நிலையாய் இங்கே நிலைத்தவர் இல்லை -உனை
நினையாது வாழ்ந்தவர் ஜெயிப்பதும் இல்லை
கலையாய் கவியாய் கற்பகத் தருவாய் -எம்
கவலைகள் நீக்கிடும் காருண்ய மூர்த்தியே (நிலையாய் )
எல்லாம் இங்கே உந்தன் செயலே -மாந்தர்கள்
இருப்பதும் போவதும் உன் முடிவாலே
கல்லால மரத்தடியில் கனிந்த திருவே -இன்றே
கண் பார் எம்மையே காத்திட வருகவே (நிலையாய் )
இல்லார் இருப்பா ரெனினும் உன்மனம் வெள்ளை -இந்த
உலகமே உனதன்பு ஆட்சியின் எல்லை
நாளும் உழைப்பவர் நலமே பெறுவார் -எங்கள்
நாயகன் நினைத்தால் தானே நற்கதி கிடைக்கும் (நிலையாய் )
விடையினில் ஏறியே விரைந்து நீ வருக -தூய
வேள்வியின் நாயகா வினைகளைக் களைக
தடைகள் நீக்கியே தண்ணருள் பொழிக -உலகில்
தர்மம் தழைக்கவே தலைவனே வருகவே (நிலையாய் )
மலை மகள் பார்வதியின் மணவாளன் நீயே -உன்னை
மனதினில் நினைத்தவர் மகத்துவம் பெறுவார்
உலை வீழ் அரிசியாய் உழன்று தவிர்த்தோம் -நீ
உன்னருள் பொழிந்திடில் நன்னலம் பெறுவோம் (நிலையாய் )
நினையாது வாழ்ந்தவர் ஜெயிப்பதும் இல்லை
கலையாய் கவியாய் கற்பகத் தருவாய் -எம்
கவலைகள் நீக்கிடும் காருண்ய மூர்த்தியே (நிலையாய் )
எல்லாம் இங்கே உந்தன் செயலே -மாந்தர்கள்
இருப்பதும் போவதும் உன் முடிவாலே
கல்லால மரத்தடியில் கனிந்த திருவே -இன்றே
கண் பார் எம்மையே காத்திட வருகவே (நிலையாய் )
இல்லார் இருப்பா ரெனினும் உன்மனம் வெள்ளை -இந்த
உலகமே உனதன்பு ஆட்சியின் எல்லை
நாளும் உழைப்பவர் நலமே பெறுவார் -எங்கள்
நாயகன் நினைத்தால் தானே நற்கதி கிடைக்கும் (நிலையாய் )
விடையினில் ஏறியே விரைந்து நீ வருக -தூய
வேள்வியின் நாயகா வினைகளைக் களைக
தடைகள் நீக்கியே தண்ணருள் பொழிக -உலகில்
தர்மம் தழைக்கவே தலைவனே வருகவே (நிலையாய் )
மலை மகள் பார்வதியின் மணவாளன் நீயே -உன்னை
மனதினில் நினைத்தவர் மகத்துவம் பெறுவார்
உலை வீழ் அரிசியாய் உழன்று தவிர்த்தோம் -நீ
உன்னருள் பொழிந்திடில் நன்னலம் பெறுவோம் (நிலையாய் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக