இன்னுயிர் காத்திடும் ஏந்தலும் நீயே --உன்
இணையடி நினைத்தாலோ இன்பங்கள் நிறையும்
மண்ணகம் செழித்திட மனம் கனிவாயே --நீயிங்கு
மழைதனைப் பொழிந்திட மாநிலம் செழிக்கும்
கனி தரும் இனிமை உனது கருணை அன்றோ --நற்
கதி பெற உன்காலடி நம்பினோம் என்றுமே
புனிதரும் போற்றிடும் எங்கள் புண்ணிய சீலா --உனது
புகழினைப் பாடிட நாங்கள் புண்ணியம் செய்தோம்
இனிவரும் நாட்களில் என்றுமே நினைப்போம் --இங்கே
இழந்தவை எல்லாம் எங்களுக்கே சேரும்
தனியாய் நடனம் ஆடினாய் தில்லையில் --முடிவில்
இறைவியை நீதான் அன்றே வென்றனை
காலினைத் தூக்கியே ஆடிடும் தெய்வமே --உனது
கண்களைத் திறந்து இன்முகம் காட்டுமே
நாளிது இன்றே நன்மைகள் கிடைக்கும் --அருமை
நாயகன் நினைத்தால் நல்லதே நடக்கும்
சிவமெனச் சொன்னால் பயமினி இல்லையே --உன்
சீரடி தொட்டால் துன்பங்கள் விலகிடும்
பரம சிவமே எங்கள் பார்வதி நாதா --உமையே
பணிந்தோம் தொழுதோம் நீயும் பதமருள்வாயே
இணையடி நினைத்தாலோ இன்பங்கள் நிறையும்
மண்ணகம் செழித்திட மனம் கனிவாயே --நீயிங்கு
மழைதனைப் பொழிந்திட மாநிலம் செழிக்கும்
கனி தரும் இனிமை உனது கருணை அன்றோ --நற்
கதி பெற உன்காலடி நம்பினோம் என்றுமே
புனிதரும் போற்றிடும் எங்கள் புண்ணிய சீலா --உனது
புகழினைப் பாடிட நாங்கள் புண்ணியம் செய்தோம்
இனிவரும் நாட்களில் என்றுமே நினைப்போம் --இங்கே
இழந்தவை எல்லாம் எங்களுக்கே சேரும்
தனியாய் நடனம் ஆடினாய் தில்லையில் --முடிவில்
இறைவியை நீதான் அன்றே வென்றனை
காலினைத் தூக்கியே ஆடிடும் தெய்வமே --உனது
கண்களைத் திறந்து இன்முகம் காட்டுமே
நாளிது இன்றே நன்மைகள் கிடைக்கும் --அருமை
நாயகன் நினைத்தால் நல்லதே நடக்கும்
சிவமெனச் சொன்னால் பயமினி இல்லையே --உன்
சீரடி தொட்டால் துன்பங்கள் விலகிடும்
பரம சிவமே எங்கள் பார்வதி நாதா --உமையே
பணிந்தோம் தொழுதோம் நீயும் பதமருள்வாயே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக