தொந்தி வயிற்றோனே தொப்பைக் கணபதியே --இன்று
வந்தனை சொல்லி வாழ்த்தி ப் பாடுகிறோம்
மந்த நிலை அகற்றி இங்கு மகிழ்ச்சி பொங்க வேணும் --நாங்க
சொந்த சனம் கூடியிக்கே துதி செய்தோம் கேளுமய்யா (தொந்தி )
ஆற்றங்கரை யருகே அழகான மரத்தடியில் --நன்கு
வீற்றிருக்கும் எங்கள் குல வெற்றி விநாயகரே
சோற்றுப் பஞ்சம் பெருகியே சோதனை யாச்சு தய்யா --ஒரு
நாற்று ம் நடவாமல் நாங்க படும் துன்பம் கோடியய்யா (தொந்தி )
தம்பியின் மணமுடிக்க தாவி வந்த நல்லவரே -உலகில்
தருக்கர் பகையொழிக்க தாரணியில் வந்தவரே
நம்பியுனை வேண்டுகிறோம் நன்மைகள் செய்திடய்யா --நாளும்
நானூறு பூசை போட்டு நல்லபடி கும்பிடுவோம் (தொந்தி )
சூறைத் தேங்காய்கள் ஜோராக உடைத்திடுவோம் --இந்த
பாரைச் செழிக்க வைக்க பாங்குடனே வரவேணும்
ஊரை க் காப்பதற்கு உம்மை விட்டால் யாருமில்லை --அந்த
உத்தமி பார்வதியின் உள்ளம் கவர்ந்தவனே (தொந்தி )
பொரி கடலை அப்பம் பல பூக்கள் வகையுடனே --இனிப்பு
பொங்கலிட்டு வேண்டுகிறோம் பூபாலன் மருமகனே
பானை வயிரினுக்கு பால் பாயசம் தந்திடுவோம் =இந்த
பாரெல்லாம் வளம் கொழிக்க பரவசமாய் வந்திடய்யா (தொந்தி )
வந்தனை சொல்லி வாழ்த்தி ப் பாடுகிறோம்
மந்த நிலை அகற்றி இங்கு மகிழ்ச்சி பொங்க வேணும் --நாங்க
சொந்த சனம் கூடியிக்கே துதி செய்தோம் கேளுமய்யா (தொந்தி )
ஆற்றங்கரை யருகே அழகான மரத்தடியில் --நன்கு
வீற்றிருக்கும் எங்கள் குல வெற்றி விநாயகரே
சோற்றுப் பஞ்சம் பெருகியே சோதனை யாச்சு தய்யா --ஒரு
நாற்று ம் நடவாமல் நாங்க படும் துன்பம் கோடியய்யா (தொந்தி )
தம்பியின் மணமுடிக்க தாவி வந்த நல்லவரே -உலகில்
தருக்கர் பகையொழிக்க தாரணியில் வந்தவரே
நம்பியுனை வேண்டுகிறோம் நன்மைகள் செய்திடய்யா --நாளும்
நானூறு பூசை போட்டு நல்லபடி கும்பிடுவோம் (தொந்தி )
சூறைத் தேங்காய்கள் ஜோராக உடைத்திடுவோம் --இந்த
பாரைச் செழிக்க வைக்க பாங்குடனே வரவேணும்
ஊரை க் காப்பதற்கு உம்மை விட்டால் யாருமில்லை --அந்த
உத்தமி பார்வதியின் உள்ளம் கவர்ந்தவனே (தொந்தி )
பொரி கடலை அப்பம் பல பூக்கள் வகையுடனே --இனிப்பு
பொங்கலிட்டு வேண்டுகிறோம் பூபாலன் மருமகனே
பானை வயிரினுக்கு பால் பாயசம் தந்திடுவோம் =இந்த
பாரெல்லாம் வளம் கொழிக்க பரவசமாய் வந்திடய்யா (தொந்தி )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக