காயாய் கனியாய் நீயானாய் -என்
கண்ணா எல்லாம் தேனானாய்
பெய்யும் மழையில் துளியாவாய் --தினம்
பேசும் நாவில் ஒலியானாய்
நினைவாய் நெஞ்சில் குடியானாய் --இங்கு
நேசம் பாசம் அன்பானாய்
கனவில் வருகின்ற பொருளானாய் --நம்
கண்ணில் ஒளியாய் தெரிகின்றாய்
இல்லம் முழுதும் ஒளியானாய் --வானில்
இரவில் தோன்றும் மதியானாய்
கள்ளம் அறியாச் சிசுவானாய் --எம்
கவலை தீர்க்கும் நல் மருந்தானாய்
ராதை மனதில் துணையானாய் --என்றும்
நல்லவர்க்கு உதவும் குணமானாய்
வேதப் பொருளாய் உருவானாய் --இந்த
உலகம் வியக்கும் அருளானாய்
தர்மம் காக்கும் வடிவானாய் --வரும்
தாகம் தீர்க்கும் நீரானாய்
கர்மம் போக்கும் கண்ணியமே --உன்
காலடி தொழுவது புண்ணியமே
கண்ணா எல்லாம் தேனானாய்
பெய்யும் மழையில் துளியாவாய் --தினம்
பேசும் நாவில் ஒலியானாய்
நினைவாய் நெஞ்சில் குடியானாய் --இங்கு
நேசம் பாசம் அன்பானாய்
கனவில் வருகின்ற பொருளானாய் --நம்
கண்ணில் ஒளியாய் தெரிகின்றாய்
இல்லம் முழுதும் ஒளியானாய் --வானில்
இரவில் தோன்றும் மதியானாய்
கள்ளம் அறியாச் சிசுவானாய் --எம்
கவலை தீர்க்கும் நல் மருந்தானாய்
ராதை மனதில் துணையானாய் --என்றும்
நல்லவர்க்கு உதவும் குணமானாய்
வேதப் பொருளாய் உருவானாய் --இந்த
உலகம் வியக்கும் அருளானாய்
தர்மம் காக்கும் வடிவானாய் --வரும்
தாகம் தீர்க்கும் நீரானாய்
கர்மம் போக்கும் கண்ணியமே --உன்
காலடி தொழுவது புண்ணியமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக