நீராடும் பொழுதில் நிலைமாறிப் போனேன் --உன்
நினைவாலே நானும் தடம் மாறிப் போனேன்
வேரோடு சாய்த்தாய் உன் விழியாலே வென்றாய் --இதை
விளக்கமாய் நானென்ன வெளியிலே சொல்ல
பேரோடு புகழும் பல பின்னணிகள் இருந்தும் --என்னை
ஊரார்கள் இகழும் உன்மத்தன் ஆனேன்
கூறாக்கி எனையேன் கொல்கிறாய் பெண்ணே --இங்கு
குலவிட வந்ததில் கோபம் தானோ கண்ணே
சிரித்தாலே போதும் பல ஜீவன்கள் பறிபோகும் --என்
சிங்காரச் சிலையே சீற்றமினி வேண்டாம்
எரிக்கின்ற நிலவும் என்று இளமையாகும் --என்று
ஏந்திழையின் மனமோ இயல்பாக மாறும்
விழி வீசிக் கொல்லுதல் வேலையோ பொன்னே --உன்
விரல் பட்டால் போதும் வேதனைகள் தீரும்
பழி சொல்லல் தகுமோ தங்கப் பதுமையே சொல்லு --தினம்
பாத மலர் பணிவேன் என்பரிசாகக் கொள்ளு
தனியாக போனால் தாங்காது மனசு --உனக்கு
துணையாக வந்து தோழனாய்க் காப்பேன்
இனியேனும் நெஞ்சினில் இரக்கமும் வருமோ --என்
எழில் ராணி உனை யெண்ணி ஏங்குதல் முறையோ
மலர் சூட்டி மங்கையுனை மணந்திடவும் வேண்டும் --உனது
மடியினில் சாய்ந்து நல்ல சுகம் நான் காணவேண்டும்
புலர்கின்ற பொழுதும் இனிப் புதுமையாய்த் தோன்றும் --நீயும்
புரிந்து கொண்டாலே எனக்கும் புதுவாழ்வு மலரும்
நினைவாலே நானும் தடம் மாறிப் போனேன்
வேரோடு சாய்த்தாய் உன் விழியாலே வென்றாய் --இதை
விளக்கமாய் நானென்ன வெளியிலே சொல்ல
பேரோடு புகழும் பல பின்னணிகள் இருந்தும் --என்னை
ஊரார்கள் இகழும் உன்மத்தன் ஆனேன்
கூறாக்கி எனையேன் கொல்கிறாய் பெண்ணே --இங்கு
குலவிட வந்ததில் கோபம் தானோ கண்ணே
சிரித்தாலே போதும் பல ஜீவன்கள் பறிபோகும் --என்
சிங்காரச் சிலையே சீற்றமினி வேண்டாம்
எரிக்கின்ற நிலவும் என்று இளமையாகும் --என்று
ஏந்திழையின் மனமோ இயல்பாக மாறும்
விழி வீசிக் கொல்லுதல் வேலையோ பொன்னே --உன்
விரல் பட்டால் போதும் வேதனைகள் தீரும்
பழி சொல்லல் தகுமோ தங்கப் பதுமையே சொல்லு --தினம்
பாத மலர் பணிவேன் என்பரிசாகக் கொள்ளு
தனியாக போனால் தாங்காது மனசு --உனக்கு
துணையாக வந்து தோழனாய்க் காப்பேன்
இனியேனும் நெஞ்சினில் இரக்கமும் வருமோ --என்
எழில் ராணி உனை யெண்ணி ஏங்குதல் முறையோ
மலர் சூட்டி மங்கையுனை மணந்திடவும் வேண்டும் --உனது
மடியினில் சாய்ந்து நல்ல சுகம் நான் காணவேண்டும்
புலர்கின்ற பொழுதும் இனிப் புதுமையாய்த் தோன்றும் --நீயும்
புரிந்து கொண்டாலே எனக்கும் புதுவாழ்வு மலரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக