புதன், 16 மே, 2018

சதாசிவம் 441

திங்களை   சூடிய  செம்மலும்  நீயே --இனிய
தேவாரப்  பொருளே  திகட்டாத  தேனே
தங்கம் நீயே  தாமரை  மலரே  --உமது
தாளினைப்  பணிவோம்  துணையென  வருவாய்

ஆதியும்  நீயே  அந்தமும்  நீயே --தமிழில்
அடியார்  பாடிடும்  சந்தமும்  நீயே
சோதியே  சுடரே  சுந்தர  வடிவே --வரும்
சோகங்கள் போக்கி  சுகமதை  தருவாய்

நீரும் நீயே  நெருப்பும்  நீயே --உன்னை
நினைந்தோர்  வாழ்ந்திடப்  பொறுப்பும்  நீயே
கோரும்  அடியவர்  குறைகளைக்  களைவாய் -நின்
கோல அழகினில்  குளிரும்  எங்கள்  மனங்களே

சடையனே  சதா சிவமே  சகலமும்  தருவாய் --உனை
சரணம்   அடைந்தவர்  சாஸ்வதம்  பெறுவார்
விடைமேலேறி  வினைகளை  அழிப்பாய் --நான்கு
வேதங்கள்  போற்றிடும்  விமலனும்  நீயே

மகனை  குருவாய்  மதித்த  மகாதேவனே -=எமது
மன இருள்  போக்கி  மகிழ்ச்சியை  தருவாய்
இக  பரம்  நல்கிடும்  இன்னுயிர்த்  தலைவா --இங்கே
என்றும்  நலம்  பெற  நிந்தனைப்  பணிவோம்

சிவனை  மறந்தவர்  உலகில்  ஜெயிப்பதும்  இல்லை --உன்னை
சிந்தையில்  நினைத்தவர்  தோற்றதும்  இல்லை
தவததோர்  போற்றிடும்  எங்கள்  தாயு  மானவனே --நாங்கள்
தமிழால்  வணங்குவோம்  தண்ணருள்  பொழிவாய்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக