திங்களை சூடிய செம்மலும் நீயே --இனிய
தேவாரப் பொருளே திகட்டாத தேனே
தங்கம் நீயே தாமரை மலரே --உமது
தாளினைப் பணிவோம் துணையென வருவாய்
ஆதியும் நீயே அந்தமும் நீயே --தமிழில்
அடியார் பாடிடும் சந்தமும் நீயே
சோதியே சுடரே சுந்தர வடிவே --வரும்
சோகங்கள் போக்கி சுகமதை தருவாய்
நீரும் நீயே நெருப்பும் நீயே --உன்னை
நினைந்தோர் வாழ்ந்திடப் பொறுப்பும் நீயே
கோரும் அடியவர் குறைகளைக் களைவாய் -நின்
கோல அழகினில் குளிரும் எங்கள் மனங்களே
சடையனே சதா சிவமே சகலமும் தருவாய் --உனை
சரணம் அடைந்தவர் சாஸ்வதம் பெறுவார்
விடைமேலேறி வினைகளை அழிப்பாய் --நான்கு
வேதங்கள் போற்றிடும் விமலனும் நீயே
மகனை குருவாய் மதித்த மகாதேவனே -=எமது
மன இருள் போக்கி மகிழ்ச்சியை தருவாய்
இக பரம் நல்கிடும் இன்னுயிர்த் தலைவா --இங்கே
என்றும் நலம் பெற நிந்தனைப் பணிவோம்
சிவனை மறந்தவர் உலகில் ஜெயிப்பதும் இல்லை --உன்னை
சிந்தையில் நினைத்தவர் தோற்றதும் இல்லை
தவததோர் போற்றிடும் எங்கள் தாயு மானவனே --நாங்கள்
தமிழால் வணங்குவோம் தண்ணருள் பொழிவாய்
தேவாரப் பொருளே திகட்டாத தேனே
தங்கம் நீயே தாமரை மலரே --உமது
தாளினைப் பணிவோம் துணையென வருவாய்
ஆதியும் நீயே அந்தமும் நீயே --தமிழில்
அடியார் பாடிடும் சந்தமும் நீயே
சோதியே சுடரே சுந்தர வடிவே --வரும்
சோகங்கள் போக்கி சுகமதை தருவாய்
நீரும் நீயே நெருப்பும் நீயே --உன்னை
நினைந்தோர் வாழ்ந்திடப் பொறுப்பும் நீயே
கோரும் அடியவர் குறைகளைக் களைவாய் -நின்
கோல அழகினில் குளிரும் எங்கள் மனங்களே
சடையனே சதா சிவமே சகலமும் தருவாய் --உனை
சரணம் அடைந்தவர் சாஸ்வதம் பெறுவார்
விடைமேலேறி வினைகளை அழிப்பாய் --நான்கு
வேதங்கள் போற்றிடும் விமலனும் நீயே
மகனை குருவாய் மதித்த மகாதேவனே -=எமது
மன இருள் போக்கி மகிழ்ச்சியை தருவாய்
இக பரம் நல்கிடும் இன்னுயிர்த் தலைவா --இங்கே
என்றும் நலம் பெற நிந்தனைப் பணிவோம்
சிவனை மறந்தவர் உலகில் ஜெயிப்பதும் இல்லை --உன்னை
சிந்தையில் நினைத்தவர் தோற்றதும் இல்லை
தவததோர் போற்றிடும் எங்கள் தாயு மானவனே --நாங்கள்
தமிழால் வணங்குவோம் தண்ணருள் பொழிவாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக