல் )
அனுபல்லவி
அடியே தோழி அவர் வரவில்லையே -இந்த
அபலை எனக்கு காதல் தொல்லையே (வடிவேல் )
சரணங்கள்
கனியின் இனிப்பும் கசப்பாய்ப் போச்சோ --இளம்
கன்னி நிலமையும் இங்கே கானல் நீரோ
இனியும் அவரே இவண் வருவாரா --ஏழை
என்ன தான் நான் செய்வேன் கூறடி தோழி (வடிவேல் )
சிரிக்கச் சிரிக்க சிறையில் இட்டார் --என்
சிந்தை அணுக்களை சிலிர்க்க வைத்தார்
மணக்கும் முல்லை மலராய் சிரித்தேன் --இன்று
மண்ணில் மறையும் சருகாய் ஆனேன் (வடிவேல் )
தனியாய் அணைத்திட்ட என்தலைவன் எங்கே --தினமும்
தாளாது தவிக்கும் பெண்ணும் இங்கே
முனிவர் போற்றும் முத்தமிழ்ச் செல்வன் --என்
மோகம் தீர்த்திடும் நாளினி வருமோ ?(வடிவேல் )
கொடுத்து எடுத்து குலவியே கிடந்தோம் --என்னுள்
கொள்ளை இன்பம் வழிந்ததை உணர்ந்தேன்
தடுக்க நினைக்கும் தர்மன் யாரோ --இன்றே
தயை கூர்ந்து இதனை நீயும் அறிந்திடுவாயே (வடிவேல் )
காதல் என்றால் உலகில் கண்ணீர் தானோ --மனதில்
கவலைகள் சூழ்ந்திட கலங்குதல் முறையோ ?
வேதம் பயின்ற வித்தகர் சொல்வீர் --இனியே
விரைந்து அவரை என்னிடம் சேர்ப்பீர் (வடிவேல் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக