அலைகள் மிதக்கும் கடலில் வாசம் --எங்கள்
அம்மா என்றும் எமக்கு அமுதக் கலசம்
நிலையை உயர்த்தும் நிறைந்த செல்வம் --உங்களை
நினைந்த பேர்க்கு என்றுமே லாபம்
கடலினைக் கடைந்திட வெளியில் வந்தாய் --இங்கு
கற்பகமாய் தினமும் அருளைப் பொழிவாய்
சுடலையன் உமக்கு சொந்த அண்ணன் --இதனை
சொல்லிப் போற்றி சுகமே பெறுவோம்
அள்ளி யள்ளிக் கொடுத்து சிரிப்பாய் --ஏழை
அவலம் நீங்கவே மருந்தும் கொடுப்பாய்
கள்ளம் அறியாப் பிள்ளை மனமே --எம்மையும்
காத்து நிற்பது உந்தன் கருணை க் குணமே
மாலின் மனதில் மங்கை உள்ளாய் --எங்கள்
மனைகள் தன்னில் வசிப்பாய் அம்மா
காலம் முழுதும் உன் காலில் கிடப்போம் --வரும்
கவலைகள் தன்னையே தீர்த்து வைப்பாய்
எங்கும் மகிழ்வு பொங்க வேண்டும் --மண்ணில்
இன்னும் நாங்கள் உழைக்க வேண்டும்
பொங்கும் நிலவே எங்கள் புனித வல்லி --உமை
புரிந்து கொண்டவர் புனிதம் பெறுவார்
அம்மா என்றும் எமக்கு அமுதக் கலசம்
நிலையை உயர்த்தும் நிறைந்த செல்வம் --உங்களை
நினைந்த பேர்க்கு என்றுமே லாபம்
கடலினைக் கடைந்திட வெளியில் வந்தாய் --இங்கு
கற்பகமாய் தினமும் அருளைப் பொழிவாய்
சுடலையன் உமக்கு சொந்த அண்ணன் --இதனை
சொல்லிப் போற்றி சுகமே பெறுவோம்
அள்ளி யள்ளிக் கொடுத்து சிரிப்பாய் --ஏழை
அவலம் நீங்கவே மருந்தும் கொடுப்பாய்
கள்ளம் அறியாப் பிள்ளை மனமே --எம்மையும்
காத்து நிற்பது உந்தன் கருணை க் குணமே
மாலின் மனதில் மங்கை உள்ளாய் --எங்கள்
மனைகள் தன்னில் வசிப்பாய் அம்மா
காலம் முழுதும் உன் காலில் கிடப்போம் --வரும்
கவலைகள் தன்னையே தீர்த்து வைப்பாய்
எங்கும் மகிழ்வு பொங்க வேண்டும் --மண்ணில்
இன்னும் நாங்கள் உழைக்க வேண்டும்
பொங்கும் நிலவே எங்கள் புனித வல்லி --உமை
புரிந்து கொண்டவர் புனிதம் பெறுவார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக