நேரில் வந்தாய் என் நெஞ்சில் அணைத்தேன் --என்னை
வாரியே இணைத்தாய் எனக்கு வாழ்வும் கொடுத்தாய்
ஊரில் என்னையே உயர்வாய் நினைத்தார் --நானும்
உன்னால் அன்றே உறவுகள் இழந்தேன்
காயும் நிலவும் எனக்கு கசப்பாய் தெரியும் --என்
கண்ணா உன் தோள் கரும்பாய் இனிக்கும்
பாயும் புலியாய் பதுங்கிப் பாய்ந்தாய் --உனை
பார்த்திட ஏங்கும் புது பதவி யை க் கொடுத்தாய்
காலம் மாறும் என்கண்ணீர் பெருகும் --உனது
கையால் துடைத்திட நல்ல காலமும் வருமோ
நாளும் நல்லதாய் நாளையே வருமோ --எனது
நண்பரே நலமா நன்றாய் வாழ்வாய்
அரசும் வேம்பும் அருகே இருக்கும் --என்
அன்பா நீயில்லையேல் அபலை துடிக்கும்
முரசாய் ஒலிப்பாய் என்மோகம் தணிப்பாய் --எனது
முகமே மலர கண் முன்னே நீ வருவாய்
உறவாய் இருந்து ஒருவர் ஆனோம் --உன்னை
உயிராய் மதித்து உள்ளம் கொடுத்தேன்
மறைவாய் போனாய் இள மங்கை தவித்தேன் --எனக்கு
மாறன் அம்புகள் மயக்கம் தருதே
எனோ இங்கே எதற்கோ மௌனம் --என்
இறைவா ஏங்கினேன் எல்லாம் நினைத்தே
வீணாய்ப் போனேன் என்னை விரகம் கொல்லுமே --நீயும்
விரைவாய் வந்தால் சொர்க்கம் திறக்கும்
வாரியே இணைத்தாய் எனக்கு வாழ்வும் கொடுத்தாய்
ஊரில் என்னையே உயர்வாய் நினைத்தார் --நானும்
உன்னால் அன்றே உறவுகள் இழந்தேன்
காயும் நிலவும் எனக்கு கசப்பாய் தெரியும் --என்
கண்ணா உன் தோள் கரும்பாய் இனிக்கும்
பாயும் புலியாய் பதுங்கிப் பாய்ந்தாய் --உனை
பார்த்திட ஏங்கும் புது பதவி யை க் கொடுத்தாய்
காலம் மாறும் என்கண்ணீர் பெருகும் --உனது
கையால் துடைத்திட நல்ல காலமும் வருமோ
நாளும் நல்லதாய் நாளையே வருமோ --எனது
நண்பரே நலமா நன்றாய் வாழ்வாய்
அரசும் வேம்பும் அருகே இருக்கும் --என்
அன்பா நீயில்லையேல் அபலை துடிக்கும்
முரசாய் ஒலிப்பாய் என்மோகம் தணிப்பாய் --எனது
முகமே மலர கண் முன்னே நீ வருவாய்
உறவாய் இருந்து ஒருவர் ஆனோம் --உன்னை
உயிராய் மதித்து உள்ளம் கொடுத்தேன்
மறைவாய் போனாய் இள மங்கை தவித்தேன் --எனக்கு
மாறன் அம்புகள் மயக்கம் தருதே
எனோ இங்கே எதற்கோ மௌனம் --என்
இறைவா ஏங்கினேன் எல்லாம் நினைத்தே
வீணாய்ப் போனேன் என்னை விரகம் கொல்லுமே --நீயும்
விரைவாய் வந்தால் சொர்க்கம் திறக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக