வெள்ளி, 25 மே, 2018

சொர்க்கம் 455

 நேரில்  வந்தாய்  என் நெஞ்சில்  அணைத்தேன் --என்னை
வாரியே  இணைத்தாய்  எனக்கு   வாழ்வும்  கொடுத்தாய்
ஊரில்  என்னையே  உயர்வாய்  நினைத்தார் --நானும்
உன்னால்  அன்றே   உறவுகள்  இழந்தேன்

காயும்  நிலவும்  எனக்கு  கசப்பாய்   தெரியும் --என்
கண்ணா  உன் தோள்  கரும்பாய்  இனிக்கும்
பாயும்  புலியாய்  பதுங்கிப்  பாய்ந்தாய் --உனை
பார்த்திட  ஏங்கும்  புது  பதவி யை க்  கொடுத்தாய்

காலம்  மாறும்  என்கண்ணீர்  பெருகும் --உனது
கையால்  துடைத்திட  நல்ல  காலமும்  வருமோ
நாளும்  நல்லதாய்  நாளையே  வருமோ --எனது
நண்பரே  நலமா   நன்றாய்  வாழ்வாய்

அரசும் வேம்பும்  அருகே  இருக்கும் --என்
அன்பா  நீயில்லையேல்  அபலை  துடிக்கும்
முரசாய்  ஒலிப்பாய்  என்மோகம்  தணிப்பாய் --எனது
முகமே  மலர  கண் முன்னே  நீ வருவாய்

உறவாய்  இருந்து  ஒருவர்  ஆனோம் --உன்னை
உயிராய் மதித்து  உள்ளம்  கொடுத்தேன்
மறைவாய்  போனாய்  இள மங்கை  தவித்தேன் --எனக்கு
மாறன்  அம்புகள்  மயக்கம்  தருதே

எனோ  இங்கே  எதற்கோ  மௌனம் --என்
இறைவா  ஏங்கினேன்  எல்லாம்  நினைத்தே
வீணாய்ப்  போனேன் என்னை விரகம் கொல்லுமே --நீயும்
விரைவாய்  வந்தால்  சொர்க்கம்  திறக்கும்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக