தேனே போற்றி திருவே போற்றி
திருவிளையாடல் புரிந்தாய் போற்றி
ஊனே போற்றி உணர்வே போற்றி
உலகினை ஆளும் உத்தமா போற்றி
மானும் மழுவுடன் மகிழ்ந்தாய் போற்றி
மையல் உமைமேல் கொண்டாய் போற்றி
தேனும் பாலும் கலந்தாய் போற்றி
தெருவினில் மண்ணினை சுமந்தாய் போற்றி
நீரும் நிலமுமாய் ஆனாய் போற்றி
நினைவில் வாழும் நிர்மலன் போற்றி
பாரோர் வணங்கிடும் பரமனே போற்றி
பணிந்தோர் போற்றிடும் பகவான் போற்றி
எண்ணும் எழுத்துமாய் இருக்கிறாய் போற்றி
இக பர சுகமும் அருள்வாய் போற்றி
கண்ணப்ப நாயனின் கண்ணே போற்றி
கதிர் வேலவனின் தந்தையே போற்றி
இடையினில் மான் தோல் அணிந்தாய் போற்றி
ஏழைகள் வாழ்வில் ஒளியே போற்றி
இமவான் மகளினை மணந்தாய் போற்றி
ஈகை மனதைக் கொண்டாய் போற்றி
பொன்னும் மணியும் தந்தாய் போற்றி
பூக்கள் போல மலர்ந்தாய் போற்றி
கண்ணும் இமையுமாய் கலந்தாய் போற்றி
கருணைக் கடலே போற்றி போற்றியே
திருவிளையாடல் புரிந்தாய் போற்றி
ஊனே போற்றி உணர்வே போற்றி
உலகினை ஆளும் உத்தமா போற்றி
மானும் மழுவுடன் மகிழ்ந்தாய் போற்றி
மையல் உமைமேல் கொண்டாய் போற்றி
தேனும் பாலும் கலந்தாய் போற்றி
தெருவினில் மண்ணினை சுமந்தாய் போற்றி
நீரும் நிலமுமாய் ஆனாய் போற்றி
நினைவில் வாழும் நிர்மலன் போற்றி
பாரோர் வணங்கிடும் பரமனே போற்றி
பணிந்தோர் போற்றிடும் பகவான் போற்றி
எண்ணும் எழுத்துமாய் இருக்கிறாய் போற்றி
இக பர சுகமும் அருள்வாய் போற்றி
கண்ணப்ப நாயனின் கண்ணே போற்றி
கதிர் வேலவனின் தந்தையே போற்றி
இடையினில் மான் தோல் அணிந்தாய் போற்றி
ஏழைகள் வாழ்வில் ஒளியே போற்றி
இமவான் மகளினை மணந்தாய் போற்றி
ஈகை மனதைக் கொண்டாய் போற்றி
பொன்னும் மணியும் தந்தாய் போற்றி
பூக்கள் போல மலர்ந்தாய் போற்றி
கண்ணும் இமையுமாய் கலந்தாய் போற்றி
கருணைக் கடலே போற்றி போற்றியே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக