சமயபுரம் மாரி எங்கள் சங்கரியே வாருமம்மா --நாங்க
அபய கரம் நீட்டுகிறோம் ஆதரிக்க வேண்டுகிறோம்
வேப்பிலையைக் கையில் ஏந்தி விரைந்து நீ வருவாயம்மா --வரும்
வினைகளைத் தீர்த்திடவே வேதவல்லி வாருமம்மா (சமயபுரம் )
மண்ணில் மாரி பொழிவதற்கு மனமிரங்கி வாருமம்மா --ஏழை
மக்கள் நலம் பெறுவதற்கு மாதா நீ வரவேணும்
உந்தன் மனமிளகி உதவி செய்ய வந்திடம்மா -எங்க
உத்தமி பத்தினியே உமையெனும் திரு மகளே (சமயபுரம் )
வாசலில் நிற்கிறோம் வந்துவிட மனமில்லையோ --என்றும்
வல்லமை கொண்டவளே வாழ்வரசி பொன்மகளே
மோசமெனும் செயல்களை முன்வந்து அழிப்பவளே --நீ
ஏழை மானம் காப்பதனால் எங்கள் குல நாயகியே (சமயபுரம் )
வேம்பு மரத்தடியில் வித்தைகள் காட்டுபவளே --இங்கே
ஓங்கார நாயகியே உலகளந்தோன் சோதரியே
பாம்பு குடை பிடிக்க பவனியாய் வருபவளே --அன்பு
பார்வதியே மலை மகளே பரசிவன் துணைவியே (சமயபுரம் )
யாரும் கடன் வைத்தாலும் மாரி கடன் கூடாது --இதனை
மறந்து போனவர்க்கு மலையளவு வரும் தீது
ஊரும் உலகமும் உன்னருளால் செழிக்குமம்மா --நீயும்
ஒய்யார நடை நடந்து உயிர்கள் காத்திட வாருமம்மா (சமயபுரம்)
சித்திரை முதல் செவ்வாயில் உனது சிங்காரத் தேர் வருமே --உலகில்
பத்தரை மாற்றுப் பசுந்தங்கம் நீயல்லவோ
இத்தரையில் வாழும் எங்களைக் காத்திடம்மா --அந்த
ஈசனார் மனங்குளிர ஈஸ்வரியே வாருமம்மா (சமயபுரம் )
அபய கரம் நீட்டுகிறோம் ஆதரிக்க வேண்டுகிறோம்
வேப்பிலையைக் கையில் ஏந்தி விரைந்து நீ வருவாயம்மா --வரும்
வினைகளைத் தீர்த்திடவே வேதவல்லி வாருமம்மா (சமயபுரம் )
மண்ணில் மாரி பொழிவதற்கு மனமிரங்கி வாருமம்மா --ஏழை
மக்கள் நலம் பெறுவதற்கு மாதா நீ வரவேணும்
உந்தன் மனமிளகி உதவி செய்ய வந்திடம்மா -எங்க
உத்தமி பத்தினியே உமையெனும் திரு மகளே (சமயபுரம் )
வாசலில் நிற்கிறோம் வந்துவிட மனமில்லையோ --என்றும்
வல்லமை கொண்டவளே வாழ்வரசி பொன்மகளே
மோசமெனும் செயல்களை முன்வந்து அழிப்பவளே --நீ
ஏழை மானம் காப்பதனால் எங்கள் குல நாயகியே (சமயபுரம் )
வேம்பு மரத்தடியில் வித்தைகள் காட்டுபவளே --இங்கே
ஓங்கார நாயகியே உலகளந்தோன் சோதரியே
பாம்பு குடை பிடிக்க பவனியாய் வருபவளே --அன்பு
பார்வதியே மலை மகளே பரசிவன் துணைவியே (சமயபுரம் )
யாரும் கடன் வைத்தாலும் மாரி கடன் கூடாது --இதனை
மறந்து போனவர்க்கு மலையளவு வரும் தீது
ஊரும் உலகமும் உன்னருளால் செழிக்குமம்மா --நீயும்
ஒய்யார நடை நடந்து உயிர்கள் காத்திட வாருமம்மா (சமயபுரம்)
சித்திரை முதல் செவ்வாயில் உனது சிங்காரத் தேர் வருமே --உலகில்
பத்தரை மாற்றுப் பசுந்தங்கம் நீயல்லவோ
இத்தரையில் வாழும் எங்களைக் காத்திடம்மா --அந்த
ஈசனார் மனங்குளிர ஈஸ்வரியே வாருமம்மா (சமயபுரம் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக