செவ்வாய், 22 மே, 2018

புவனேஸ்வரி 450

                                பல்லவி
உலகாள  வந்த  எங்கள்  உத்தமியே  அம்மா --உன்
 பாதம்  சரண்  புகவே  வந்தோம்  தெம்பாய்     (உலகாள )
                                அனுபல்லவி
நிலையாக  வாழ்வதற்கு   நீ யருள  வேண்டும் --தினம்
நினைக்கின்ற  உயிர்களுக்கு  நீ தானே  சொர்க்கம்  (உலகாள )

                                சரணங்கள்
அழகான  திருக்கோலம்   யாம்  காண  வேண்டும்  --உனது
அருளாலே  வாழ்வினில்  நலம்  பேண  வேண்டும்
விழி திறந்து   நீ  பார்க்க  வினையெலாம்  ஓடும் --நிறைய
வெற்றிகளும்  செல்வமும்   நிறைவாகச்  சேரும்    (உலகாள )

அழகாக  இரு  பிள்ளைகள்  அம்மா  நீ   பெற்றாய்  --எங்கள்
ஆனைமுகன்  முருகன்   அன்பான  செல்வமே
கரையாத  மனமும்கூட   கண்டாலே  கரையும் --இங்கு
கற்பகமே  நிர்மலமே  காத்திட  வருவாய்  (உலகாள )

சிவனாரின்  இட பாகம்   செல்வமே  நீயே --உன்னை
சிந்தையில்  நினைப்பவர்க்கு  சிறப்புகள்  சேரும்
புவி யாள  வந்திட்ட  எங்கள்  புவனேஸ்வரித்   தாயே --என்றும்
புகழ்  பாடி  வாழ்வதுவே   பொன்னரும்  துணையம்மா  (உலகாள )

வளமோடு  நலம் யாவும்  வரமாக  வேண்டும்  --உனது
வற்றாத  கருணை மழை   வாழ்வதற்கு  வேண்டும்
நிலம்  வாழும்  மனிதர்க்கு  நிம்மதியைத்  தருவாய் --எங்கள்
நேசமே  பாசமே  நித்தில  வல்லியே  அம்மா  (உலகாள )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக