வெள்ளி, 4 மே, 2018

கனி 413

 கனியாய்  இருந்தேன்  கடித்து  தின்றாய் -என்
காதல்  வாசலை  கள்வனே  திறந்தாய்
துணையாய்  நினைத்துமே  தோளினில்  சாய்ந்தேன் -இந்த
தோகை  மயிலும்  உன்னிடம்  சுகமும்  கண்டேன்  (கனியாய் )

பல நாள்  கழிந்தும்  என்  பதி முகம்   காணேன் -ஒரு
பத்து  மாசத்தில்  உரிய  பதிலும்  கிடைக்கும்
உள்ளம்  நினைத்தே  உருகியே  தவிக்கும் -என்
உயிரின் உயிரே  உன்மனம்  கல்லோ  (கனியாய் )

தனியாய்  இருந்தேன்  சுமையைக்  கொடுத்தாய் -ஒரு
தாயாய்  என்னையும்  மாற்றியே  வைத்தாய்
கருணை  இல்லையோ  என் கணவனே  சொல்லு -நான்
கவலையில்  அழுகிறேன்  காதலால்   அள்ளு  (கனியாய் )

உற்றார்  உறவுகள்   வக்கனை  பேசுமே -நான்
உன்னிடம்  இருந்தால்  உலகையே  வெல்லுவேன்
தூற்றுவோர் தலை குனிந்திட  துணைவனே  வருக -இந்த
துடி  இடை  தவிப்பது  என் தோழனே  அறிந்திடு  (கனியாய் )

வந்தால்  மட்டும்  நான்  வளமாய்  இருப்பேன் -நீ
வருவாய்  என்றே  எந்நாள்  நினைப்பேன்
சிந்தும்  கண்ணீர்  இந்த  ஜெகமெ  அறியும் -இனியும்
திரும்பிட  மறுத்தால்  என்னுடல்  மறையும்  (கனியாய் )

மறைவாக  வசிப்பவர்க்கு  மனதும்  எதற்கு -என்றும்
மகிழ்வாய்   பெண்ணிடம்  குடும்பம்   நடத்து
நிறைவாய்  வாழ்ந்திட  நீயிங்கே  வருக -எனது
நெஞ்சம்  மகிழ்ந்திட  நீயும்  நிஜமாய்  வருகவே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக