பல்லவி
உலகாள வந்த எங்கள் உத்தமியே அம்மா --உன்
பாதம் சரண் புகவே வந்தோம் தெம்பாய் (உலகாள )
அனுபல்லவி
நிலையாக வாழ்வதற்கு நீ யருள வேண்டும் --தினம்
நினைக்கின்ற உயிர்களுக்கு நீ தானே சொர்க்கம் (உலகாள )
சரணங்கள்
அழகான திருக்கோலம் யாம் காண வேண்டும் --உனது
அருளாலே வாழ்வினில் நலம் பேண வேண்டும்
விழி திறந்து நீ பார்க்க வினையெலாம் ஓடும் --நிறைய
வெற்றிகளும் செல்வமும் நிறைவாகச் சேரும் (உலகாள )
அழகாக இரு பிள்ளைகள் அம்மா நீ பெற்றாய் --எங்கள்
ஆனைமுகன் முருகன் அன்பான செல்வமே
கரையாத மனமும்கூட கண்டாலே கரையும் --இங்கு
கற்பகமே நிர்மலமே காத்திட வருவாய் (உலகாள )
சிவனாரின் இட பாகம் செல்வமே நீயே --உன்னை
சிந்தையில் நினைப்பவர்க்கு சிறப்புகள் சேரும்
புவி யாள வந்திட்ட எங்கள் புவனேஸ்வரித் தாயே --என்றும்
புகழ் பாடி வாழ்வதுவே பொன்னரும் துணையம்மா (உலகாள )
வளமோடு நலம் யாவும் வரமாக வேண்டும் --உனது
வற்றாத கருணை மழை வாழ்வதற்கு வேண்டும்
நிலம் வாழும் மனிதர்க்கு நிம்மதியைத் தருவாய் --எங்கள்
நேசமே பாசமே நித்தில வல்லியே அம்மா (உலகாள )
உலகாள வந்த எங்கள் உத்தமியே அம்மா --உன்
பாதம் சரண் புகவே வந்தோம் தெம்பாய் (உலகாள )
அனுபல்லவி
நிலையாக வாழ்வதற்கு நீ யருள வேண்டும் --தினம்
நினைக்கின்ற உயிர்களுக்கு நீ தானே சொர்க்கம் (உலகாள )
சரணங்கள்
அழகான திருக்கோலம் யாம் காண வேண்டும் --உனது
அருளாலே வாழ்வினில் நலம் பேண வேண்டும்
விழி திறந்து நீ பார்க்க வினையெலாம் ஓடும் --நிறைய
வெற்றிகளும் செல்வமும் நிறைவாகச் சேரும் (உலகாள )
அழகாக இரு பிள்ளைகள் அம்மா நீ பெற்றாய் --எங்கள்
ஆனைமுகன் முருகன் அன்பான செல்வமே
கரையாத மனமும்கூட கண்டாலே கரையும் --இங்கு
கற்பகமே நிர்மலமே காத்திட வருவாய் (உலகாள )
சிவனாரின் இட பாகம் செல்வமே நீயே --உன்னை
சிந்தையில் நினைப்பவர்க்கு சிறப்புகள் சேரும்
புவி யாள வந்திட்ட எங்கள் புவனேஸ்வரித் தாயே --என்றும்
புகழ் பாடி வாழ்வதுவே பொன்னரும் துணையம்மா (உலகாள )
வளமோடு நலம் யாவும் வரமாக வேண்டும் --உனது
வற்றாத கருணை மழை வாழ்வதற்கு வேண்டும்
நிலம் வாழும் மனிதர்க்கு நிம்மதியைத் தருவாய் --எங்கள்
நேசமே பாசமே நித்தில வல்லியே அம்மா (உலகாள )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக