மங்கிய மாலை ஒரு மாமரச் சோலை --அங்கு
தங்கிய போது ஒரு தையல் வந்தாள்
பொங்கிடும் அழகு அவள் பூமியில் நிலவு --அவள்
பூவுடல் செழிப்பினில் பொன்னென மின்னும்
ஈரெட்டு வயதால் என்னையே வளைத்தாள் --என்
இதயத்தில் நுழைந்து என்னமோ செய்தாள்
கார் வெட்கும் குழலும் கயல் விழிக் கண்களும் --என்னை
போரிட்டு அழைக்கையில் மீறிப் போவது எங்கே
காலினில் வீழ்ந்தேன் அவளது கைத்தலம் தொட்டேன் --அந்த
கன்னியை மணந்திடக் காதலும் கொண்டேன்
நூலெனும் இடையும் சங்கெனக் கழுத்தும் --அவளை
நோக்கிடும் எவரும் தங்கள் நுண்மதி இழப்பர்
பற்களோ வெள்ளை அந்த பாவையோ பூக்கொல்லை --அவள்
அற்புத அழகால் எல்லா ஆண்களையும் அழிப்பாள்
கற்றவர் போற்றிடும் கமலமும் அவளே --பிறர்
கண்டதும் நெஞ்சினில் காமமும் மலரும்
இனிவரும் காலங்களில் எல்லாம் அவளே --உலகில்
இரவிலும் பகலிலும் என் இமை போல் காப்பேன்
ஏவிடும் பணிகளை இன்பமாய் முடிப்பேன் --என்
இனியவள் மனதிலே நல்ல இடமும் பிடிப்பேன்
தங்கிய போது ஒரு தையல் வந்தாள்
பொங்கிடும் அழகு அவள் பூமியில் நிலவு --அவள்
பூவுடல் செழிப்பினில் பொன்னென மின்னும்
ஈரெட்டு வயதால் என்னையே வளைத்தாள் --என்
இதயத்தில் நுழைந்து என்னமோ செய்தாள்
கார் வெட்கும் குழலும் கயல் விழிக் கண்களும் --என்னை
போரிட்டு அழைக்கையில் மீறிப் போவது எங்கே
காலினில் வீழ்ந்தேன் அவளது கைத்தலம் தொட்டேன் --அந்த
கன்னியை மணந்திடக் காதலும் கொண்டேன்
நூலெனும் இடையும் சங்கெனக் கழுத்தும் --அவளை
நோக்கிடும் எவரும் தங்கள் நுண்மதி இழப்பர்
பற்களோ வெள்ளை அந்த பாவையோ பூக்கொல்லை --அவள்
அற்புத அழகால் எல்லா ஆண்களையும் அழிப்பாள்
கற்றவர் போற்றிடும் கமலமும் அவளே --பிறர்
கண்டதும் நெஞ்சினில் காமமும் மலரும்
இனிவரும் காலங்களில் எல்லாம் அவளே --உலகில்
இரவிலும் பகலிலும் என் இமை போல் காப்பேன்
ஏவிடும் பணிகளை இன்பமாய் முடிப்பேன் --என்
இனியவள் மனதிலே நல்ல இடமும் பிடிப்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக