கண்ணில் தோன்றும் உயிர்கள் யாவும் --அந்த
கண்ணன் செய்திடும் வேலையே
மண்ணில் மழையாய் வருவான் அவனே --இதனை
எண்ணிப் பார்த்து ஏற்றம் கொண்டிடு தோழனே
வானம் கடல் பூமி யாவும் வள்ளல் தந்த சீதனம் --இதை
வழங்கியே நம்மை வாழ வைக்கும் அவனது நற்குணம்
தோன்றிடும் துன்பங்கள் போக்கிட தோழனாக வருபவன் --வரும்
தொல்லை நீக்கி வாழ்வில் இன்பத்தை யள்ளிக் கொடுப்பவன்
அலறித் தவிக்கும் ஏழையர்க்கு அடைக்கலமாய் ஆனவன் --நமக்கு
அன்பு பாசம் நன்றி யென அனைத்தும் சொல்லிக் கொடுப்பவன்
புலரும் பொழுதாய் பூத்த மலராய் புத்துணர்ச்சி தருபவன் --இங்கு
பொறுமையோடு வாழ்பவர்க்கு பொங்கி செல்வங்கள் வழியுமே
கண்ணில் கருணை கருத்தில் தெளிவு கடவுள் நமக்கு தந்தது --இதனை
கருத்தில் கொண்டால் காலம் நமக்கு நல்லது
மண்ணில் உள்ள அனைவரும் மாயவனாரின் பிள்ளைகள் --இனி
மனதில் கொண்டால் இன்னும் மகிழ்ச்சி பெருகிடும் மக்களே
ஏங்கியே சோம்பி இருந்து விட்டால் போதுமா --நீ
எடுத்த பணியை சிறப்பாய் முடித்திட வேண்டாமா ?
தூங்கிக் கிடந்த நிலையினை மாற்ற துணிந்து எழுக --உனக்கு
தூண்டா விளக்காய் வழியைக் காட்ட வருவானே துணைவனாய்
கண்ணன் செய்திடும் வேலையே
மண்ணில் மழையாய் வருவான் அவனே --இதனை
எண்ணிப் பார்த்து ஏற்றம் கொண்டிடு தோழனே
வானம் கடல் பூமி யாவும் வள்ளல் தந்த சீதனம் --இதை
வழங்கியே நம்மை வாழ வைக்கும் அவனது நற்குணம்
தோன்றிடும் துன்பங்கள் போக்கிட தோழனாக வருபவன் --வரும்
தொல்லை நீக்கி வாழ்வில் இன்பத்தை யள்ளிக் கொடுப்பவன்
அலறித் தவிக்கும் ஏழையர்க்கு அடைக்கலமாய் ஆனவன் --நமக்கு
அன்பு பாசம் நன்றி யென அனைத்தும் சொல்லிக் கொடுப்பவன்
புலரும் பொழுதாய் பூத்த மலராய் புத்துணர்ச்சி தருபவன் --இங்கு
பொறுமையோடு வாழ்பவர்க்கு பொங்கி செல்வங்கள் வழியுமே
கண்ணில் கருணை கருத்தில் தெளிவு கடவுள் நமக்கு தந்தது --இதனை
கருத்தில் கொண்டால் காலம் நமக்கு நல்லது
மண்ணில் உள்ள அனைவரும் மாயவனாரின் பிள்ளைகள் --இனி
மனதில் கொண்டால் இன்னும் மகிழ்ச்சி பெருகிடும் மக்களே
ஏங்கியே சோம்பி இருந்து விட்டால் போதுமா --நீ
எடுத்த பணியை சிறப்பாய் முடித்திட வேண்டாமா ?
தூங்கிக் கிடந்த நிலையினை மாற்ற துணிந்து எழுக --உனக்கு
தூண்டா விளக்காய் வழியைக் காட்ட வருவானே துணைவனாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக