கவலையின்றி காலம் சென்றது தோழியே --அந்த
கள்வன் வந்த போதிலே கலக்கமானேன் மனதிலே
புயலைப் போலவே எனது நெஞ்சில் புகுந்தவன் யாரடி --அதனை
தெரிந்து கொண்டு என்னிடம் இன்றே சொல்லு தோழியே
நிலவும் வாழ்வும் வெறுத்துப் போனேன் --அவனை
நினைத்து நினைத்து மனம் உருகலானேன்
பலம் அனைத்தும் இழந்து போனேன் --இளம்
பருவ தாகம் தன்னில் வீழ்ந்தேன்
எண்ண ஓட்டம் குறைந்து போச்சு --இன்னும்
இதயத் துடிப்பு அதிகம் ஆச்சு
மன்னவனை நினைச்சு மயக்கமாச்சு --என்று
வருவானென ஏக்கமும் கூடிப்போச்சு
வெளியில் சொல்ல எனக்கு வழியுமில்லை --வந்த
விரக தாபம் இன்னும் தீரவில்லை
விழியில் புகுந்து அவனே விஷமம் செய்தான் --என்னை
வேதனைத் தீயினில் வெம்பிட வைத்தான்
கண்களில் கண்ணீர் வற்றிப் போச்சு --இன்னும்
அவனது காதலெனையும் வதைக்க லாச்சு
பெண்ணாய்ப் பிறந்தேன் என்ன செய்வேன் --பிரிய
தோழி எனக்குச் சொல்லேன் ஒரு நல்ல செய்தி
கள்வன் வந்த போதிலே கலக்கமானேன் மனதிலே
புயலைப் போலவே எனது நெஞ்சில் புகுந்தவன் யாரடி --அதனை
தெரிந்து கொண்டு என்னிடம் இன்றே சொல்லு தோழியே
நிலவும் வாழ்வும் வெறுத்துப் போனேன் --அவனை
நினைத்து நினைத்து மனம் உருகலானேன்
பலம் அனைத்தும் இழந்து போனேன் --இளம்
பருவ தாகம் தன்னில் வீழ்ந்தேன்
எண்ண ஓட்டம் குறைந்து போச்சு --இன்னும்
இதயத் துடிப்பு அதிகம் ஆச்சு
மன்னவனை நினைச்சு மயக்கமாச்சு --என்று
வருவானென ஏக்கமும் கூடிப்போச்சு
வெளியில் சொல்ல எனக்கு வழியுமில்லை --வந்த
விரக தாபம் இன்னும் தீரவில்லை
விழியில் புகுந்து அவனே விஷமம் செய்தான் --என்னை
வேதனைத் தீயினில் வெம்பிட வைத்தான்
கண்களில் கண்ணீர் வற்றிப் போச்சு --இன்னும்
அவனது காதலெனையும் வதைக்க லாச்சு
பெண்ணாய்ப் பிறந்தேன் என்ன செய்வேன் --பிரிய
தோழி எனக்குச் சொல்லேன் ஒரு நல்ல செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக