பல்லவி
எழிலார் முருகா என்றும் இளமை முருகா --நீ
இமைகள் திறந்தே எமையே காப்பாய்
அனுபல்லவி
பழமே முருகா எங்கள் திருப்பழனியின் தலைவா --நற்
பதமே யருள இன்றே பறந்து வா முருகா (எழிலார் )
சரணங்கள்
திருவே ஒளியே எங்கள் திருப்புகழ் மணியே --உனை
தினமும் பணிந்தால் வாழ்வு தேனாய் இனிக்குமே
வறுமை யகலும் வளங்கள் கொழிக்கும் --என்றும்
வாழ்த்திப் பாடினால் எங்கள் வாயும் இனிக்கும் (எழிலார் )
அலைமேல் துயிலும் அரியுன் மாமன் --அவன்
அருகில் சிரிக்கும் அழகியுன் அத்தை
கலையாய்த் திகழும் கணேசனோ அண்ணன் --நீ
கருணை பொழிந்திடில் கவலைகள் நீங்கிடும் (எழிலார் )
உலகினில் நிரந்தரம் உன்பெயர் அல்லவா --உந்தன்
புகழ் தன்னையே நாங்கள் இன்னும் சொல்லவா
புலவோர் பாடிடும் நற் புனிதனே முருகா --என்றும்
புகழ்வோம் சிறப்போம் பொன்மயிலேறி நீ வா (எழிலார் )
தமிழினில் கலந்த எங்கள் தங்கமும் நீயே --உனது
தாளடி பணிபவர் வாழ்வில் தரங்கள் உயரும்
அழகாய் சிரித்திடும் அப்பனே முருகா --தூய
அன்பினை நினைத்தால் எங்கள் அகமோ சிலிர்க்கும் (எழிலார் )
எழிலார் முருகா என்றும் இளமை முருகா --நீ
இமைகள் திறந்தே எமையே காப்பாய்
அனுபல்லவி
பழமே முருகா எங்கள் திருப்பழனியின் தலைவா --நற்
பதமே யருள இன்றே பறந்து வா முருகா (எழிலார் )
சரணங்கள்
திருவே ஒளியே எங்கள் திருப்புகழ் மணியே --உனை
தினமும் பணிந்தால் வாழ்வு தேனாய் இனிக்குமே
வறுமை யகலும் வளங்கள் கொழிக்கும் --என்றும்
வாழ்த்திப் பாடினால் எங்கள் வாயும் இனிக்கும் (எழிலார் )
அலைமேல் துயிலும் அரியுன் மாமன் --அவன்
அருகில் சிரிக்கும் அழகியுன் அத்தை
கலையாய்த் திகழும் கணேசனோ அண்ணன் --நீ
கருணை பொழிந்திடில் கவலைகள் நீங்கிடும் (எழிலார் )
உலகினில் நிரந்தரம் உன்பெயர் அல்லவா --உந்தன்
புகழ் தன்னையே நாங்கள் இன்னும் சொல்லவா
புலவோர் பாடிடும் நற் புனிதனே முருகா --என்றும்
புகழ்வோம் சிறப்போம் பொன்மயிலேறி நீ வா (எழிலார் )
தமிழினில் கலந்த எங்கள் தங்கமும் நீயே --உனது
தாளடி பணிபவர் வாழ்வில் தரங்கள் உயரும்
அழகாய் சிரித்திடும் அப்பனே முருகா --தூய
அன்பினை நினைத்தால் எங்கள் அகமோ சிலிர்க்கும் (எழிலார் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக