கண்ணில் கண்டதும் காதல் கண்ணாளா --உன்
காந்தம் எந்தனை இழுக்குதே இந்நாளா
மின்னிடும் அழகினில் நீயொரு மன்மதனே --அன்பால்
நெருங்கிப் பழகிட எனக்கினி சம்மதமே
இணைந்தே ஒன்றாய் எங்குமே போவோமா --கனி
இதழ்களோடு சங்கமம் தினமும் செய்வோமா
நினைந்தே நெஞ்சில் உந்தனை வைத்தேனே --நீயும்
நித்தமும் என்னிடம் இருந்திட வரவேண்டும்
காற்றினை தூதாய் உன்னிடம் அனுப்பிடவா --நம்
காதல் பயிரை எந்நாளும் வளர்த்திடவா
தோற்றே போனேன் நானும் உன்னிடமே --உனது
தோள்களில் சாய்ந்து நானும் சுகம் காண்பேன்
நிலவினில் ஏறியெங்கும் வலம் வருவோம் --காதல்
நினைவிலே வாழ்வில் என்றும் நலம் பெறுவோம்
கலையின் மறுவடிவம் ஒன்றினி உருவாகும் --என்
கண்ணாளா நீதானே எனக்கு கலங்கரை விளக்கம்
இரண்டு என்பது இனிமேல் மூன்றாகும் --அந்த
இன்பமே இயற்கை வழங்கிடும் நற்சான்றாகும்
உறவாலே அன்பு வெள்ளம் கரை மீறும் --என்
உயிரே நீ பிரிந்திடில் பொன்னுயிர் பறந்தோடும்
காதலா நீயின்றே என்னிடம் வரவேண்டும் --உன்னால்
கணக்கின்றி பல பிள்ளைகள் நானும் பெறவேண்டும்
ஆதலால் அன்பே நீயுமென்னிடம் வருவாயே --என்
அல்லலைப் போக்கிட அள்ளியெனை அணைப்பாயே
காந்தம் எந்தனை இழுக்குதே இந்நாளா
மின்னிடும் அழகினில் நீயொரு மன்மதனே --அன்பால்
நெருங்கிப் பழகிட எனக்கினி சம்மதமே
இணைந்தே ஒன்றாய் எங்குமே போவோமா --கனி
இதழ்களோடு சங்கமம் தினமும் செய்வோமா
நினைந்தே நெஞ்சில் உந்தனை வைத்தேனே --நீயும்
நித்தமும் என்னிடம் இருந்திட வரவேண்டும்
காற்றினை தூதாய் உன்னிடம் அனுப்பிடவா --நம்
காதல் பயிரை எந்நாளும் வளர்த்திடவா
தோற்றே போனேன் நானும் உன்னிடமே --உனது
தோள்களில் சாய்ந்து நானும் சுகம் காண்பேன்
நிலவினில் ஏறியெங்கும் வலம் வருவோம் --காதல்
நினைவிலே வாழ்வில் என்றும் நலம் பெறுவோம்
கலையின் மறுவடிவம் ஒன்றினி உருவாகும் --என்
கண்ணாளா நீதானே எனக்கு கலங்கரை விளக்கம்
இரண்டு என்பது இனிமேல் மூன்றாகும் --அந்த
இன்பமே இயற்கை வழங்கிடும் நற்சான்றாகும்
உறவாலே அன்பு வெள்ளம் கரை மீறும் --என்
உயிரே நீ பிரிந்திடில் பொன்னுயிர் பறந்தோடும்
காதலா நீயின்றே என்னிடம் வரவேண்டும் --உன்னால்
கணக்கின்றி பல பிள்ளைகள் நானும் பெறவேண்டும்
ஆதலால் அன்பே நீயுமென்னிடம் வருவாயே --என்
அல்லலைப் போக்கிட அள்ளியெனை அணைப்பாயே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக