வியாழன், 24 மே, 2018

திருமகள் 454

 அலைகள்  மிதக்கும்  கடலில்  வாசம் --எங்கள்
 அம்மா  என்றும்  எமக்கு  அமுதக்  கலசம்
நிலையை  உயர்த்தும்  நிறைந்த  செல்வம் --உங்களை
 நினைந்த  பேர்க்கு  என்றுமே  லாபம்

கடலினைக்  கடைந்திட  வெளியில்  வந்தாய் --இங்கு
கற்பகமாய்  தினமும்  அருளைப்  பொழிவாய்
சுடலையன்  உமக்கு  சொந்த  அண்ணன் --இதனை
சொல்லிப்  போற்றி  சுகமே  பெறுவோம்

அள்ளி  யள்ளிக்  கொடுத்து  சிரிப்பாய் --ஏழை
அவலம்  நீங்கவே  மருந்தும்  கொடுப்பாய்
கள்ளம்  அறியாப்  பிள்ளை  மனமே --எம்மையும்
காத்து  நிற்பது  உந்தன்  கருணை க்  குணமே

மாலின்  மனதில்  மங்கை  உள்ளாய் --எங்கள்
மனைகள்  தன்னில்  வசிப்பாய்  அம்மா
காலம்  முழுதும்  உன் காலில்  கிடப்போம் --வரும்
கவலைகள்  தன்னையே  தீர்த்து  வைப்பாய் 

எங்கும்  மகிழ்வு  பொங்க  வேண்டும் --மண்ணில்
இன்னும்  நாங்கள்  உழைக்க  வேண்டும்
பொங்கும்  நிலவே  எங்கள்  புனித வல்லி --உமை
புரிந்து  கொண்டவர்  புனிதம்  பெறுவார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக