வெள்ளி, 18 மே, 2018

நிரந்தரம் 444

                         பல்லவி
எழிலார்  முருகா  என்றும்  இளமை  முருகா --நீ
இமைகள்  திறந்தே  எமையே  காப்பாய்
                         அனுபல்லவி
பழமே  முருகா   எங்கள்  திருப்பழனியின்   தலைவா --நற்
பதமே   யருள  இன்றே  பறந்து  வா  முருகா  (எழிலார் )
                         சரணங்கள்
திருவே  ஒளியே   எங்கள்  திருப்புகழ்  மணியே --உனை
தினமும்  பணிந்தால்  வாழ்வு  தேனாய்  இனிக்குமே
வறுமை  யகலும்  வளங்கள்  கொழிக்கும் --என்றும்
வாழ்த்திப்  பாடினால்  எங்கள்  வாயும்  இனிக்கும்  (எழிலார் )

அலைமேல்  துயிலும்   அரியுன்   மாமன் --அவன்
அருகில்   சிரிக்கும்  அழகியுன்  அத்தை
கலையாய்த்  திகழும்  கணேசனோ  அண்ணன் --நீ
கருணை  பொழிந்திடில்  கவலைகள்  நீங்கிடும்  (எழிலார் )

உலகினில்  நிரந்தரம்  உன்பெயர்  அல்லவா --உந்தன்
புகழ்  தன்னையே   நாங்கள்  இன்னும்  சொல்லவா 
புலவோர்  பாடிடும்   நற்  புனிதனே  முருகா --என்றும்
புகழ்வோம்  சிறப்போம்  பொன்மயிலேறி   நீ  வா (எழிலார் )

தமிழினில்  கலந்த  எங்கள்  தங்கமும்  நீயே --உனது
தாளடி  பணிபவர்  வாழ்வில்  தரங்கள்  உயரும்
அழகாய்  சிரித்திடும்   அப்பனே  முருகா --தூய
அன்பினை  நினைத்தால்  எங்கள்  அகமோ  சிலிர்க்கும்  (எழிலார் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக