வெள்ளி, 4 மே, 2018

கணிந்ததிருவே 411

 நிலையாய்  இங்கே  நிலைத்தவர்  இல்லை -உனை
நினையாது  வாழ்ந்தவர்  ஜெயிப்பதும்  இல்லை
கலையாய்  கவியாய்  கற்பகத்  தருவாய்  -எம்
கவலைகள்  நீக்கிடும்  காருண்ய  மூர்த்தியே  (நிலையாய் )

எல்லாம்  இங்கே  உந்தன்  செயலே -மாந்தர்கள்
இருப்பதும்  போவதும்   உன்  முடிவாலே
கல்லால  மரத்தடியில்  கனிந்த  திருவே -இன்றே
கண் பார்  எம்மையே  காத்திட  வருகவே   (நிலையாய் )

இல்லார்  இருப்பா  ரெனினும்  உன்மனம்  வெள்ளை -இந்த
உலகமே   உனதன்பு  ஆட்சியின்  எல்லை
நாளும்   உழைப்பவர்  நலமே  பெறுவார் -எங்கள்
நாயகன்   நினைத்தால் தானே  நற்கதி  கிடைக்கும் (நிலையாய் )

விடையினில்  ஏறியே  விரைந்து  நீ  வருக -தூய
வேள்வியின்  நாயகா  வினைகளைக்  களைக
தடைகள்  நீக்கியே  தண்ணருள்  பொழிக -உலகில்
தர்மம்  தழைக்கவே   தலைவனே  வருகவே  (நிலையாய் )

மலை  மகள்  பார்வதியின்   மணவாளன்  நீயே -உன்னை
மனதினில்  நினைத்தவர் மகத்துவம்  பெறுவார்
உலை  வீழ்  அரிசியாய்  உழன்று  தவிர்த்தோம் -நீ
உன்னருள்  பொழிந்திடில்  நன்னலம்  பெறுவோம் (நிலையாய் )


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக