நினைவாலே உனக்கு ஒரு கோவில் அமைத்தேன் --என்
நெஞ்சினை அதற்கு காவல் வைத்தேன்
கணமேனும் உன்னை நான் மறக்கவில்லை --இனி
கந்தனே நீயும் என்பால் கருணை புரிவாய் (நினைவாலே )
அழகான மனைவிகளோடு ஆனந்தக் குடும்பம் --என்
அண்ணலே உன்னையன்றி யாரிடம் சொல்வேன்
பழமாக நின்றது தென் பழநியில் அன்றோ --அந்த
பரமனார் பெற்ற பசுந் தங்கம் நீ யல்லவோ (நினைவாலே )
கந்தா உன் பார்வை பட்டால் கடும் வினை பறந்தோடும் --தினம்
சிந்தையில் நினைத்தாலோ சிறப்பான வாழ்வமையும்
வந்திடும் துன்பங்கள் நீ வந்திடில் நில்லாது --எம்
வாழ்வினில் உன் அருளே வல்லமை எனும் பேறு (நினைவாலே )
வீரமாய்ப் போரிட்டு வெஞ்சமரில் ஜெயித்தாய் --எம்மை
விழிப்புடன் காவல் செய்து வெற்றிகளை யருள்வாய்
கோரிடும் அடியவர் குறைகளையும் தீர்ப்பாய் --எங்கள்
கொற்றவன் நீயேயென குகனுனைப் பணிவோம் (நினைவாலே )
சங்கத் தமிழ் வளர்த்த ஷண்முகனும் நீயே --வந்த
சங்கடங்கள் போக்கியே நல்ல சாந்தியினை தருவாய்
பொங்கிடும் அழகினில் சரவணபொய்கையிலே மலர்ந்தாய் --எங்கள்
புண்ணியனே வேலவனே போற்றுகிறோம் தினமே (நினைவாலே )
நெஞ்சினை அதற்கு காவல் வைத்தேன்
கணமேனும் உன்னை நான் மறக்கவில்லை --இனி
கந்தனே நீயும் என்பால் கருணை புரிவாய் (நினைவாலே )
அழகான மனைவிகளோடு ஆனந்தக் குடும்பம் --என்
அண்ணலே உன்னையன்றி யாரிடம் சொல்வேன்
பழமாக நின்றது தென் பழநியில் அன்றோ --அந்த
பரமனார் பெற்ற பசுந் தங்கம் நீ யல்லவோ (நினைவாலே )
கந்தா உன் பார்வை பட்டால் கடும் வினை பறந்தோடும் --தினம்
சிந்தையில் நினைத்தாலோ சிறப்பான வாழ்வமையும்
வந்திடும் துன்பங்கள் நீ வந்திடில் நில்லாது --எம்
வாழ்வினில் உன் அருளே வல்லமை எனும் பேறு (நினைவாலே )
வீரமாய்ப் போரிட்டு வெஞ்சமரில் ஜெயித்தாய் --எம்மை
விழிப்புடன் காவல் செய்து வெற்றிகளை யருள்வாய்
கோரிடும் அடியவர் குறைகளையும் தீர்ப்பாய் --எங்கள்
கொற்றவன் நீயேயென குகனுனைப் பணிவோம் (நினைவாலே )
சங்கத் தமிழ் வளர்த்த ஷண்முகனும் நீயே --வந்த
சங்கடங்கள் போக்கியே நல்ல சாந்தியினை தருவாய்
பொங்கிடும் அழகினில் சரவணபொய்கையிலே மலர்ந்தாய் --எங்கள்
புண்ணியனே வேலவனே போற்றுகிறோம் தினமே (நினைவாலே )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக