புதன், 23 மே, 2018

காதலா 452

 கண்ணில்  கண்டதும்   காதல்  கண்ணாளா --உன்
காந்தம்  எந்தனை  இழுக்குதே  இந்நாளா
 மின்னிடும்  அழகினில்  நீயொரு  மன்மதனே --அன்பால்
நெருங்கிப்  பழகிட   எனக்கினி  சம்மதமே

இணைந்தே  ஒன்றாய்  எங்குமே  போவோமா --கனி
இதழ்களோடு  சங்கமம்  தினமும்  செய்வோமா
நினைந்தே  நெஞ்சில்  உந்தனை  வைத்தேனே --நீயும்
நித்தமும்  என்னிடம்  இருந்திட  வரவேண்டும்

காற்றினை  தூதாய்   உன்னிடம்  அனுப்பிடவா --நம்
காதல்  பயிரை   எந்நாளும்   வளர்த்திடவா
தோற்றே  போனேன்   நானும்  உன்னிடமே --உனது
தோள்களில்  சாய்ந்து   நானும்  சுகம்  காண்பேன்

நிலவினில்  ஏறியெங்கும்   வலம்  வருவோம் --காதல்
நினைவிலே  வாழ்வில்  என்றும்  நலம்  பெறுவோம்
கலையின்  மறுவடிவம்  ஒன்றினி  உருவாகும் --என்
கண்ணாளா  நீதானே  எனக்கு  கலங்கரை  விளக்கம்

இரண்டு  என்பது  இனிமேல்  மூன்றாகும் --அந்த
   இன்பமே  இயற்கை  வழங்கிடும்  நற்சான்றாகும்
உறவாலே  அன்பு வெள்ளம்  கரை  மீறும் --என்
உயிரே   நீ பிரிந்திடில்   பொன்னுயிர்  பறந்தோடும்

காதலா  நீயின்றே   என்னிடம்  வரவேண்டும் --உன்னால்
கணக்கின்றி  பல பிள்ளைகள்  நானும்  பெறவேண்டும்
ஆதலால்  அன்பே   நீயுமென்னிடம்  வருவாயே --என்
அல்லலைப்  போக்கிட  அள்ளியெனை  அணைப்பாயே 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக