பல்லவி
கருணை மழையே எனக்கு கதிநீ யல்லவோ -உந்தன்
காலடி வீழ்ந்தேன் கருணை புரிவாய் (கருணை )
அனுபல்லவி
திருவே தேனே திகட்டா இனிப்பே --உனை
தினமும் தொழுதால் பெறலாம் களிப்பே (கருணை )
சரணங்கள்
முதல்வா முருகா எங்கள் முத்தமிழ் செல்வா --நீ
முன் வந்திடிலோ வல்வினை தீரும்
இதழ்கள் அழகு நீ என்பது அழகு --உலகில்
இன்னல்கள் களைந்திட இனிதே வருவாய் (கருணை )
துணைவா தோழா தோன்றிடும் துணையே --உனை
துதித்தால் போதும் துன்பம் விலகும்
இணையே யில்லாத எழிற் பெரும் ஜோதி --என்றும்
நினையே தொழுவோம் எமக்கது நீதி (கருணை )
எண்ணம் எல்லாம் எழிலாம் முருகா --இங்கு
எல்லோர் மனதிலும் இருப்பதும் நீயே
கல்லாதவரை கற்றிடச் செய்வாய் கந்தா --எங்கள்
கடம்பனும் நீ தான் காத்திட வருவாய் (கருணை )
பாடல் வரிகளை பாங்குடன் அமைத்தாய் --உனது
பாதம் பணிந்தால் பகைகள் விலகும்
நாடும் அடியவர்க்கு ஞானம் அளிப்பாய் --உலகில்
நல்லவை அருள்வதில் வல்லவன் நீ முருகா (கருணை )
கருணை மழையே எனக்கு கதிநீ யல்லவோ -உந்தன்
காலடி வீழ்ந்தேன் கருணை புரிவாய் (கருணை )
அனுபல்லவி
திருவே தேனே திகட்டா இனிப்பே --உனை
தினமும் தொழுதால் பெறலாம் களிப்பே (கருணை )
சரணங்கள்
முதல்வா முருகா எங்கள் முத்தமிழ் செல்வா --நீ
முன் வந்திடிலோ வல்வினை தீரும்
இதழ்கள் அழகு நீ என்பது அழகு --உலகில்
இன்னல்கள் களைந்திட இனிதே வருவாய் (கருணை )
துணைவா தோழா தோன்றிடும் துணையே --உனை
துதித்தால் போதும் துன்பம் விலகும்
இணையே யில்லாத எழிற் பெரும் ஜோதி --என்றும்
நினையே தொழுவோம் எமக்கது நீதி (கருணை )
எண்ணம் எல்லாம் எழிலாம் முருகா --இங்கு
எல்லோர் மனதிலும் இருப்பதும் நீயே
கல்லாதவரை கற்றிடச் செய்வாய் கந்தா --எங்கள்
கடம்பனும் நீ தான் காத்திட வருவாய் (கருணை )
பாடல் வரிகளை பாங்குடன் அமைத்தாய் --உனது
பாதம் பணிந்தால் பகைகள் விலகும்
நாடும் அடியவர்க்கு ஞானம் அளிப்பாய் --உலகில்
நல்லவை அருள்வதில் வல்லவன் நீ முருகா (கருணை )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக