செவ்வாய், 29 மே, 2018

புண்ணியம் 461

காயாய்  கனியாய்  நீயானாய் -என்
கண்ணா எல்லாம்  தேனானாய்
பெய்யும்  மழையில்  துளியாவாய் --தினம்
பேசும்    நாவில்  ஒலியானாய்

நினைவாய்  நெஞ்சில்  குடியானாய் --இங்கு
நேசம்  பாசம்  அன்பானாய்
கனவில்  வருகின்ற  பொருளானாய்  --நம்
கண்ணில்  ஒளியாய்  தெரிகின்றாய்

இல்லம்  முழுதும்  ஒளியானாய் --வானில்
இரவில்  தோன்றும்  மதியானாய்
கள்ளம்  அறியாச்  சிசுவானாய் --எம்
கவலை  தீர்க்கும்  நல் மருந்தானாய்

ராதை  மனதில்  துணையானாய் --என்றும்
நல்லவர்க்கு  உதவும்  குணமானாய்
வேதப்  பொருளாய்  உருவானாய் --இந்த
உலகம்  வியக்கும்  அருளானாய்

தர்மம்  காக்கும்  வடிவானாய் --வரும்
தாகம்  தீர்க்கும்  நீரானாய்
கர்மம்  போக்கும்  கண்ணியமே --உன்
காலடி  தொழுவது  புண்ணியமே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக