கனியாய் இருந்தேன் கடித்து தின்றாய் -என்
காதல் வாசலை கள்வனே திறந்தாய்
துணையாய் நினைத்துமே தோளினில் சாய்ந்தேன் -இந்த
தோகை மயிலும் உன்னிடம் சுகமும் கண்டேன் (கனியாய் )
பல நாள் கழிந்தும் என் பதி முகம் காணேன் -ஒரு
பத்து மாசத்தில் உரிய பதிலும் கிடைக்கும்
உள்ளம் நினைத்தே உருகியே தவிக்கும் -என்
உயிரின் உயிரே உன்மனம் கல்லோ (கனியாய் )
தனியாய் இருந்தேன் சுமையைக் கொடுத்தாய் -ஒரு
தாயாய் என்னையும் மாற்றியே வைத்தாய்
கருணை இல்லையோ என் கணவனே சொல்லு -நான்
கவலையில் அழுகிறேன் காதலால் அள்ளு (கனியாய் )
உற்றார் உறவுகள் வக்கனை பேசுமே -நான்
உன்னிடம் இருந்தால் உலகையே வெல்லுவேன்
தூற்றுவோர் தலை குனிந்திட துணைவனே வருக -இந்த
துடி இடை தவிப்பது என் தோழனே அறிந்திடு (கனியாய் )
வந்தால் மட்டும் நான் வளமாய் இருப்பேன் -நீ
வருவாய் என்றே எந்நாள் நினைப்பேன்
சிந்தும் கண்ணீர் இந்த ஜெகமெ அறியும் -இனியும்
திரும்பிட மறுத்தால் என்னுடல் மறையும் (கனியாய் )
மறைவாக வசிப்பவர்க்கு மனதும் எதற்கு -என்றும்
மகிழ்வாய் பெண்ணிடம் குடும்பம் நடத்து
நிறைவாய் வாழ்ந்திட நீயிங்கே வருக -எனது
நெஞ்சம் மகிழ்ந்திட நீயும் நிஜமாய் வருகவே
காதல் வாசலை கள்வனே திறந்தாய்
துணையாய் நினைத்துமே தோளினில் சாய்ந்தேன் -இந்த
தோகை மயிலும் உன்னிடம் சுகமும் கண்டேன் (கனியாய் )
பல நாள் கழிந்தும் என் பதி முகம் காணேன் -ஒரு
பத்து மாசத்தில் உரிய பதிலும் கிடைக்கும்
உள்ளம் நினைத்தே உருகியே தவிக்கும் -என்
உயிரின் உயிரே உன்மனம் கல்லோ (கனியாய் )
தனியாய் இருந்தேன் சுமையைக் கொடுத்தாய் -ஒரு
தாயாய் என்னையும் மாற்றியே வைத்தாய்
கருணை இல்லையோ என் கணவனே சொல்லு -நான்
கவலையில் அழுகிறேன் காதலால் அள்ளு (கனியாய் )
உற்றார் உறவுகள் வக்கனை பேசுமே -நான்
உன்னிடம் இருந்தால் உலகையே வெல்லுவேன்
தூற்றுவோர் தலை குனிந்திட துணைவனே வருக -இந்த
துடி இடை தவிப்பது என் தோழனே அறிந்திடு (கனியாய் )
வந்தால் மட்டும் நான் வளமாய் இருப்பேன் -நீ
வருவாய் என்றே எந்நாள் நினைப்பேன்
சிந்தும் கண்ணீர் இந்த ஜெகமெ அறியும் -இனியும்
திரும்பிட மறுத்தால் என்னுடல் மறையும் (கனியாய் )
மறைவாக வசிப்பவர்க்கு மனதும் எதற்கு -என்றும்
மகிழ்வாய் பெண்ணிடம் குடும்பம் நடத்து
நிறைவாய் வாழ்ந்திட நீயிங்கே வருக -எனது
நெஞ்சம் மகிழ்ந்திட நீயும் நிஜமாய் வருகவே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக