பல்லவி
மஞ்சள் வெய்யலிலே மாலைப் பொழுதினிலே --அன்று
கொஞ்சிட வந்த கோவலன் யாரடி (மஞ்சள் )
அனுபல்லவி
தஞ்சமென்றவன் என்னைத் தழுவியே அணைத்தான் --இந்த
தையல் மீது உள்ள தாகத்தையும் தணித்தான் (மஞ்சள்)
சரணங்கள்
அஞ்சன வண்ணன் ஆருயிர்க் கண்ணனோ --என்றும்
அடியவர் மனம் குளிரும் ஆறுமுக வேலவனோ
வெஞ்சமர் களத்தினில் விளையாடும் வீரனோ --எங்கும்
வெற்றி பல குவிக்கும் வேங்கையின் மை ந்தனோ (மஞ்சள் )
கையில் என்னை எடுத்தான் கனி யமுதம் கொடுத்தான் -இரு
கண்களால் வளைத்து என்னிடம் காமரசம் படித்தான்
பொய்யினில் பிறந்த புலவனோ நானறியேன் --இந்த
பூங்கொடி மீதினிலே காதல் போரினைத் தொடுத்த (மஞ்சள் )
வில்லாலடி பட்டது போல வேதனை மீறுதடி -காதல்
வேட்கை எனை வருத்த வேறெங்கோ சென்றானடி
பொல்லாத ஆசைகள் புதிதாய்க் கிளம்புதடி -என்னை
புரிந்தவன் அவனை எண்ணி புகலிடம் தேடுதடி (மஞ்சள் )
இரவென்றும் பகலென்றும் இருப்பது மறந்ததடி --இன்று
என்னவன் வரவில்லையென ஏக்கம் பிறக்குதடி
உறவினை நாடியே உள்ளம் அலையுதடி --அந்த
உத்தமன் அழகன் ராஜ முத்திரை பதித்தானடி (மஞ்சள்)
மஞ்சள் வெய்யலிலே மாலைப் பொழுதினிலே --அன்று
கொஞ்சிட வந்த கோவலன் யாரடி (மஞ்சள் )
அனுபல்லவி
தஞ்சமென்றவன் என்னைத் தழுவியே அணைத்தான் --இந்த
தையல் மீது உள்ள தாகத்தையும் தணித்தான் (மஞ்சள்)
சரணங்கள்
அஞ்சன வண்ணன் ஆருயிர்க் கண்ணனோ --என்றும்
அடியவர் மனம் குளிரும் ஆறுமுக வேலவனோ
வெஞ்சமர் களத்தினில் விளையாடும் வீரனோ --எங்கும்
வெற்றி பல குவிக்கும் வேங்கையின் மை ந்தனோ (மஞ்சள் )
கையில் என்னை எடுத்தான் கனி யமுதம் கொடுத்தான் -இரு
கண்களால் வளைத்து என்னிடம் காமரசம் படித்தான்
பொய்யினில் பிறந்த புலவனோ நானறியேன் --இந்த
பூங்கொடி மீதினிலே காதல் போரினைத் தொடுத்த (மஞ்சள் )
வில்லாலடி பட்டது போல வேதனை மீறுதடி -காதல்
வேட்கை எனை வருத்த வேறெங்கோ சென்றானடி
பொல்லாத ஆசைகள் புதிதாய்க் கிளம்புதடி -என்னை
புரிந்தவன் அவனை எண்ணி புகலிடம் தேடுதடி (மஞ்சள் )
இரவென்றும் பகலென்றும் இருப்பது மறந்ததடி --இன்று
என்னவன் வரவில்லையென ஏக்கம் பிறக்குதடி
உறவினை நாடியே உள்ளம் அலையுதடி --அந்த
உத்தமன் அழகன் ராஜ முத்திரை பதித்தானடி (மஞ்சள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக