திங்கள், 28 மே, 2018

இனியவள் 459

 மங்கிய   மாலை  ஒரு  மாமரச்  சோலை  --அங்கு
தங்கிய   போது   ஒரு  தையல்   வந்தாள்
பொங்கிடும்  அழகு  அவள்  பூமியில்  நிலவு --அவள்
பூவுடல்  செழிப்பினில்  பொன்னென   மின்னும்

ஈரெட்டு  வயதால்  என்னையே  வளைத்தாள்  --என்
இதயத்தில்  நுழைந்து  என்னமோ  செய்தாள்
கார் வெட்கும்  குழலும்  கயல் விழிக்  கண்களும் --என்னை
போரிட்டு  அழைக்கையில்   மீறிப்  போவது  எங்கே

காலினில்  வீழ்ந்தேன்  அவளது  கைத்தலம்  தொட்டேன் --அந்த
கன்னியை  மணந்திடக்  காதலும்  கொண்டேன்
நூலெனும்  இடையும்  சங்கெனக்  கழுத்தும் --அவளை
நோக்கிடும்  எவரும்  தங்கள்  நுண்மதி  இழப்பர்

பற்களோ  வெள்ளை  அந்த  பாவையோ  பூக்கொல்லை  --அவள்
அற்புத  அழகால்   எல்லா  ஆண்களையும்  அழிப்பாள்
கற்றவர்  போற்றிடும்  கமலமும்  அவளே --பிறர்
கண்டதும்  நெஞ்சினில்  காமமும்   மலரும்

இனிவரும்  காலங்களில்  எல்லாம்  அவளே --உலகில்
இரவிலும்  பகலிலும்  என்  இமை போல்  காப்பேன்
ஏவிடும்  பணிகளை   இன்பமாய்  முடிப்பேன் --என்
இனியவள்   மனதிலே   நல்ல இடமும்  பிடிப்பேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக