வெள்ளி, 11 மே, 2018

பரமசிவம் 432

 இன்னுயிர்  காத்திடும்  ஏந்தலும்   நீயே --உன்
இணையடி  நினைத்தாலோ  இன்பங்கள்  நிறையும்
மண்ணகம்  செழித்திட   மனம்  கனிவாயே --நீயிங்கு
மழைதனைப்  பொழிந்திட   மாநிலம்  செழிக்கும்

கனி தரும்  இனிமை  உனது  கருணை  அன்றோ --நற்
கதி பெற  உன்காலடி   நம்பினோம் என்றுமே
புனிதரும்  போற்றிடும்  எங்கள்  புண்ணிய  சீலா --உனது
புகழினைப்  பாடிட  நாங்கள்  புண்ணியம்  செய்தோம்

இனிவரும்  நாட்களில்  என்றுமே  நினைப்போம் --இங்கே
இழந்தவை  எல்லாம்   எங்களுக்கே  சேரும்
தனியாய்  நடனம்  ஆடினாய்  தில்லையில் --முடிவில்
இறைவியை  நீதான்   அன்றே   வென்றனை

காலினைத்  தூக்கியே  ஆடிடும்  தெய்வமே --உனது
கண்களைத்  திறந்து    இன்முகம்  காட்டுமே
நாளிது  இன்றே   நன்மைகள்  கிடைக்கும் --அருமை
நாயகன்  நினைத்தால்   நல்லதே  நடக்கும்

சிவமெனச்  சொன்னால்   பயமினி  இல்லையே --உன்
சீரடி   தொட்டால்  துன்பங்கள்  விலகிடும்
பரம  சிவமே  எங்கள்   பார்வதி  நாதா --உமையே
பணிந்தோம்  தொழுதோம்    நீயும்  பதமருள்வாயே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக