திங்கள், 14 மே, 2018

கருணை மழை 437

                        பல்லவி
கருணை மழையே  எனக்கு  கதிநீ  யல்லவோ -உந்தன்
காலடி  வீழ்ந்தேன்   கருணை  புரிவாய்  (கருணை )
                       அனுபல்லவி
திருவே  தேனே   திகட்டா   இனிப்பே --உனை
தினமும்  தொழுதால்   பெறலாம்  களிப்பே  (கருணை )
                    சரணங்கள்
முதல்வா  முருகா  எங்கள்  முத்தமிழ்  செல்வா --நீ
முன் வந்திடிலோ   வல்வினை  தீரும்
இதழ்கள்  அழகு  நீ என்பது  அழகு --உலகில்
இன்னல்கள்  களைந்திட  இனிதே  வருவாய்  (கருணை )

துணைவா  தோழா  தோன்றிடும்  துணையே --உனை
துதித்தால்  போதும்  துன்பம்  விலகும்
இணையே  யில்லாத  எழிற்  பெரும்  ஜோதி --என்றும்
நினையே  தொழுவோம்  எமக்கது   நீதி  (கருணை )

எண்ணம்  எல்லாம்  எழிலாம்  முருகா  --இங்கு
எல்லோர்  மனதிலும்  இருப்பதும்  நீயே
கல்லாதவரை  கற்றிடச்  செய்வாய்  கந்தா --எங்கள்
கடம்பனும்  நீ தான்   காத்திட  வருவாய்  (கருணை )

பாடல்  வரிகளை  பாங்குடன்  அமைத்தாய் --உனது
பாதம்   பணிந்தால்   பகைகள்  விலகும்
நாடும்  அடியவர்க்கு  ஞானம்  அளிப்பாய் --உலகில்
நல்லவை  அருள்வதில்  வல்லவன்  நீ  முருகா  (கருணை ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக